Monday 8 February 2010

இலங்கையில் தை மாதத்தில் முடிந்த ஆடித் தள்ளுபடி


தமிழ்நட்டில் ஆடித் தள்ளுபடி என்று செய்யும் வியாபாரம் இலண்டனில் நீல புள்ளடித் தினம் என்று நடக்கும். கடைகள் சாதாரண விலையிலும் பார்க்கா அதிக விலை குறித்து முதலில் பொருட்கள விற்பனைக்கு வைக்கும். பின்பு ஒரு வியாழக்கிழமை நீலப் புள்ளடித் தினம் (Blue Cross Day) என்று அறிவிக்கும். வியாழக்கிழமைகளில்தான் மக்கள் கைகளில் அதிக பணம் இருக்கும். அன்று நீலப் புள்ளடி இட்ட பொருட்கள் வழமையான விலையிலும் பார்க்க 20% அல்லது அதற்கு மேல் குறைத்து விற்கப் படும். அத்தினம் நிறைய விற்பனை நடக்கும். மறுநாள் பொருட்கள் வழமையான விலைக்குத்தான் விற்கப்படும்.

இலங்கையிலும் தமிழ் மக்கள் மோசமான கெடுபிடிகளுக்கு 1972இல் இருந்து உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். சிங்களவனின் அடக்கு முறைகள் அட்டூழியங்கள் போதாது என்று ராஜீவ் காந்தி என்ற அரசியல் அறிவில்லாதவன் ஒரு சாத்தான் படைகளை அனுப்பி தமிழ் மக்கள் மீது மோசமான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். தமிழனுக்கு உதவ இந்தியா இருக்கிறது என்று பயந்து இருந்த சிங்களவன் தமிழனின் மிகமோசமான விரோதி இந்தியாதான் என்பதை உணர்ந்து கொண்டான். காந்தியின் பெயரைத் திருடி தம்முடன் இணைத்த கள்ளக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பேரினவாத ஆரியப் பேயான ராஜீவ் காந்தியின் நடவடிக்கைகளுக்குப் பிறகு சிங்களவர்கள் தமிழர்கள் மீதான கெடுபிடியை உச்சத்திற்கு எடுத்துச் சென்றனர். மூர்க்கமாக தமிழர்கள் சிங்களவன் முறைகளை எதிர்த்தபோது இந்தியா ஐரோப்பிய அமெரிக்க நாடுகளை வற்புறுத்தி தமிழர்கள் போராட்டம் ஒரு பயங்கரவாதம் என்று முத்திரை குத்தச் செய்தது. அதைத் தொடர்ந்து தமிழர்கள் போராட்டத்தை சர்வதேச சமூகம் என்னும் பன்னாட்டு ரவுடிக் கும்பல் ரவுண்டு கட்டித் தாக்கி மழுங்கடித்தது.

சிங்களவன் ராஜபக்ச தான் போரில் வென்றதாக மார்தட்டி தேர்தல் களத்தில் இறங்கினான். அவனுக்கு தமிழர்களின் வாக்கு தேவைப்பட்டது. தமிழர்களின் வாக்குகளை வேண்டி ஒரு "ஆடித் தள்ளுபடி" அல்லது "நீலப் புள்ளடித் தினம் (Blue Cross Day" அறிவித்தான். சில தமிழர்கள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழர்களுக்கு என இருந்த நடமாடும் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன, சோதனைச் சாவடிகள் நீக்கப் பட்டன. தேர்தல் முடிய கெடுபிடிகள் மீண்டும் முன்னரைவிட மோசமாக மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ் மக்கள்மீன்பிடிப்பதற்கான தடை இப்பொது முன்னைவிடமோசமாக அமூல்படுத்தப்படுகிறது.

கிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் இரண்டு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பபட்டுள்ளார்கள். இவர்களது உடலங்களை மக்கள் இனம்காட்டியுள்ளதுடன், உடலங்களை சிறீலங்கா காவல்துறையினர் எடுத்துசென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிளிநொச்சிப் பகுதியில் தமிழர்களை மீள் குடியேற்றாமல் தடுக்க செய்த பயமுறுத்தலா? அங்கு சிங்கள மயப் படுத்தி தமிழர்களின் நிலங்களைப் பறிக்கும் முயற்ச்சியா?

யாழ்ப்பாணத்தில் சிங்கள வர்த்தகர்கள் சட்டவிரோதமாக தெருக்களில் கடைகள் போட்டு வியாபாரம் செய்வதைத் சுட்டிக்காட்டி எழுதிய பத்திரிகை ஆசிரியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப் பட்டது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...