Monday 14 June 2010

சித்தணித் தண்டவாளத் தகர்ப்பு கொழும்புத் திரைப்பட விழாத் தோல்வியின் எதிரொலி?


கொழும்பின் நடந்த இந்திய உலகத் திரைப்பட விழாவை தென்னக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்து அதை தோல்வியில் முடிவடையச் செய்தமை ஆரிய சக்திகளையும் தமிழ்நாட்டில் உள்ள சிங்களக் கைக்கூலிகளையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கும்.
தமிழ்த் தேசியவாதத்திற்கு இந்தியாவில் ஆதரவு கூடி விடுமா என்ற கவலை இவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும்.

சென்னை வழியாக மும்பை செல்லும் சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை ஜூன் 12ம் திகதி அதிகாலை 2.15 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி என்ற பகுதியில் ரயில் தண்டவாளம் தகர்கப்பட்டடது. இதனால் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

பாய்ந்தெழுந்த பார்பன ஊடகங்கள்
தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்க முன்னரே "விடுதலைப் புலிகள் கைவரிசை" என்று பார்பன ஊடகங்கங்கள் குரைக்கத் தொடங்கிவிட்டன. ஏன் இந்த அவசரம்? முன்கூட்டியே செய்தி எப்படி இருக்கவேண்டும் என்று திட்டமிடப்பட்டதா?

தமது ஆயுதங்கள் மௌனிப்பதாக அறிவித்த பின்கடந்த ஒரு வருடமாக இலங்கையில் எந்த தாக்குதலும் நடத்தாத விடுதலைப் புலிகள் இந்தத் தண்டவாளத் தகர்ப்பை ஏன் செய்ய வேண்டும்?

தமிழினக் கொலையாளியாக தமிழர்கள் குற்றம் சாட்டும் மஹிந்த ராஜபக்சவிற்கு டில்லியில் செங்கம்பள வரவேற்புக் கொடுத்த பின் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டதா?



இந்தியத் திரைப்பட விழாவை தென்னக கலைஞர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்ததால் அது படுதோல்வியில் முடிவடைந்ததுடன் சிங்கள மக்களுக்கு இந்தியா மேல் இருக்கும் கசப்புணர்ச்சியையும் வளர்த்தது. தமிழர்கள் ஒன்றானால் பகைவர்கள் அழிவர் என்ற பாரதிதாசன் கூற்று உண்மையாகலாம் என்று இந்தியாவின் உளவுத் துறையும் தமிழ்நாட்டில் உள்ள சிங்களக் கைக்கூலிகளும் நன்கு அறிவர். இதற்கு ஒரு தண்டவாளத் தகர்ப்பு நாடகம் பெருதும் உதவி செய்யுமா?

இத் தண்டவாளத் தகர்ப்பைத் தொடர்ந்து இத்தாலிச் சனியாளின் அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்தது ஏன்?

இந்திய உளவுத் துறை ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அதிகரிக்கும் போது இந்திய உளவுத் துறை இந்த மாதிரியான சதி நடவடிக்கைகளில் இப்படி முன்னரும் ஈடுபட்டது என தமிழின உணர்வாளர்கள் கருத்துத் தெர்விக்கின்றனர். இது மாதிரி சம்பவங்கள் இன்னும் நடக்குமா?

2 comments:

Anonymous said...

He never takes bath....

muthusivakumaran said...

ரத்தக் குளியல் செய்பவரின் மீது பருப்பு மணம் எப்படி வீசும்? கை குலுக்குபவர் மூக்கை சரி செய்து கொள்ள வேண்டும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...