Saturday 28 November 2009

நீதிமன்றில் "சாகாத" பிரபாகரன்.


சென்னை தடா நிதிமன்றில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்கு வந்த போது அங்கு பிரபாகரனோ பொட்டு அம்மான் எனப் படும் சிவசங்கரோ இறந்து விட்டதாக அறிவிக்கப் படவில்லை. இருவர் மீதான வழக்குகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இருவரும் இறந்து விட்டதாக இலங்கை அரசின் சட்டமா அதிபர் திணைக்களம் கதிர்காமர் கொலைவழக்கில் கொழும்பு நீதிமன்றில் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் வழக்கில் இருந்து நீக்கப் பட்டனர். இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் வாய் மொழிமூலமான அறிக்கை மூலமாகவே இருவரும் இறந்து விட்டதாகத் தெரிவித்தது. இருவரும் இறந்தமைக்கான இறப்புச் சாட்சிப் பத்திரம் இலங்கை அரசின் பதிவாளர் திணைக்களத்தில் பதியப் படவில்லை. ஆனால் இலங்கைச் சட்டத்தைப் பொறுத்தவரை Court law - நீதிச் சட்டப் படி இருவரும் இறந்துவிட்டனர். ஆனால் இலங்கை அரசு இருவரும் இறந்துவிட்டதாக இந்தியாவிற்கு இது வரை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தியச் சட்டத்தில் ராஜீவ் காந்தி கொலைவழக்கை சித்திரபுத்திரனாரிடம் சமர்ப்பிக்க இடமில்லை.

இந்திய மத்திய அரசு அதிகாரிகள் மூடப் பட்ட உறையுள் ஒரு அறிக்கையை ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதி அனந்தகிருஷ்ணனிடம் சமர்பித்தனர். அந்த அறிக்கையில் உள்ளவை இரகசியமாகவே வைக்கப் பட்டுள்ளன.

வழக்கு அடுத்த ஆண்டு பெப்ரவரிவரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

ராஜீவ் கொலையை ஒரு இயக்கத்துடன் மட்டும் சம்பத்தப் படுத்தி விசாரிக்காமல் இதைப் பரந்த அளவில் பலகோணங்களில் விசாரிக்க வேண்டும் என்று 1999இல் ஜெயின் ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

புத்தளத்தில் மாவீரர் தினத்தை புலிகள் கொண்டாடினரா?

இலங்கை வான்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உழங்கு வானூர்தி (ஹெலிகொப்டர்) ஒன்று புத்தளம் மாவட்டத்தில் உள்ள துங்கிந்த பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இவ் விபத்தில் நான்கு விமானிகள் கொல்லப்பட்டனர்.

பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வான்படைத்தரப்பு தெரிவித்துள்ளது.ம்தொழில்நுட்ப பிரச்சினையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இரசியத் தயாரிப்பான இந்த எம். ஐ24 ரக உழங்கு வானூர்திகள் (ஹெலிகொப்டர்) ஆறு ஏற்கனவே விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்திப்பட்டுள்ளன.

Friday 27 November 2009

காணொளி- இலண்டன் மாவீரர் தினம்-09



பிரித்தானியாவில் பாரிய எக்செல் மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் எனப்படும் மாவீர் தினம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. பிரித்தானிய வாழ் தமிழின உணர்வாளர்கள் மீண்டும் ஒரு முறை தம்மால் பாரிய அளவில் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ய முடியும் என்று நிரூபித்துள்ளனர்.



50,000 பேர்வரை கொள்ளக்கூடிய மண்டபத்தில் ஆரிய-சிங்கள கூட்டமைப்பின் கைக்கூலிகளின் சதிகளையும் சவால்களையும் முறியடித்து சிறந்த முறையில் தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடு செய்யப் பட்டது. அங்கு பிரபாகரன் படமே அல்லது புலிக்கொடியோ இருக்கவில்லை.
மண்டபம் நிறைந்து வழிந்து மண்டபத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். வேலை நாள் பாடசாலைநாளாக இருந்தும் 60,000 மக்கள் அங்கு வந்தது மக்களுக்கு தமிழ்த்தேசியத்தில் உள்ள அதீத அக்கறையைப் பறைசாற்றியது.


சீமானின் உரை அங்கு காணொளியில் ஒளிபரப்பப் பட்ட போது பலத்த கரவொலி எழுந்தது. நேரில் நடக்குகம் உரைகளுக்கு கூட கிடைக்காத வரவேற்பும் பரபரப்பும் சீமானின் கணொளி உரைக்கு கிடைத்தது.








இந்தியச் சதியும் தமிழர் வாக்குரிமையும்.


இப்போது இலங்கையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிறது. இந்தியாவால் நிர்க்கதி ஆக்கப் பட்ட தமிழர்கள் கைகளில் உள்ளது அவர்கள் வாக்குரிமை அதை இந்தியா தனது சுயநலத்திற்காக பாவிக்க பல சதிகள் செய்கின்றது.

  • இலங்கையில் வாழும் தமிழர்களை ஜவகர்லால் நேரு இரண்டாகப் பிரித்தார்.
  • லால்பகதூர் சாஸ்த்திரி பதினைந்து இலட்சம் தமிழர்களை நாடற்றவர்கள் ஆக்கினார்.
  • இந்திரா காந்தி தமிழர்களுக்கு ஆயுதம் கொடுத்து சிங்களவர்களுடன் மோதவிட்டார்.
  • ராஜீவ் காந்தி அமைதிப் படை என்னும் கொலை வெறி நாய்களை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களைக் கொன்று குவித்தார்.
  • சோனியா காந்தி சிங்களவர்களுக்கு சகல உதவிகளையும் செய்து தமிழர்களை நிர்க்கதி ஆக்கினார்.


போர் முடிந்ததும் ஆறு மாதத்தில் முகாம்களில் சட்ட விரோதமாக தடுத்து வைத்திருப்போர் விடுவிக்கப் படுவார்கள் என்று பொய் முழக்கம் இட்ட இந்தியா இன்றுவரை 130,000 மேற்பட்டோர் இலங்கைக் கொடுங்கோல் அரசு தடுத்து வைத்திருப்பதை ஆதரிக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனக்கு தீர்வு காண இலங்கை எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இலங்கை இந்திய உறவு அமையும் என்று பொய் கூறிய இந்தியா இது வரை இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வுகாண் எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை.

போர் முடிந்த நிலையில் இந்தியாவை இப்போது இலங்கைக்கு பெரிதாகத் தேவைப் படாது. இலங்கைக்கு பண உதவி செய்ய சீன இருக்கிறது. இலங்கையில் தனது பிடியை ஏற்படுத்த பாவம் இந்தியா தமிழர்களின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த பல சதிகள் செய்கின்றது.

இலங்கையில் தமிழர்கள் தேர்தலில் வாக்களிப்பதால் அவர்கள் பிரச்சனைதீர்க்கப் படும் என்ற ஒரு நிலை இருக்குமாயின் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்றுதான் பொருள்படும். தமிழர்கள் தமக்குத் தேவையான அரசை வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்து தமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதுவரை காலமும் தமிழர்கள் பாராளமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிந்து எடுத்து வருகின்றனர். இவர்களால் எதையாவது சாதிக்க முடிந்ததா? இல்லை. அதுதான் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை சுயநிர்ணயம் இல்லை என்பதற்கான சான்று. மலையகத் தமிழர்கள் ஜே. ஆர் ஜயவர்த்தனேக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்ததால் அவர்கள் பிரச்சனை தீர்க்கப் பட்டதா? ஒரு சிலர்களுக்கு கண்துடைப்பு மந்திரிப் பதவி கிடைத்தது. அவ்வளவுதான். அதே வேளை யாழ்ப்பாண மாவட்டம் ஜே ஆருக்கு எதிராக வாக்களித்தது. யாழ் நூலகத்தை எரித்ததற்கான ஆத்திர வாக்களிப்பு அது. அதனால் அவர்களுக்கு சுதந்திரக் கட்சிதான் ஏதாவது செய்ததா?

கோபாலபுரத்தில் இருந்து ஒரு சாத்தான் வேதம் ஓதுயது. தமிழர்கள் கடந்த இலங்கைக் குடியரசுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே என்ற சிங்களவனுக்கு வாக்களித்திருந்தால் தமிழர்கள் நலமுடன் இருத்திருப்பார்களாம். அது அவரது டெல்லி எஜமானர்களின் உத்தரவுப்படி அவரி ஓதியது. ரணிலைப் பற்றியும் அவர் யாருடைய வாரிசு என்பதையும் அவர் தமிழர்களுக்கு என்ன செய்தார் அவர் என்ன செய்திருப்பான் என்பதை கோபாலபுரத்துச் சாத்தான் அறியாது. ஆனால் தமிழர்கள் அறிவார்கள். இப்போது ரணில் இந்திய விரோதி சரத் பொன்சேக்காவின் தலைமயின் கீழ் கூட்டுச் சேர்ந்து விட்டான். இப்போது டெல்லி என்ன உத்தரவை கோபாலபுரத்திற்கு இடப் போகிறது. இப்போது டெல்லிக்கு மஹிந்தத சரணம் கச்சாமியா? மஹிந்தவைப் போற்றி ஒரு கவிதை எழுதப் படுமா? டெல்லியின் சதிக்கு தமிழர்கள் பலியாகக் கூடாது.

சுயநிர்ணய உரிமை இல்லாத ஒரு இனம் தேர்தல் வாக்களிப்பு மூலம் எதையும் சாதிக்க முடியாது.

Thursday 26 November 2009

இந்தியாவின் களவு விரைவில் வெளிப்படும்.


கள்ளர்களுக்குள் சண்டை வந்தால் களவு வெளிப்படும். இலங்கையும் இந்தியாவும் இணைந்து போர் முனையில் நடப்பவற்றை வெளிவரவிடாமல் மறைத்து சகல மனிதாபிமான நியமங்களையும் சர்வதேச நியமங்களையும் மீறி போர் முனையில் அகப்பட்டவர்களுக்கு உணவு நீர் மற்றும் மருத்துவ வசதிகளை மறுத்து மருத்துவ மனைகள் மீது குண்டு மாரி பொழிந்து தமிழ் இனக் கொலை புரிந்தனர். இப்போது கள்ளர்கள் பிளவு பட்டு நிற்கிறார்கள். விரைவில் கள்ளர்களுக்கிடையிலான மோதல் தீவிரமடையும். கள்ளர்கள் இரு பிரிவாகியதால் இந்திய உளவுதுறை என்ன செய்வதென்று தெரியாமல் தலை முடியைப் பிய்த்துக் கொண்டு தவிக்கிறது.

ஓட்டைவாய ராஜபக்சே
மஹிந்த ராஜபக்சேயின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சே தான் ஒரு ஓட்டை வாயன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளான். உதயன் பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரனைக் கைது செய்து வைத்திருந்த வேளை அவருக்கு ஆதரவாக கதைப்பவர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் என்று கூறியவன். அது மட்டுமல்ல மருத்துவமனைகள் எல்லாம் குண்டு போட்டு அழிப்பதற்கான சட்டபூர்வமான இலக்குகள் என்று குரைத்தவன். இப்படிப் பட்ட ஆட்சியாளர்களுடந்தான் கேவலமான இந்தியா நட்புறவைப் பேணுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்கும் வேளையில் இந்த ஓட்டை வாயனிடம் இருந்து பல உண்மைகள் வெளிவரும். அங்கு இந்தியாவின் குட்டுக்கள் பல வெளிப்படும். எத்தனை இந்தியப் படையினர் இலங்கையில் போர்முனையில் இருந்து செயற்பட்டனர் போன்றவை எல்லாம் வெளிவரும்.

சரத் பொன்சேக்கா
இவன் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் செய்தி விரைவில் வெளிவரும். தவளையும் தன் வாயால் கெடும் என்பது போல சரணடைய வந்தவர்களைத் தான் கொன்ற உண்மையைச் சொல்லி சிக்கலில் அண்மையில் மாட்டிக் கொண்டவன் இவன். தேர்தல் களம் சூடு பிடிக்கும் போது தான் செய்த வீரப் பிரதாபங்களை இவன் வெளியிட வேண்டி வரும். அப்போது இன்னும் பல குட்டுக்கள் வெளிவரும். இந்த சரத் பொன்சேக்கா அரசியல் ஆதிக்கம் பெறுவதை இந்தியா விரும்பவில்லை. இவனுக்கு எதிராக இந்திய உளவுத்துறை செயற்படும் போது இவன் ஆத்திரமடைந்து இந்தியா சம்பந்தப்பட்ட போர் உண்மைகளை இவன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியிடுவான். இந்தியாவின் குட்டு உடைபடும்.

இந்திய உளவுத் துறை
இந்தியாவில் ஒரு போத்தல் மதுபானத்துடன் பல உண்மைகளை விலைக்கு வாங்கலாம். பத்திரிகைகள் இந்திய உளவுத்துறையிடமிருந்து தமது வியாபாரத்தைப் பெருக்க பல உண்மைகளை வெளியிடலாம். இந்திய அமைதிப் படையின் பல அட்டூழியங்கள் வெளிவந்ததை நாம் அறிவோம்.

முதலாம் கட்டம் ஆரம்பம்.
ராஜபக்சேக்களுக்கும் பொன்சேக்காவிற்கும் இடையிலான குட்டு உடைக்கும் போட்டியின் முதலாம் கட்டம் ஆரம்பித்து விட்டது:
போர் முடிந்ததும், ஜனாதிபதி ராஜபக்ச கிளிநொச்சி போக விரும்பினாராம். அதை இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிடமும் தெரிவித்தாராம்.

ஆனால் அந்த யோசனையை விட்டுவிடுமாறு ஜனாதிபதியிடம் கூறினாராம் பொன்சேகா. அதுமட்டுமல்ல கிளிநொச்சிக்கு ஜனாதிபதியுடன் வரவும் சரத் என்னும் "சூராயா"பயந்தாராம். போர் இன்னும் நடக்கிறது என்றும் கூறிததனது பயத்தை வெளிப்படுத்தினாராம் சரத் பொன்சேக்கா.

ஆனால் "வீரரான" ஜனாதிபதியோ, பொன்சேகாவுக்கு தைரியம் கூறினார். பயப்பட வேண்டாம். தைரியமாக என்னுடன் வாருங்கள் என்றும் கோரினார். இதையடுத்து வேறு வழியில்லாமல், தனது மனதில் இருந்த அச்சத்தை முழுமையாக விடாமல் அவர் அதிபருடன் செல்ல ஒப்புக் கொண்டார்.

இது ஆரம்பக் கட்டம் போகப் போக இன்னும் உள்ளது. காணத் தயாராகுங்கள்.

Wednesday 25 November 2009

கோபுரத்தில் நிர்வாண சல்லாபம்


பட்டப் பகலில் பிரபல கடைத் தொகுதிகள் இருக்கும் தெருவில் பலர் முன்னிலையில் நிர்வாணமாகச் ச்ல்லாபம் புரிந்தனர் இருவர்.

இது நடந்தது ஒஸ்ரேலியாவின் சிட்னி நகரில். அங்குள்ள பிரபல மணிக்கூண்டுக் கோபுரத்தின் சாளரத்தில் இந்த மானம் கெட்ட சம்பவம் நடந்துள்ளது.

இத்தகைய துணிச்சலும் சல்லாபம் புரிவதில் இடம்பாராமல் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்ட அந்த இருவரும் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவர்களை இனம் கண்டு அவர்களின் பேட்டியை வெளிவிடுவதற்கு பல பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆவலாக இருக்கின்றன.

இந்திய உளவும் விகடனின் அடுத்த சதிக் கட்டுரையும்


தொடர்ந்து பல புளுகுகளையும் பொய்களையும் அவிழ்த்து விடும் விகடன் குழுமத்து சஞ்சிகைகள் இப்போது ஒரு புதுக் கதையை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியாவின் துணையுடன் புலிகள் இனி போர்புரிவார்களாம். கட்டுரையைப் படிக்கும் போது இந்தியா இனித் தமிழர்கள் பக்கம். இனி புலிகளின் உற்ற நண்பர்கள் இந்தியாதான் என்ற எண்ணம் வருப்படி விகடன் தனது கட்டுரையை வரைந்துள்ளது.

ஜூனியர் விகடனில் வந்த இக்கட்டுரை இப்போதைய இலங்கை அரசியல் நிலைமைகளுக்கு இந்திய உளவுத் துறைக்கு என்ன தேவைப் படுகிறதோ அதைப் பிரதிபலிக்கிறது.

''போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது:
  1. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லை தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்.
  2. போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்.
  3. இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்.
  4. இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த நான்கு கோரிக்கைகள்.
இந்த நாலு கோரிக்கைகளுக்கும் இப்போது இலங்கை மறுப்புத் தெரிவித்து விட்டதாம் அதனால் இந்தியா மீண்டும் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து போர் ஆரம்பிக்கிறதாம்.

இந்த நாலும் சாதாரண வர்த்தக நலன் சார்ந்த கோரிக்கைகள். இவற்றுக்காகவா இந்தியா 125,000 அப்பாவிகளைக் கொன்று குவித்து முன்று இலட்சம் பேரை முகாம்களில் அடைத்து படுபாதகம் செய்தது? இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏன் 5வது கோரிக்கையாகத் தன்னும் இடம் பெறவில்லை? இந்த நாலு கோரிக்கைகளுக்காகவும் ஒரு இனக் கொலை புரிந்த அரசிற்கு துணை போன் இந்தியாவை எந்தத் தமிழன் மன்னிப்பான்? இதை ஏன் விகடன் சுட்டிக் காட்டவில்லை.

ஆக மொத்தத்தில் இலங்கையில் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருப்பதை இந்தியா விரும்புகிறது.

அக்கட்டுரையில் மேலும் தெரிவிப்பது:

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டாலர்களையும், நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டாலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா. அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு ராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு ராணுவத் தளத் தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப் பான 'ரா' மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.

தமிழர்களுக்கு எதிரான போர் முடியும் வரை தான் இலங்கை இந்தியாவுடன் நட்புப் பராட்டும் அதன் பின்பு இந்தியாவிற்கு "டாடா" காட்டிவிடும் என்பது எல்லோரும் உணர்ந்த உண்மை. இது எப்படி சிவ்சங்கர மேனனுக்கும் நாராயணனுக்கும் தெரியாமல் போனது. இந்திய வல்லாதிக்கம் சாதியக் கட்டமைப்பில் கட்டிய் எழுப்பப் பட்டு வருகிறது. இலங்கையில் சாதியத்தை ஒழித்து ஒரு தலைவன் உருவாகி விட்டதை விரும்பாததாலும் சோனியாகந்தியின் தனிப் பட்ட பழிவாங்கலுக்க்காகவும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்யது.

மேற்குறிப்பிட்ட நான்கு இந்திய சுயநலக் கோரிக்கைகளும் நிறைவேற்ற மறுப்பது ராஜபக்சே அரசு. இந்தியாவை ஏமாற்றியது ராஜபக்சே குடும்பம். ஆனால் இந்தியா வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேயைத்தானே ஆதரிக்க விருக்கிறது.

இந்தியாவிற்கு இலங்கையில் எந்தவிதமான பிடியும் இல்லை அதற்கு தமிழர்களின் ஒட்டு மொத்த வாக்குகளையும் ஒன்று திரட்டி இந்தியா சொல்பவர்களுக்குத்தான் தமிழர்கள் வாக்கு அளிப்பார்கள் என்ற நிலைய ஏறபடுத்த இந்திய உளவுத்துறை முயல்கிறது. இந்திய உளவுத் துறையின் முயற்ச்சிக்கு இணங்கவே ஜூனியர் விகடன் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது என்று நாம் நம்பலாம். இதற்குத்தான் இந்தியா மீண்டும் புலிகளுக்கு ஆயுதம் கொடுக்கப் போகிறது, இந்திய உதவியுடன் புலிகள் மீண்டும் எழுவார்கள் என்ற பொய்யை விகடன் அவிழ்த்து விடுகிறதா?

விகடனின் முந்திய சதிக்கட்டுரைகள் பற்றி எழுதியவை:

பொட்டு அம்மான் வருவாரா? அல்லது துட்டு அம்மன் வருவாளா?

விகடனுக்கும் இலங்கை அரசிற்கும் என்ன தொடர்பு?

Tuesday 24 November 2009

பிரபாகரன் வருவாரா இந்தியாவைக் காக்க?


இந்தியா இலங்கைக்கு தமிழ்த் தேசியத்தை பலவீனப் படுத்த பல உதவிகளுக் செய்தது. இந்தியா உதவியது சிங்களப் பேரின வாதிகளுக்கு. இதனால் சிங்களப் பேரினவாதிகள் இலங்கை அரசியலில் மாபெரும் சக்தியாக உருவாகிவிட்டனர். சிங்களப் பேரினவாதிகள் அடிப்படையில் இந்தியாவிற்கும் மேற்குலகிறகும் எதிரானவர்கள் என்பதோடு சீன சார்பானவர்கள். சிங்களப் பேரினவாதிகளை அமெரிக்கா சாதுரியமாக இரு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவைத் தன் வசமாக்கிவிட்டது. இதனால் இலங்கை அரசியலில் இந்தியாவிடம் எந்தத் துருப்புச் சீட்டும் இல்லை. ரணில் விக்கிரமசிங்கவை இந்தியாவிற்கு அழைத்தும் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி மஹிந்த ராஜபக்சேயுடனும் பேச்சு வார்த்தை நடாத்திப் பார்த்தது. இந்தியாவிற்கு சாதகமாக எதுவும் இல்லை. இதனால் கடைசியாக மீண்டும் தமிழர்களின் துணையை இந்தியா நாடியது. தமிழ் அரசியல் கட்சிகள் அனைவற்றையும் இனப் பிரச்சனைக்கு ஒரு பொது நிலைப் பாடும் பொதுத் தீர்வை முன்வைப்பதற்கும் என்ற போர்வையில் சுவிற்சிலாந்தில் உள்ள சூரிச் நகருக்கு அழைத்து ஒரு கூட்டத்தை நடத்தியது. அங்கு சென்ற தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஏமாற்றம். கூட்டம் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்பதிலும் பார்க்க இலங்கையில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லாத் தமிழ் பேசும் கட்சிகளும் யாரை ஆதரிப்பது என்பதில் இருந்தது. சிலர் இதனால் ஆத்திரமடைந்து கூட்ட நிகழ்ச்சி நிரலைக் கிழித்தெறிந்து கூச்சலிட்டனர். கூட்டம் குழப்பத்தில் முடிவடைந்து இந்தியா ஐயோ பாவம் என்ற நிலைக்குள்ளானது. இதனால் நாம் சொல்லுபவரைத் தான் தமிழர்கள் ஆதரிப்பார்கள் என்று சொல்லி இலங்கை அரசியலில் தானும் ஒரு சக்தி என்று காட்ட இந்தியா எடுத்த முயற்ச்சி படுதோல்வியில் முடிவடைந்தது. இலங்கையில் இறுகும் சீன அமெரிக்கப் பிடிகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் இந்தியா திணறுகிறது. இனக்கொலைப் போரில் தான் உதவுபவர்கள் தனது எதிரிகள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இந்தியா சிங்களப் பேரினவாதிகளுக்கு சகல உதவிகளையும் செய்தது. இனக் கொலைப் போரில் சிங்களவர்களுக்கு உதவி இந்தியா ஆப்பிழுத்த குரங்கானது.

தவிடு பொடியான் இந்தியாவின் மும்முனைப் போட்டிக் கனவுக் கோட்டை
இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு மும்முனைப் போட்டியை ஏற்படுத்தி அதில் ரணிலைத் தன்பக்கம் இழுக்கலாம் என்று கனவு கண்ட து இந்தியா. ஆனால் இப்போது ரணில்-சரத கூட்டணியில் ஜேவிபியும் இணைந்ததால் பாவம் இந்தியாவின் கனவு தவிடு பொடியானது.

தமிழர்கள் யாருக்கு வாக்களித்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை. கருணாவும் பிள்ளையானும் கிழக்கிற்கு என்ன செய்தனர்? ஆள்கடத்தலும் கொலையும்தான் அவர்கள் கணடது.

கோபாலபுரத்தில் நீலிக்கண்ணீர்.
ரணில் விக்கிரம சிங்கவும் சரத் பொன்சேக்காவும் இணைந்து மஹிந்தவுடன் போட்டியிடும் பட்சத்தில் இருவரில் யார் வென்றாலும் இந்தியாவிற்குத் தோல்விதான். ரணில்-சரத் கூட்டணி மஹிந்தவிற்குத் பெரும் சவாலாகவும் தலையிடியாகவும் அமையும். இது மஹிந்தவின் மனதில் இருவரும் இணைந்து தன்னை தோற்கடித்து விடுவார்களோ என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சம் இந்தியா தனக்குக் கிடைத்த ஒரு சிறு பிடியாக எண்ணி அதில் பெரும் அறுவடை செய்ய முயல்கிறது. அதற்கு இந்தியாவிற்கு ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆதரவு தேவைப் படுகிறது. அதைப் பெற இந்தியா பல சதிகளில் ஈடுபடுகிறது. அச்சதியில் கோபாலபுரத்தில் இருந்து வெளிவரும் நீலிக்கண்ணிர் அறிக்கைகளுக் அடங்கும்.

மீண்டும் வடக்குக் கிழக்கு இணைப்பு
இந்தியா தமிழர்களுக்குச் செய்த பற்பல துரோகங்களில் ஒன்று வடக்குக் கிழக்கை இணைத்து ஒருமாநிலமாக்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஏமாற்றியது. இந்தியா செய்த பல துரோகங்களால் பெரும்பாலான தமிழர்கள் இந்தியாவை சரியாக அடையாளம் கண்டு கொண்டு இந்தியா என்பது ஒரு தமிழின விரோதி நாடு என்ற உண்மையை உணர்ந்து கொண்டுவிட்டனர். இப்போது இலங்கை குடியரசுத் தேர்தலில் என்ன செய்வது என்று தெரியாமல் திரு திரு என விழிக்கும் இந்தியா வடக்குக் கிழக்கு இணைப்பு என்பதை முன்வைத்து தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறது. இலங்கையில் வடக்குக் கிழக்கு இணைப்பை மஹிந்த செய்வார் அதனால் அவரை ஆதரியுங்கள் என்று தமிழர்களுக்குச் சொல்லி அவர்களைத் மஹிந்த ராஜபக்சேயிற்கு வாக்களிக்க வைத்து அவரை வெற்றி பெறச் செய்து மஹிந்தவைத் தன் ஆள் ஆக்குவது இந்தியாவின் திட்டம். இத்திட்டத்தின் பின் உள்ள சதி தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதுதான். வடக்குக் கிழக்கை இணைத்து விட்டு பின் சிங்களவர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மீண்டும் அதைப் பிரிப்பதுதான் ஆரியச் சதி. முன்பும் இந்தச் சதியைச் செய்துதான் அரசியல் கற்றுக் குட்டி ராஜீவ் காந்தி இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்.

வடக்கு கிழக்கை இணைப்பதற்கு இணங்கினால் எதிர்வரும் தேர்தல்களில் இந்தியாவின் ஆதரவு மகிந்த ராஜபக்சவிற்கு கிடைக்கும் என்று பிரணாப் முகர்ஜீ மஹிந்த ராஜபக்சேயிடம் எடுத்துக் கூறினாராம். வடக்கு கிழக்கை இணைப்பதன் மூலம் பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகளை திருப்திப்படுத்தி விட முடியும் என்பதால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று இந்தியா நம்புகிறதாம் என்பது பொய். வடக்குக் கிழக்கு என்ற மாயைக் காட்டி இந்தியா தமிழ் அரசியள் கட்சிய்களைத் தன்பக்கம் இழுக்கமுயல்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் மஹிந்த வடக்குக் கிழக்கு இணைப்பு செய்யப் போகிறார் என்று அறிந்தால் சிங்கள மக்கள் கொதித்து எழுந்து மஹிந்தவைத் தோற்கடிப்பர். இதுவும் இந்தியாவிற்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும். மொத்தத்தில் பாவம் இந்தியா இலங்கை அரசியலில் ஒரு பிடியின்றி துருப்புச் சீட்டின்றித் தவிக்கிறது. இதில் இருந்து மீள ஒரே வழி தமிழ்த் தேசியவாதம் தோற்கவில்லை சிங்களப் பேரின வாதம் வெற்றியடையவில்லை என்ற உண்மையை பகிரங்கப் படுத்துவதுதான். அப்போதுதான் சிங்களப் பேரினவாதிகள் இந்தியாவுடன் மீண்டும் தமிழ்த் தேசியவாதத்தை ஒடுக்க இணைந்து செயற்பட வருவார்கள். அதற்கு உரிய ஒரேவழி பிரபாகரன் மீண்டும் தோன்றுதல். அவர் மீண்டும் வருவாரா இந்தியாவை இரட்சிக்க?

Monday 23 November 2009

மாவீரர் தினம் இலங்கையின் பயமும் சதியும்


மாவீரர் தினத்திற்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில் சிங்களப் பேரினவாதிகளின் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற பயத்தில் இருக்கிறது. விடுதலைப் புலிகள் மிகப் பலமாக இருந்தநிலையில் சிங்களப் பேரினவாதிகள் மாவிரர் தினம் வருவதற்கு முன்னர் எவ்வளவு பயந்தார்களோ அதே அளவு பயம் அவர்களிடம் இன்றும் காணப் படுகிறது. மேலும், வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ராணுவ பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது. கடற்கரை ஓரங்களில் காவல் துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஒருவேளை கடல் வழியாக விடுதலைப்புலிகள் வந்து திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பயமும் சிங்களவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் 16-க்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, நார்வே, பெல்ஜியம், சுவீடன், கனடா, இத்தாலி, டோகா, பின்லாந்து, அயர்லாந்து, தாய்லாந்து உள்பட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நடாத்தப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் பலம் மறைந்து விட்டதா?மறைந்திருக்கிறதா? விடுதலைப் புலிகளில் பலத்தில் எவ்வளவு எஞ்சி இருக்கிறது என்பது இன்னும் சிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்தவரை கேள்விக் குறியே! சிங்களப் பேரினவாதிகள் தாம் வெற்றி பெற்றதாக தம்பட்டம் அடித்து முடிந்து இப்போது வெற்றிக்கு யார் காரணம் என்பதை பங்கு போட்டுக் கொள்வதிலும் அதை தமது கட்சி அரசியல் வெற்றியாக மாற்றுவதிலும் சண்டையிட ஆரம்பித்திருக்கும் நிலையில் மாவீரர் தினம் அவர்களுக்கு தலையிடியைக் கொடுப்பதற்கான காரணங்கள்:
  • விடுதலைப் புலிகள் ஏதாவது தாக்குதல் நடத்தலாம்.
  • விடுதலைப் புலிகள் தமது பலத்தை ஏதாவது விதத்தில் வெளிப்படுத்தலாம்.
  • விடுதலைப் புலிகள் தமது தலைமையின் இருப்பை உறுதிப் படுத்த ஏதாவது செய்யலாம்.
சிங்களப் பேரினவாதிகளின் சதி
பெரிய பயத்தில் தவிக்கும் சிங்களப் பேரின வாதிகள் தாம் கைது செய்து வைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் சில துரோகிகளையும் இணைத்து ஒரு போலி மாவிரர் தின உரையை செய்ய திட்டமிடுகின்றனர். இதனால் ஏற்கனவே குழம்பியிருக்கும் தமிழ்த் தேசிய ஆதரவுத் தளத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று சிங்களப் பேரினவாதிகள் எண்ணுகின்றனர். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களில் பொறுப்பானவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் சதியை உணர்ந்து இப்போதே நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர்.

விழிப்புடன் இருப்பது எம் பொறுப்பு.

Sunday 22 November 2009

கூகிளின் புதிய மூன்றும் அடங்கிய கைப்பேசி


கூகிள் நிறுவனம் கைப்பேசி(mobile phone)த்துறையில் பாரிய புரட்சி ஒன்றை ஏற்படுத்தவிருக்கிறது. கைப்பேசி, கைப் பேசிக்கான மென்பொருள் தொலைதொடர்புச் சேவை ஆகிய மூன்றும் ஒன்றாக கூகிள் வழங்கவிருக்கிறது. கைப்பேசித் துறையில் முதல்முதலாக மூன்றும் ஒரே நிறுவனத்தில் இருந்து வருவது இதுதான் முதல் தடவை.

Googlephone எனப்படும் இக்கைபேசியில் பெரிய தொடுகை உணர் திரையும் Apple’s iPhone 3GS இலும் பார்க்க இருமடங்கு துரிதமாக செயற்படும் திறனும் Android என்னும் மென்பொருளும் கொண்டது. Android மென்பொருள் பேசுபவர்களின் குரலை இனம் கண்டு எழுத்துருவில் மாற்றவல்லது. அத்துடன் முப்பரிமாண விளையாட்டுக்களும் Googlephoneஇல் உண்டு. Googlephoneஇன் பாவனையாளர்களுக்கு எல்லையற்ற அளவு அழைப்புக்களை செய்யும் வசதியும் உண்டு.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...