Monday 29 March 2010

இந்தியாவின் காய்(நாய்?) நகர்த்தல்!!!


இந்தியா இலங்கையில் செய்த சாதனைகளில் மிக முக்கியமானது ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதராஜப் பெருமாளை உயிருடன் பாதுகாப்பாக வைத்திருப்பதாகும்.

நேற்று ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதராஜப் பெருமாள் இலங்கைக்கு இவரது குடும்ப சமேதராக இலங்கைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளார். இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளும் இலங்கைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர். இந்தியக் கடற்படையின் பயிற்சிக் கப்பல் திருஷ்ணா இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்தக் காய் நாகர்த்தல்களும் நாய்நகர்த்தல்களும் எதற்காக?

இப்போது இலங்கையில் நடப்பது என்ன?
  • இந்திய வெளியுறவுச் செயலர் பிள்ளையானைச் சந்தித்துவிட்டுச் சென்றார். பிள்ளையான் குழுவினர் மற்ற அரசியல் கட்சிகளின் கூட்டங்களைத் தாக்கிக் குழப்பிவருகின்றனர்.
  • தமிழ்நாட்டு மீனவர்கள்மீது சிங்களக் கடற்படையினர் தாக்குதல்.
  • யாழ்பாணம் சாவகச்சேரி பகுதியில் காணாமல் போய் இருவாரங்களின் பின்னர் உடலமாக மீட்க்கப்பட்ட மாணவனது கொலையுடன் ஈபிடிபினருக்கு தொடர்பு உள்ளதாக முன்னாள் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச் சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
  • ஈபிடிபி என்னும் ஆயுதக் குழு வவுனியாவில் ஒரு இளைஞரை அடித்துக் கொலைசெய்துள்ளது.
தமிழ்த் தேசியப் போராட்டம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கு இவை மட்டும் போதாது. தமிழர்கள் 1980களில் இருந்தது போல் மீண்டும் பலகூறுகளாகப் பிரிந்து மோதிக் கொள்ள வேண்டும் என்பதே இந்திய உளவுத் துறையின் நோக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் பிரதான எதிரியான இந்தியாவை விட்டால் தமிழர்களுக்கு வேறு கதியில்லை என்ற நிலை ஏற்படும்.

3 comments:

Anonymous said...

கடைசித் தமிழன் இறக்கும்வரை இந்தியா அள்ளிவைத்துக் கொண்டே இருக்கும்...

Anonymous said...

இந்தியா இலங்கையில் தனக்குத் தானே குழிபறிக்கிறது....

Anonymous said...

நாய்க்கு நன்றி உண்டு...
நாய்களைக் கேவலப்படுத்தாதீர்கள்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...