Friday 1 January 2010

2010: தமிழின விரோதிகளுக்கு பல அதிர்ச்சிகள் தரும்.


இன்று மலர்ந்த 2010 பல அதிர்ச்சிகளை தமிழின விரோதிகளுகுத் தரவிருக்கிறது.

ஆரியப் பேய்கள்
இலங்கையில் தமிழின ஒழிப்புப் போருக்கு உதவிய ஆரியப் பேய்களின் கள்ளத்தனம் 2010இல் அம்பலமாகும். சிங்களவர்களுக்கு பலவிதத்திலும் உதவிய ஆரியப் பேய்கள் தமது கள்ளத் தனம் தமிழர்களுக்கு தெரியாது என்று எண்ணியுள்ளனர். தமிழர்கள் இந்தியாவையே தமது முதல்தர துரோகியாக எண்ணத் தொடங்கிவிட்டனர். எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்க முடியாது.

இரசாயன ஆயுதப் பாவனை.
தமிழ்த்தேசிய போராட்டத்தை தடை செய்யப் பட்ட ஆயுதப் பாவனை மூலமாவே சிங்களவர்கள் தோற்கடித்தனர். தடை செய்யப் பட்ட ஆயுதம் பாவித்தமையும் அதை வழங்கிய நாடுகளின் குட்டும் 2010 இல் அம்பலமாகும்.

முடிந்தது என்று நினைத்தது தொடங்கும்
தமிழர்களின் தேசியப் போராட்டம் முடிந்து விட்டது என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் சிங்களவர்களுக்கும் துரோகிகளுக்கும் அதிர்ச்சி தரும் வகையில் தமிழர்களின் தேசியப் போராட்டம் வீறு கொண்டு 2010இல் எழும்.

போர் குற்றவாளிகள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பர்
2010இல் முக்கிய திருப்பமாக அமையவிருப்பது போர் குற்றவாளிகள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதே.

இந்தியா திணறும்
தமிழர்களின் விரோதியான இந்தியா இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது என்ற போர்வையில் இத்தாலிச் சனியனின் உத்தரவில் தமிழின இனக் கொலைக்குத் துணை போனது. 2010இல் இந்தியா தனது தேசிய ஒருமைப் பாட்டை பாதுகாக்க முடியாமல் திணறும். இந்தியா துண்டாடப் படுவதற்கான அடிப்படை 2010இல் உருவாகும்.

"ரவுண்டு கட்டித்" தாக்கிய ரவுடிக் கும்பல்
தமிழர்களை பல நாடுகள் ஒன்று கூடித் தாக்கி அவர்களின் உரிமைப் போராட்டத்தை பலவீனப் படுத்தின. அவர்கள்களது முகமூடி 2010இல் கிழியும். அவை எந்த் எந்த நாடுகள் என்பது வெளிச்சத்திற்கு வரும்.

தமிழ்த் தேசிய போராட்டம் உலக மயமாகும்.
இலங்கையில் தமிழினப் போராட்டம் ஒடுக்கப் பட்டு விட்டதாகக் கனவு கண்டு கொண்டிருப்போர்க்கு பேரதிர்ச்சியாக தமிழ்த் தேசிய போராட்டம் உலக மயமாகும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...