Friday 20 November 2009

மானம் கெட்ட இந்தியாவின் மீனவர்களை நிர்வாணமாக்கி சிங்களவர்கள் தாக்குதல்








தரையில் இந்தியப் பந்து வீச்சாளர்களை சிங்களத் துடுப்பாட்டக் காரர்கள் செம அடி அடித்து விளாச தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படையினர் மீண்டும் நிர்வாணமாக்கித் தாக்கி மகிழ்கின்றனர். மானங் கெட்ட இந்திய மத்திய அரசு மீண்டும் மௌனமாக இருந்து தமிழர்கள் தாக்கப் படுவதை இரசிக்கிறது.

அண்மையில் இந்தியக் கடலோரக் காவற்படையினர்மீதும் சிங்களக் கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதற்கு இந்திய மத்திய அரசோ கலைஞர் அரசோ எதுவித ஆட்சேபனையை இலங்கையிடம் தெரிவிக்கவில்லை.
அதற்கு முன்னர் சிங்கள கடற்படையினர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை துப்பாக்கிகளால் சுட்டு மிரட்டி கச்சதீவிற்கு கடத்திச் சென்றனர். அங்கு அவர்களை கொதிக்கும் மணலில் நிற்க வைத்து தாக்கி நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து அவர்கள் உடமைகளைக் கொள்ளையடித்தனர்.
இவற்றை வெளியில் சொன்னால் புகைப் படங்களைப் பாவித்து அடுத்த தடவை கடலுக்கு வரும்போது அவர்களைக் கொல்வோம் என்றும் மிரட்டினர்.

இது வரை பல நுற்றுக் கணக்கான தமிழ் மீனவர்களை சிங்களப் படையினர் கொன்றும் பல ஆயிரக் கணக்கானொரை அங்கவீனராக்கியு முள்ளது.

இம்மீனவர்கள் தமிழர்கள் என்பதால் இந்தியா மௌனமாக இருக்கிறதா? அல்லது இவர்கள் பார்ப்பனர்கள் அல்ல வேறு "ஜாதி"யினர் என்பதால் இந்தியா மௌனமாக இருக்கிறதா?

முன்னர் இந்திய மீனவர்கள் மீது புலிகள்தாக்குதல் நடாத்துகின்றனர் என்று ஆரியப் பேரினவாதிகளின் தமிழ்நாட்டுக் கொத்தடிமைகள் பொய் சொல்லித் திரிந்தனர். பின்னர் மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்வதால் இலங்கை நடவடிக்கை எடுக்கிறது என்றனர் அந்தக் கொத்தடிமைகள். எல்லை தாண்டிச் சென்றால் சுடவேண்டும் கொல்லவேண்டும் நிர்வாணமாக்க வேண்டும் என்பது இந்த அறிஞர்களின் அறிவுப்படி சர்வதேசச் சட்டம்.

வீடு தேடி அலையும் சரத் பொன்சேக்கா


தன் வினை இப்போது தன்னைச் சுடுகிறது. கூடித் தமிழினக் கொலை செய்த சகோதரர்களும் படைத் தளபதியும் இப்போது எதிர் எதிர் அணியில். கொள்ளை அடித்தவர்களிடை கொள்ளையைப் பங்கிடுவதில் மோதல். மனித உரிமைகளை மீறிப் போரில் வென்றவர்கள்(?) வெற்றிக்கான புகழின் பயனை அடைவதில் மோதிக் கொள்கின்றனர்.

சரத் பொன்சேக்கா தன்னால்தான் போரில் வெற்றி கிடைத்ததாக நினைக்கிறார். அதை மஹிந்த சகோதரர்கள் விரும்பவில்லை. எம்மால்தான் வெற்றியடைந்தீர்கள் என்று வெளியில் சொல்லி வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் இருக்கும் டில்லிக் கும்பல் தனக்குள் சிரித்துக் கொள்கிறது இப்போட்டியைப் பார்த்து. கோபாலபுரத்தில் இருந்து ஒரு முதலை கண்ணீர் வடிக்கிறேன் என்று அறிக்கை விட்டுப் புகழ் தேட முயல்கிறது.

சரத் பொன்சேக்காவை இந்த ஞாயிற்ற்குக் கிழமைக்குள் அவரது அரசால் வழங்கப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறும் படி இலங்கை அரசு பணித்துள்ளது. அவர் ஒரு வீடு தேடி அலைகிறார். அவருக்கு வீடு கொடுக்க வேண்டாம் என்று அதிகாரத் தரப்பில் இருந்து விடுக்கப் பட்ட மிரட்டலால் அவருக்கு யாரும் வீடு கொடுக்கிறார்கள் இல்லை. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே!

Thursday 19 November 2009

மீள் குடியேற்றங்களும் மீள் கைதுகளும்


அமெரிக்கா இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி வர்த்தகச் சலுகை தொடர்ந்து கிடைக்குமா என்ற சந்தேகமும் கடந்த இரண்டு மாதங்களாக இலங்கை ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பன்னாட்டு மட்டத்தில் இலங்கை பல சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற நிலை உருவானது. இலங்கை அரசு எதிர்பார்த்தது போல் ஹிந்து ராம் இலங்கை முகாமிற்கு கொடுத்த "நற்சான்றிதழ்" எந்தப் பலனையும் வழங்கவில்லை. இலங்கையின் இந்தச் சிக்கல் நிலையை இந்தியாவின் உதவியுடன் தீர்க்க இலங்கை முயன்றது. விளைவு ஒரு பன்னாடைக் கூட்டம் இலங்கைக்கு வந்து மஹிந்த ராஜபக்சேயிற்குப் பொன்னாடை போர்த்தியது. முகாமில் இருந்து மக்கள் விடுவிக்கப் பட்டனர். அவர்களில் சிலருக்கு ஐயாயிரம் ரூபா மட்டும் வழங்கப் பட்டது. பலர் முன்பின் தெரியாத ஊர்களில் வேண்டுமென்றே நள்ளிரவில் கொண்டுபோய் இறக்கப் பட்டனர். இவற்றை மீள் குடியேற்றம் என்று இலங்கை அரசு சொல்கிறது. ஆனால் உண்மையில் மக்கள் முகாம்களில் இருந்து வெளியேற்றப் படுகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானத்திற்கான பிரதிச் செயலர் ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் அவர்களின் வருகை வேண்டுமென்று பிற்போடப் பட்டது. அவர் வருகைக்கு முன்னர் மாரிகாலத்தைக் கருத்தில் கொண்டு பலர் முகாம்களில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.

முகாம்களில் இருந்து மக்கள் வெளியேற்றப் பட்டமைக்கு மற்ற ஒரு காரணம் வரவிருக்கும் தேர்தலில் தமிழர் வாக்குகளைப் பெறுவது.

நேற்று ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் மீண்டும் "காட்சி முகாம்" ஆக இலங்கை அரசு வைத்திருக்கும் மெனிக் பாம் முகாமிற்கு சென்று பார்த்து விட்டு இலங்கை அரசை பாராட்டி அறிக்கை விட்டார் .

காட்சி முகாம் போலவே இலங்கை அரசு காட்சி மீள் குடியேற்றத் திட்டத்தையும் வைத்திருக்கிறது. அவை மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் அவற்றையும் பார்வையிட்டுப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் அவர்கள் இடம் பெயர்ந்த மக்களின் நிலைபற்றி பரிசோதனை(inspection) செய்ய வந்ததாகச் சொல்லப் படுகிறது. இது போன்ற நடவடிக்கைகளைப் பரிசோதனைகளைச் செய்பவர்கள் தாம் பரிசோதிப்பவற்றை
எழுமானத் தெரிவு ( random selection) மூலம் தெரிந்து பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் செய்வது பரிசோதனை அல்ல. அது ஒரு நெறிப்படுத்தப் பட்ட சுற்றுலா(guided tour). பொன்னாடை போர்க்க வந்த பன்னாடைகள்தான் அப்படிச் செய்கின்றன என்றால் ஜோன்ஸ் ஹொல்ம்ஸ் கூட அப்படிச் செய்கிறாரே!

முகாம்களில் இருந்து பலரை வெளியேற்றி அவர்களை இலங்கை அரசு மீண்டும் கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது. அப்படிச் செய்வது முகாம்களில் இருந்து வெளியேற்றப் படும் மக்களின் தொகையைக் கூட்டிக் காட்டும் தந்திரமே.

முகாம்களில் இருந்து வெளியேற்றப் பட்டு யாழ்ப்பாணத்தில் உறவினர்களுடன் வாழும் மக்களிடம் ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் அடிவருடிகளாகச் செய்றபடும் குழுக்கள் மீண்டும் கைது செய்யப் படுவீர்கள் என்று மிரட்டிப் பணம் பறிக்கிறது. பணம் கொடுக்க மறுத்தவர்கள் மீண்டும் கைது செய்யப் படுதல் காணாமல் போதல் போன்றவை நடக்கின்றன. இலங்கையைப் பொறுத்த வரை காணமல் போதல் என்ற பத்த்திற்கு அர்த்தம் வேறு.

வன்னியை முழுமையாகக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் அங்கு முதலில் செய்த வேலை பௌத்த விகாரைகளையும் பாரிய சிறைச் சாலைகளையும் அங்கு அவசர அவசரமாகக் கட்டியமைதான்.

இப்போது மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வனனிமுகாம்களில் இருந்து வெளியேற்றப் படுபவர்கள் தேர்தலின் பின் கைது செய்யப் பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப் படுவார்கள்.

ஜீஎஸ்பீ வர்த்தகச் சலுகை இழக்கும் பட்சத்தில் இச்சிறைச் சாலகளுக்கு ஆடை உற்பத்தித் தொழில்கள் மாற்றப் பட்டு மிகக் குறைந்த கூலியில் அங்கு ஆடை உற்பத்திகள் செய்யப் படலாம்.

Wednesday 18 November 2009

கருணாநிதியின் கண்ணீரின் பின்னணி என்ன?




இலங்கையில் தமிழர்கள் வகை தொகையின்றிக் கொல்லப்படும் போது அவரால் சொக்கத் தங்கம் என வர்ணிக்கப் பட்ட சோனியா காந்தியிடம் தன் குடும்பத்திற்கு மந்திரிப் பதவி கேட்டு மண்டியிட்ட கருணாநிதி இப்போது அழுகிறேன் என்று ஏன் அறிக்கை விடுகிறார்?

இலங்கையின் இன அழிப்புப் போரை இந்தியாவின் உதவி இன்றி சிங்களவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று பலதரப்பில் இருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இலங்கைக்கு பலவழிகழிலும் உதவி செய்த சோனியா ஆட்சியின் பங்காளியான கருணாநிதி ஏன் இப்போது தான் அழுவதாக அறிக்கை விடுகிறார்?

சோனியா-கருணநிதியின் கூட்டணி அரசின் தூதுவர்கள் கொழும்பு சென்று மூன்று நாட்களுக்குள் ( இந்தியப் பொதுத்தேர்தலைக் கருத்தில் கொண்டு) போரை முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தியதால் மோசமான ஆயுதங்களைப் பாவித்து பல்லாயிரம் அப்பாவிகளை இலங்கை அரசு கொன்று குவித்ததை மறந்து இப்போது கருணாநிதி ஏன் இந்தக் கண்ணீர் அறிக்கை விடுகிறார்?

ரணில் கருணாநிதியிடையே "டீலா நோ டீலா"?
ஆறுமாதங்கள் எதுவுமே நடக்காதது போல் இருந்த கருணாநிதி இப்போது அழுவதாக அறிக்கை விடுவது ஏன்? அழுது அழுதுதான் செம்மொழி மாநாடு ஏற்பாடுகள் செய்கிறாரா? கருணாநிதியின் அறிக்கையின் முக்கிய பகுதி ரணில் விக்கிரமசிங்கேயிற்கு வக்காலாத்து வாங்குவதுதான். தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கேயிற்கு வாக்களித்து இருந்தால் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காதாம். இந்தியா ரணிலை தனது கையாளாக மாற்ற முயற்சி எடுக்கும் வேளையிலேயே கருணாநிதியின் கண்ணீர் அறிக்கை வெளிவருகிறது. இந்தியப் பேரினவாதிகளின் கைக்கூலி கருணாநிதி என்பது உண்மையா? அந்த மேலிடத்து உத்தரவின் பேரில் கருணாநிதி ரணிலுக்கு வக்கலாத்து வாங்கி வரும் தேர்தலில் தமிழர்களை ரணிலுக்கு வாக்களிக்க கருணாநிதி பிரச்சாரம் செய்கிறாரா? அதற்காகத்தான் இந்தக் கண்ணிர் அறிக்கையா? அல்லது ரணிலுக்கும் கருணாநிதிக்கும் இடையில் ஏதாவது "டீலா"?

தமிழ் தமிழ் என்று சொல்லிப் பிழைப்பு நடாத்திய கருணாநிதி இப்போது தமிழினக் கொலையாளிகளுடன் கை கோத்துப் பிழைப்பு நடாத்துகிறாரா?

Tuesday 17 November 2009

வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய இந்தியா


இந்தியா இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 1970களின் பிற்பகுதியில் தமிழர்களின் தேசிய போராட்டத்திற்கு உதவியது. 1980களின் பிற்பகுதியில் தமிழர்களின் முதலாம் எதிரியாக இந்தியா மாறியது. பின்னர் இந்தியா இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட்டுக் கொண்டது. இலங்கைக்கு உதவி செய்யது வேண்டிய அதன் தலையாய பணி என்ற பரிதாபகரமான சூழலில் இந்தியா அகப்பட்டுக் கொண்டது. ஆனால் இந்தியாவின் பரம விரோதிகளான சீனா பாக்கிஸ்த்தானுடன் இலங்கை உன்னத நட்புறவைப் பேணிக் கொண்டே இருக்கிறது. எந்த ஒரு கட்டத்திலும் சிறிய நாடான இலங்கையைத் தனது கட்டுப் பாட்டுக்குள் இந்தியாவால் கொண்டுவர முடியவில்லை.

இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்த தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவை இந்தியா பிரித்தெடுத்தது. ஆனால் இலங்கையின் கிழக்குப் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை விரும்பாத நாடொன்று கருணாவிடமிருந்து பிள்ளையானைப் பிரித்தெடுத்து கருணாவைச் செல்லாக் காசாக்கியது. திவிர சிங்களத் இனவாதிகளின் உதவியுடன் கருணா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று அங்கு அகதி தஞ்சம் கோரினார். அங்கிருந்து விரட்டப் பட்ட நிலையில் கருணா இப்போது இலங்கை அரசின் தயவில் வாழ்ந்து வருகிறார். இது இந்தியாவின் இலங்கை மீதான கொள்கைக்குக் கிடைத்த பலத்த தோல்விகளில் ஒன்று.

இலங்கையின் இன அழிப்புப் போரில் இந்தியா சகல உதவிகளையிம் வழங்கி இலங்கையை வெற்றி(?) கொள்ள வைத்தது. அதுவே இப்போது இந்தியாவிற்கு வில்லங்கமாக உருவெடுக்கிறது. இலங்கையின் போர் வெற்றி(?) இலங்கையில் ஒரு புதுத் தலைமையை உருவாக்கிவிட்டது. அத் தலைமை தனக்குத் தலையிடியாகா மாறும் என்பதை இந்தையாவால் முன்கூட்டியே அறிய முடியவில்லை. அல்லது அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அதன் கவனம் முழுக்க இந்திய அதிகார மையத்தின் குடும்பப் பகைமைக்குப் பழிவாங்குவதிலும் பார்ப்பன நிர்வாகிகளின் சாதி நலன்களைப் பேணுவதிலும் இருந்தது. அந்தப் புதுத் தலைமைதான் சரத் பொன்சேக்கா.

சரத் பொன்சேக்கா மற்ற தீவிரவாத சிங்களவர்களைப் போலவே ஒரு இந்திய விரோதி இலங்கை பாக்கிஸ்த்தான் சீனா இரசியா ஆகியவற்றுடன் நல் உறவுகளைப் பேணவேண்டும் என்ற கொள்கையுடையவர். அப்படிப்பட்ட ஒருவர் இலங்கையின் படைத் தளபதியாக வந்தது இந்திய வெளியுறவுத்துறைக்கும் குறிப்பாக உளவுத் துறைக்கும் கிடைத்த படு தோல்வி. அடுத்தது சரத் பொன்சேக்கா ஒரு அரசியல் தலைவராக உருவாகியது இந்தியாவிற்குப் பாரிய அடி. தமிழ்த் தேசிய போராட்டத்தை ஒடுக்க இந்தியா செய்த உதவியே இந்தியாவிற்கு பாரிய பிரச்சனையாக உருவாகிறது. ஒன்று இந்திய விரோதக் கொள்கைகளுடைய தீவிர சிங்களப் பேரின வாதிகளின் கை இலங்கையில் ஓங்கியது மற்றது பாக்கு நீரிணையின் இரு புறமும் உள்ள தமிழ்த் தேசியவாதிகள் இந்திய விரோதிகளாக உருவானது.

Monday 16 November 2009

கருணநிதிக்கு ராஜபக்சே சாந்தி செய்தாரா?


1995இல் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் அவர்கள் பிரபாகரனுக்கு மூன்று அக்காக்களால் தோஷம் என்றார். அந்த மூன்று அக்காக்கள்: சோனியா அக்கா, சந்திரிக்கா அக்கா, ஜெயா அக்கா. அக்கால கட்டத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் ஜெயலலிதா ஜெயராமிற்கும் இடையில் திரை மறைவு உடன்பாடு இருந்ததாக பேசப்பட்டது. அந்த உடன்பாடு இலவசமாக செய்யப்பட்டதல்ல என்றும் பேசப்பட்டது.

இப்போது கருணநிதியின் குடும்பத்திற்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் இடையில் ஏதாவது உடன்பாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜபக்சேயின் சகோதரி இந்தியாவில் சுற்றுப் பயணம் கருணாநிதிக்குத் தெரியாமல் எப்படி செய்ய முடியும்?

ராஜபக்சேவின் சகோதரி நிருபமா ராஜபக்சே மற்றும் அவரின் கணவர் திருக்குமரன் நடேசன் ஆகியோர் திருச்செந்தூரில் நடந்த யாகத்தில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இருவரும், இம்மாதம் 7ம் திகதி மதியம் திருச்செந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். பின்னர் திருச்செந்தூர் கீழரத வீதியில் கோட்டாறு செட்டிமடத்தில் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு யாகத்தில் கலந்துகொண்டனர். இவர்களுக்கு பலத்த பாதுகாப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு இவர்கள் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்களவர்கள் வெற்றி பெற தமிழகத்தின் பிரபல கோவிலில் யாகம் செய்தனர். சிங்களவர்களுக்கு ஆதரவான அரசு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் இருந்து ராஜபக்சேயிற்கு பொன்னாடை போர்க்க வந்த பாராளமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடுதிரும்பிய பின் கருணாநிதி இலங்கையில் அமைதியும் சாந்தியும் நிலவுவதாக அறிக்கை விட்டார். கருணாநிதிக்கு ராஜபக்சே ஏதாவது சாந்தி செய்தாரா இப்படி உண்மைக்குப் புறம்பான அறிக்கை வெளியிட?

Sunday 15 November 2009

பொட்டு அம்மான் வருவாரா? அல்லது துட்டு அம்மன் வருவாளா?



விகடன் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ஈழத்தைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தியது. அதன் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முடிவுகள் புலிகளுக்கும் ஈழத்திற்கும் பலத்த ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டியது. அதன் பிறகு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளிவிட்டது. இதில் விடுதலைப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டது. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். எல்லாம் வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்த சாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். ஒரு பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும். நானும் எனது நண்பர்களும் இதற்கு எதிராக தெரிவித்த பல கருத்துக்கள் அங்கு பிரசுரிக்கப் படவில்லை. நாம் விகடனைப் பரிசோதிப்பதற்காக சில பார்ப்பனியர்களை தாக்கி பின்னூட்டம் எழுதுவோம். அவை பிரசுரிக்கப் படுவதில்லை. விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை.

இடையில் ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியர் ஒருவர் பதவி நீக்கப் பட்டார். விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் என்பவர்தான் அவர்.

அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், காணிவீடுகள் விற்பனத் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது.

அண்மையில் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் நிலக்கீழ் அறையில் விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்திருந்த பெரிய ஒரு படையணிக்கு ( விகடன் மொழியில் பட்டாலியன்) தேவையான ஆயுதங்களை இலங்கை அரசு கைப் பற்றியதாக விகடன் தகவல் வெளியிட்டது. விசாரித்ததில் அக் கோவிலில் அந்த அளவு பெரியா நிலக்கீழ் அறை இல்லை என்று தெரியவந்தது. நிலக்கீழ் அறை உண்டு அது கோவில் நகைகள் பணம் போன்றவற்றை வைத்திருக்கக் கட்டப் பட்ட சிறிய அறை என்று தெரியவந்தது.

இப்போது விகடன் வெளிவிடும் புதிய செய்தி "பிரபாகரன் வர மாட்டார். ஆனால், பொட்டு அம்மான்தான் இந்த வருட மாவீரர் தின உரையை நிகழ்த்தவிருக்கிறார்!' என்ற தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களுள் ஒன்றாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கும் புதிய படம் ஒன்றைப் புலிகள் ஆதரவு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன. இதுவரை வெளிவராத அந்தப் படத்துக்கு மேலே, 'இந்தப் படம் சொல்லும் தகவல் என்ன?' என்ற புதிரான கேள்வியும் தொக்கி நிற்கிறது."

ஆனந்தவிகடனில் வெளிவரும்வரை இப்படி ஒரு செய்தி வேறு எங்கிருந்தும் வரவில்லை. உண்மையான செய்தி என்ன வென்றால் விடுதலைப்புலிகள் வெளிவரும் சூழல் இன்னும் உருவாகவில்லை.

விகடனின் அடுத்த செய்தி: இனி, உங்களை வழிநடத்தும் பொறுப்பை பொட்டு அம்மானிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த இயக்கத்தின் துணைத் தலைவராக அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்!' என்று அறிவித்தாராம் அப்போது. இயக்கத்தின் தளபதிகளும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட னராம். அப்போது எடுக்கப்பட்ட படத்தில்தான் பிரபாகரனுக்குச் சரிசமமாக பொட்டு உட்காரவைக்கப்பட்டார். இதில் பல ஆச்சர்ய மான விஷயங்கள் உண்டு!'' என்ற பீடிகை கொடுத்து நிறுத்தியவர்கள் மேலும் தொடர்ந்தார்கள்..

விகடன் சொல்லும் படம் இந்த ஆண்டு மே மாதம் 17ம் திகதிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் எடுக்கப் பட்டிருக்க வேண்டும். அப்போது முள்ளிவாய்காலிலோ நந்திக்கடலிலோ இப்படி ஒரு புகைப்படம் எடுக்க வாய்ப்பில்லை. 24 மணிநேர குண்டுவீச்சுக்களுக்கு மத்தியில் இப்படி ஒரு புகைப் படம் இப்படி தூய ஆடைகளுடன் எடுத்திருக்க முடியாது. இப்படத்தைப் பிரிசுரித்த அதிர்வு இணையத் தளம் பொட்டு அம்மானும் பிரபாகரனும் இணைந்து எடுத்த படம் மே 17ம் திகதிக்குப் பிறகுதான் எடுக்கப் பட்டது என்ற பொருள்படத்தான் எழுதியிருந்தது. விகடன் ஏன் இப்படி ஒரு புளுகு மூட்டையை மீண்டும் அவிழ்த்து விட்டது? துட்டுச் சம்பாதிக்கவா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...