Tuesday 18 May 2010

சரணடைய வந்தோரை சித்திரவதை செய்து கொன்றோம் - இலங்கைப் படை அதிகாரி


சரணடைய வந்தோரைச் சித்திரவதை செய்து கொன்றோம் என்று சனல்-4 செய்தி தொலைக் காட்சிக்கு இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரியும் முன்னிலை சிப்பாயும் கூறியுள்ளனர்.

எல்லோரையும் கொல்லுங்கள்
தன் பெயர் குறிப்பிடப் படாத முன்னிலை இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் சனல்-4 தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் "எமது அதிகாரி எல்லோரையும் கொல்லுங்கள் என்று உத்தரவிட்டார், நான் எல்லோரையும் கொன்றோம்" என்றார். இராணுவ அதிகாரி சனல்-4 தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் சகலரையும் கொல்லும் உத்தரவு மேலிடத்தில் இருந்து வந்ததென்றார்.

சிறுவர்கள் உட்படப் பலர் கைகட்டிய நிலையில் கிடங்கொன்றில் இருக்க வைத்திருக்கும் படங்களை எடுத்த இலங்கை இராணுவத்தினர் எடுத்த புகைப்படங்களையும் சனல்-4 செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்பியது

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும் பத்திரிகைகள்மீதான அடக்கு முறைகளையும் எடுத்துக் கூறிய சனல்-4 செய்தித் தொலைக்காட்சி அரசை எதிர்ப்பது சுய மரணதண்டனைக்கு ஒப்பானது என்றும் எடுத்துக் காட்டியுள்ளது..

பிரபாகரன் மகனைக் கொன்றோம்.
தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் சரணடைய வந்த தலைவர் பிரபாகரனின் மகனை தகப்பனின் இருப்பிடம் பற்றி விசாரித்துவிட்டுக் கொன்றோம் என்றும் சனல்-4 செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இராணுவத்தினர் தெரிவித்தனர்.




http://link.brightcove.com/services/player/bcpid62612474001?bctid=86382573001

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...