Tuesday 18 May 2010
சரணடைய வந்தோரை சித்திரவதை செய்து கொன்றோம் - இலங்கைப் படை அதிகாரி
சரணடைய வந்தோரைச் சித்திரவதை செய்து கொன்றோம் என்று சனல்-4 செய்தி தொலைக் காட்சிக்கு இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரியும் முன்னிலை சிப்பாயும் கூறியுள்ளனர்.
எல்லோரையும் கொல்லுங்கள்
தன் பெயர் குறிப்பிடப் படாத முன்னிலை இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் சனல்-4 தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் "எமது அதிகாரி எல்லோரையும் கொல்லுங்கள் என்று உத்தரவிட்டார், நான் எல்லோரையும் கொன்றோம்" என்றார். இராணுவ அதிகாரி சனல்-4 தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் சகலரையும் கொல்லும் உத்தரவு மேலிடத்தில் இருந்து வந்ததென்றார்.
சிறுவர்கள் உட்படப் பலர் கைகட்டிய நிலையில் கிடங்கொன்றில் இருக்க வைத்திருக்கும் படங்களை எடுத்த இலங்கை இராணுவத்தினர் எடுத்த புகைப்படங்களையும் சனல்-4 செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்பியது
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும் பத்திரிகைகள்மீதான அடக்கு முறைகளையும் எடுத்துக் கூறிய சனல்-4 செய்தித் தொலைக்காட்சி அரசை எதிர்ப்பது சுய மரணதண்டனைக்கு ஒப்பானது என்றும் எடுத்துக் காட்டியுள்ளது..
பிரபாகரன் மகனைக் கொன்றோம்.
தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் சரணடைய வந்த தலைவர் பிரபாகரனின் மகனை தகப்பனின் இருப்பிடம் பற்றி விசாரித்துவிட்டுக் கொன்றோம் என்றும் சனல்-4 செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இராணுவத்தினர் தெரிவித்தனர்.
http://link.brightcove.com/services/player/bcpid62612474001?bctid=86382573001
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment