Thursday 17 June 2010

பிரித்தானியப் பாராளமன்றத்தில் இலங்கைக்கு பேரிடி


பிரித்தானியப் பாராளமன்றில் நேற்று இலங்கை தொடர்பான ஒரு விவாதம் நடைபெற்றது. அது இலங்கை அரசிற்கு பேரிடியாகவே அமைந்தது. தொழிற் கட்சி அரசு பதவி இழந்த பின் பிரித்தானிய நிலைப்பாடு தமக்கு சாதகமாகவே அமையும் என்று நம்பி இருந்த இலங்கைக்கு புதிய கூட்டணி அரசு தாம் இலங்கை தொடர்பாக தொழிற் கட்சியின் கொள்கையையே கடைப்பிடிக்கப் போவதாக புதிய அரசின் சார்பில் தெரிவித்தமை பேரிடியாகவே அமையும். இலங்கை அரசின் நண்பராகக் கருதப்படும் லியோம் பொக்ஸ் அவர்கள் இலங்கை தொடர்பாக கொள்கையைத் தீர்மானிக்கப் போவதில்லை என்றும் தானே தீர்மானிக்கப் போவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹெக் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார். சிபோன் மக்டொனா(Siobhain McDonagh) அவர்களின் வேண்டுதலின் பேரில் நடந்த தனிநபர் விவாதத்தின் போதே இக்கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன.

போர் குற்றத்தை மறைக்க சீன நிறுவனம்.
இலங்கையில் நடந்த போரின்போது இழைக்கப் பட்ட போர் குற்றங்களுக்கான சாட்சியங்களை மறைப்பதற்கு சீன நிறுவனம் ஒன்றின் உதவியை இலங்கை அரசு பெற்றுக் கொள்ளவிருப்பதாக பாராளமன்ற உறுப்பினர் கீத் வாஸ் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையில் பொது நலவாய நாடுகளின் மாநாடு நடத்தப் படுவதை தாம் எதிர்ப்பதாகவும் ஜிஎஸ்பி+ வர்த்தகச் சலுகை இலங்கைக்கு வழங்கப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் ஆளும் அரசு தெரிவித்தமை இலங்கைக்கு பேரிடியாக அமையும்.

நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்துடன் பேசப்படும்
வேறு ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் மக்களாட்சி முறைப்படி அமைக்கப் பட்ட நாடுகடந்த அரசுடன் பேச்சு வார்த்தை நடாத்தலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுவும் நாடு கடந்த தமிழீழ அரசை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் காட்ட முயலும் இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும்.

பிரித்தானிய அரசை தமிழ் மக்கள் தம்பக்கம் இழுக்க இன்னும் பல முயற்ச்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

3 comments:

AkashSankar said...

தமிழா... இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறப்போகிறாய்...

Anonymous said...

பிரித்தானியா வாழ் தமிழர்களின் தொடர் முயற்ச்சிகளுக்கு கிடைத்த வெற்றியின் முதற்படி..

VELU.G said...

தமிழர் ஒற்றுமை இன்னும் மேம்பட வேண்டும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...