Saturday 1 August 2009

இலங்கை இந்திய சீன முக்கூட்டு உறவு


நான் உன்னை நினைச்சேன்!
நீ அவனை அணைச்சாய்!
நம்மாலே ஒரு இனம் நாசமாச்சே!

Friday 31 July 2009

ஐபோன்களுக்கு பேராபத்து - Hacking threat to iPhones


ஆப்பிளின் ஐபோனில் உள்ள பாரிய பலவீனமொன்று கண்டறியப் பட்டுள்ளது. இதன்படி ஒருவர் உங்களது ஐபோனிற்கு அனுப்பும் குறுந்தகவல் மூலம் உங்களது ஐபோனைத் தமது கட்டுப் பாட்டிற்கீழ் கொண்டுவந்து தான் உங்கள் ஐபோன் மூலம் மற்றவர்களுடன் தொலைத்தொடர்பு கொள்ளலாம் வலைத் தளங்களுக்கு சென்று பார்வையிடலாம். உங்களுக்கு வரும் குறுந்தகவலில் ஒரு சதுரக் குறியீடு மட்டும் இருக்கும் அதன் பின்னால் இருக்கிறது ஆபத்து. இக்குறுந்தகவல் வந்தவுடன் உடனடியாக உங்கள் ஐபோனை மூடிவிடவேண்டும்.(switch off).இதுபற்றி Metro வெளியிட்ட தகவல்:

iPhone users are being warned that once the method is revealed they should be wary of potential attacks.

Researchers say the 'hack' could rapidly spread from iPhone to iPhone and cause chaos.

If they receive a text message with a single square character, they are advised to turn the phone off immediately.

'This is serious,' one of the researchers, Charlie Miller said

'The only thing you can do to prevent it is turn off your phone. Someone could pretty quickly take over every iPhone in the world with this.'

Miller and his colleague Collin Mulliner plan to reveal details of the attack later today at the Black Hat security conference in Las Vegas.

They say the attack works by sending a burst of SMS messages to the iPhone, which allows them to hijack the phone and take control of its functions - including sending texts to hijack other phones from the user's contacts list.

The only warning a user would get that this was happening, they say, would be a single text message with a lone square character in it.

Miller and Mulliner say they contacted Apple to warn them of the vulnerability over a month ago, but that Apple has yet to fix the flaw.

Apple has not yet commented on the alleged vulnerability; the company tends not to discuss software problems until it has released a fix.

Miller and Mulliner also claim to have discovered other SMS-based attacks that can be used to take control of Windows Mobile devices, and another text attack that lets them knock iPhones and Google Android phones off their wireless network. Google says it has patched the security flaw in Android since

Thursday 30 July 2009

இன்றும் இனியவளே!



You looked sensational
When I met you in that lecture hall
I lost myself on your charm


You looked stunning
As we shop around Marble Arch
I enjoyed those days

You looked attractive
As we spent our weekends together
That was the best part of my life

You look sensational
As you dance with me
I felt your angelic presence

You were captivating
As we made the longer winter nights
Shorter and sweeter

Still you are alluring
As I surf your blogspot
Full of your wedding photos

வன்னி வதை முகாம்கள்: 180 நாள் கணக்கு என்று தொடங்கும் என்று முடியும்.


பிள்ளையார் தனது தாய் உமாதேவியிடம் நச்சரித்தாரம் எனது திருமணம் எப்போது என்று. அவரின் ரோதனை தாங்காத தாயார் இந்தா சுவரில் எழுது நாளைக்கு உனக்குத் திருமணம் என்று சொன்னாராம். அப்படியே பிள்ளையாரும் செய்தாராம். மறுநாள் பிள்ளையார் வந்து திருமணத்தைப் பற்றிக் கேட்டபோது என்ன எழுதி இருக்கிறாய் என்றுபார் என்றாராம். நாளைக்கென்றுதானே எழுதி இருக்கிறாய். நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றாராம். இப்படி பிள்ளையாருக்கு இன்றுவரை தாயார் சொல்லிவருகிறாராம்.

இப்படித்தான் வன்னியில் உள்ள வதை முகாம்களின் அடைக்கப் பட்டுள்ள தமிழர்களின் கதியும். மே மாதத்தில் சொன்னார்கள் இன்னும் 180 நாட்களுக்குள் இவர்கள் மீள்குடியேற்றப் பட்டுவிடுவார்கள் என்று. இந்தியாவும் வீரம் பேசியது. உடனடியாக கண்ணிவெடிகள் அகற்றும் பணி ஆரம்பிக்கப் படவேண்டும் இல்லையேல் எமது படையினர் இலங்கை சென்று அதைச் செய்வார்கள் என்று. இதை உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின் கொத்தடிமைகள் வெகுவாகப் புகழ்ந்தனர். இந்தியா தமிழர்கள் தொடர்பாக ஒரு தீர்ககமான நிலையில் இருக்கிறது என்று.

பின்னர் இலங்கை அறிவித்தது 80 விழுக்காட்டினர் 180 நாட்களில் மீள் குடியேற்றப் படுவார்கள் என்று. பின்னர் சர்வ தேச நாணய நிதியத்திடம் அதை 70 விழுக்காடாகக் குறைத்துக் கொண்டனர். சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுப்பதாக அறிவித்தவுடன் 60,000 படையினரக் குடும்பங்களுடன் குடியமர்த்திய பின்னே முகாமிலுள்ள அகதிகள் குடியேற்றப் படுவார்கள் என்று இலங்கை அரசு இப்போது கூறுகிறது.

பயங்கர வாத ஒழிப்பு என்ற போர்வையில் இலங்கை இனக் கொலைக்கு உதவியது இந்தியா. ஒரு விடுதலைப் புலிப் போராளி இப்படிக் கூறுகிறார்:
வட்டுவாகல் தாண்டும் போது வரவேற்றவர்களில் நான் ஒரு சீக்கிய இந்திய தளபதியைக் கண்டேன். சிறிது தூரத்தில் சிங்களப் படை சிப்பாயின் சீருடையில் ஒரு வெள்ளை இன அதிகாரியை சந்திக்க நேர்ந்தது.

இவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள். இணைத் தலைமை நாடுகள் என்று ஒன்று இலங்கை இனப் பிரச்சனையைத் தீர்க்கப் போவதாகக் கூறியது அது இப்போது எங்கே?

தமிழ்நாட்டில் என்ன செய்யப் போகிறார்கள்?
இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி என்னிடம் கலந்து பேசுவதற்காக இலங்கை அமைச்சர் தொண்டமான் தலைமையில் என்னைச் சந்தித்தனர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழு இலங்கைக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மத்திய அரசின் அனுமதியை பெற்று கலந்து பேசிதான் செயல்பட முடியும் என்று கூறினேன். நிச்சயம் அவர்கள் வாழ்வுரிமையை பெற நாம் ஒன்றாக செயல்படுவோம். விரைவில் நல்ல பதில் கிடைக்கும்,” என்றார் கருணாநிதி. இவர் இப்போது என்ன செய்கிறார்?
சிதம்பரம் ஐயா எங்கே? போர் முடிந்தவுடன் சிதம்பரம் ஐயா சொன்னது:

இலங்கைத் தமிழர்களை இந்தியா பாதுகாக்கத் தவறியுள்ளது ன்பதனை ஏற்க முடியாது என இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளுடமும் தமிழர் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தி வந்த போதிலும் இரு தரப்பினரும் அதனை உதாசீனம் செய்தே வந்தனர்.

தற்போதும் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்தும் பணிகளை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என காரைக்குடியில் நடைபற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்குலுக்கான அனுமதி, இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு செல்ல ஊடகங்களுக்கு அனுமதி, என்பனவற்றில் இலங்கை அரசுகவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்த அவர், இலங்கையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தியா ஐநாறு மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த 500கோடு ரூபா தமிழர்களுக்கான உதவியாஅல்லது இந்தியாவின் போரை இலங்கை முடித்ததற்கான கைக்கூலியா?


இந்தியா செய்யப் போவது என்ன?

தமிழர் பகுதிகளில் மெதுவாகக் காலூன்ற இந்தியா திட்டமிட்டுள்ளதை, அதன் அண்மைய நடவடிக்கைகள் தொளிவாக காட்டுகின்றன.

யாழ் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை இந்தியாவின் பிர்லா நிறுவனமும்,

சம்பூரில் அனல் மின்னிலையம்,

தற்போது கடலடித்தடம் மூலம் மின்சாரம்

என பல வழிகளில் இலங்கையில் கால் பதித்து, அதன் மூலம் தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தககது.

இந்தியாவிற்குப் போட்டியாக சீனாவும், பாகிஸ்தானும் ஆதிக்க முனைப்பில் ஈடுபட்டு, பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.


Wednesday 29 July 2009

நடுக் கடலில் மானம் கெட்ட இந்தியக் கரையோரக் காவற்படை - இந்திய அரசு ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?


நடுக்கடலில் பழுதடைந்த இந்திய மீனவர்களின் படகைக் கட்டி இழுத்துச் செல்வதற்கு இந்தியக் கரையோரக் காவற் படையினர் தயாராகிக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் இந்தியர்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினர். பயந்து நடுங்கிய இந்தியக் கரையோரக் காவற் படையினர் தமது கைகளை உயர்த்தி அவர்களிடாம் சரணடைந்தனர். அவர்கள் கப்பலுக்குள் ஏறி சோதனையிட்ட பின் இலங்கைக் கடற்படையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

தமிழ் மீனவர்களைப் பொறுத்தவரை கண்டவுடன் சுடும் கொள்கை
இந்தச் சம்பவத்திலிருந்து புலப்படுவது இலங்கைக் கடற்படை தமிழ் மீனவர்களைப் பொறுத்தவரை கண்டவுடன் சுடும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது என்பதாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை வருத்தம் தெரிவிக்காதது ஏன்?
இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இக் கடற்பகுதியப் பொறுத்தவரை இலங்கைக் கடற்படை தான் தோன்றித் தனமாக நடந்து கொள்ளலாமா?

இந்திய அரசு ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?
இந்த சம்பவத்திற்கு இதுவரை இந்திய அரசு இலங்கை அரசிடம் ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது சிங்களவனுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதா? இது கடலில் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஹிந்து ராம் போன்றோர்கள் மற்ற தமிழினத் துரோகிகளுடன் சிங்களத் தூதுவன் ஹ்ம்சாவுடன் விருந்து உண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

Tuesday 28 July 2009

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியக் கடன்: தாற்பரியங்களும் தாக்கங்களும்.




இனக் கொலைக்கான சர்வதேச் அங்கீகாரம்.
இலங்கையில் ஒரு தினத்தில் மட்டும் இருபதினாயிரம் அப்பாவிகள் கொல்லப் பட்டதுடன் இந்த ஆண்டில் மட்டும் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் அறுபதினாயிரம் அப்பாவித்தமிழர்கள் கொல்லப் பட்டதாக பரவலாக கூறப் படுகிறது. இவர்கள் மீது மோசமான ஆயுதங்கள் பாவிக்கப் பட்டுள்ளதாக ஊடகங்கள் ஆதாரங்களுடன் வெளியிட்டன. சர்வ தேச நாணய நிதியம் இந்நிலையில் இலங்கைக்கு கேட்டதிலும் அதிகமான தொகைப் பணத்தை கொடுத்தது இலங்கையில் நடந்த இனக்கொலைக்குக் கிடைத்த சர்வ தேச அங்கீகாரமாகவே கருதப் படவேண்டும்.

இலங்கை முன்னுதாரணமாகுமா?
போர் நடக்கும் இடத்தில் ஊடகங்களை அனுமதிக்காமல், மருந்துப் பொருட்கள் உணவுப் பொருட்களை அனுமதிக்காமல், தொண்டு நிறுவனங்க்களை அனுமதிக்காமல் சர்வதேச நியமங்களுக்கு முற்றிலும் முரணாகச் செயற்பட்டு நடந்தவற்றிக்கான சாட்சியங்களை மறைத்து, சாட்சி சொல்ல வேண்டியவர்களைத் தடுத்து வைத்து மிரட்டி ஊடகங்களுக்கு முன் தனக்கு சாதகமாக சாட்சி சொல்லவைத்து, தனது குற்றங்களை எப்படி மூடி மறப்பது என்பது சம்பந்தமாக உரிமைப் போராட்டங்களை நசுக்குவதில் மற்ற நாடுகளுக்கு இலங்கை ஒரு முன் உதாரணமாக அமையுமா? இவற்றை எல்லாம் செய்துவிட்டு அயல் நாட்டிலிருந்து ஒரு கேவலமான ஊடகவியலாளரை அழைத்து அவருக்கு செய்ய வேண்டியதைச் செய்து தமக்கு சாதகமாக அறிக்கைவிடச் செய்வதும் நல்ல முன்உதாரணம்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இரட்டை வேடம் போட்டனவா?
ஹிலரி கிளிண்டன் இப்படிச் சொன்னாராம்:
WASHINGTON (AFP) — US Secretary of State Hillary Clinton said here Thursday it "is not an appropriate time" to consider a massive International Monetary Fund loan for Sri Lanka.

Clinton told reporters that the United States has been "trying to convince both sides," the Sri Lankan government and the Tamil Tiger guerrillas, to stop fighting.

"We have also raised questions about the IMF loan at this time. We think that it is not an appropriate time to consider that (loan) until there is a resolution of the conflict," Clinton added.

The United States is the main shareholder in the IMF and its approval is key to the release of the loan.

பிரித்தானியப் பிரதிநிதி ஐநாவில் ஊடகவியலாளரிடம் பேசும் போது இலங்கைக்கு சர்வ தேச நாணய நிதியம் கடனுதவி செய்வதற்கு இது உகந்த தருணமல்ல என்று கூறினார். பிரித்தனியப் பத்திரிகையான ரைம்ஸ் இப்ப்டிச் சொன்னது:

24/07/2009.

Britain was poised tonight to take an unprecedented stand against a US $2.5 billion loan being extended by the International Monetary Fund (IMF) to Sri Lanka because of fears over the humanitarian situation in the county.

A British Government source said that that it was “not the right time to go forward” with the loan, because Sri Lanka is forcibly detaining nearly 300,000 mostly Tamil refugees in internment camps and spending a large proportion of its wealth on its military - even though the country’s bloody 26-year civil war ended in May.

இப்படி இருந்தும் சர்வதேச நாணய நிதியத்தின் வாககெடுப்பில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிரான்சும் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை?

முன்னுக்குப் பின் முரண்படும் சர்வதேச நாணய(மில்லா) நிதியம்.

இலங்கைக்கு கடனுதவி வழங்குவதில் சகல தரப் பினரதும் பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப் படும் என்று சொன்ன சர்வதேச் நாணய நிதிய அதிகாரி பிறையன் அற்கின்சன் மனித உரிமை அமைப்புக்களின் கருத்துக்களைப் புறக்கணித்தது ஏன்?

நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய பி. அற்கின்சன் அவர்கள் ஒருகட்டத்தில் கூறியது:

: Maybe I start with the second question. The IMF’s money does not directly fund the government’s budget efforts. It’s lent entirely to the central bank to rebuild reserves.

பிறகு இன்னொரு கட்டத்தில் இதற்கு முரணான கருத்தைத் தெரிவிக்கிறார்.

But, in Sri Lanka’s case, they have been hit by the global crisis, and the IMF’s mandate is to address and ward off balance of payments crises. Now that’s the balance of payments crisis sounds rather dry, but it really would have a devastating impact on the economy and on the people, particularly the most vulnerable as we’ve seen in other countries. So our job, our mandate is to prevent such a crisis.


பிறகு இப்படிக் கூறுகிறார்:

As you know, the program targets reserves. And, depending on the supply and demand for foreign exchange to meet those reserve targets, then the exchange rate will be the one factor that equilibrates the supply and demand, but the reserve targets are the foundation of the program.

ஆனால் பொருளாதர நிபுணர்களின் கருத்து சர்வதேச நாணய நிதியம் இலங்கைப் பொருளாதாரத்தை இனி வழிநடத்த்ப் போகிறது என்பதாகும்.

இலங்கை ரூபாவின் மதிப்பு ஏன் ஏறவில்லை?

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைத்தவுடன் ரூபாவின் மதிப்பு ஏறி இருக்க வேண்டும் ஆனால் ஏறவில்லை! இலங்கையின் மத்திய வங்கிக்கு சர்வ தேச நாணய நிதியம் ரூபாவின் மதிப்பை ஏறாமல் பார்துக் கொள்ளும்படி கட்டளையிட்டதா?

இது தொடர்பாக பி. அற்கின்சன் மழுப்பலான பதிலையே கூறினார். அவர் உள்ளூர் அரசியலைக் கருத்தில் கொண்டாரா?

கடன் கொடுத்து கொடுத்த கடனை வாங்குகின்றனரா?

சென்ற ஆண்டு இலங்கைக்கான கடன் வழங்கு தரத்தை தர நிர்ணய அமைப்புக்கள் தரம் தாழ்திய நிலையில் HSBC வங்கி இலங்கையின் கடன் வழங்கி இருந்தது. வங்கிகள் யாவும் நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில் இக்கடனை இலங்கை திருப்பிக் கொடுக்காத நிலை ஏற்பட்டால் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு மேலும் அடி விழும். நாணய நிதியம் வழங்கிய கடனுதவி ஏற்கனவே இலங்கை பெற்றுள்ள கடன்களி திருப்பியளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதித்ததா?

இலங்கை மக்கள்மீது பாரிய வரிச்சுமை?

இலங்கைசர்வ தேச நாணய நிதியத்திற்கு வழங்கிய உறுதி மொழிகளில் வருமான வரி விதிப்பு முறைமை முற்றாக மறு சீரமைக்கப் படும் என்பதும் ஒன்றாகும். வரிவசூலிக்கும் முறைமை ப்ரவலாக்கப் ப்டுமாம். இதனால் இதற்கு முன்பு வரிசெலுத்தாத மக்களிடமிருந்தும் வரி அறவிடும் முறை உருவாகலாம்.

பி. அற்கின்சன் இப்படிக் கூறினார்:

I believe that the government is trying to, as they state in their Memorandum of Economic Policies, intends to target some payments, transfers, better so that they can go to the people who need it most. So that is one of the reasons why the government feels that they need to raise revenue under their program.

எதிர்வரும் இலங்கை அதிபர் தேர்தலைத் தொடர்ந்து மக்கள்மீது பாரிய வரிச் சுமை ஏற்படுத்தப் படலாம்.



மானியங்கள் நிறுத்தப் படும்

இலங்கை இதுவரை இலங்கை மின்சார சபை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்,போன்ற பல அரசுடமை அமைப்புக்களுக்கு வழங்கிவந்த மானியங்கள் 2011 இல் இருந்து நிறுத்தப் படும். இதனால் மின்சாரம் எரிபொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.

Sunday 26 July 2009

இலண்டன்: கறுப்பு ஜூலை நிகழ்வுகள் - மீண்டும் எழுவோம்.

இலண்டனில் "விழ விழ மீண்டும் எழுவோம்" என்று ஓங்கி உரைத்தனர்.



.
1983-ம் ஆண்டு ஜூலையில் இலங்கையில் நடந்த இனக்கொலையின் நினைவு நாள் இலண்டனில் உள்ள ரfஅல்கர் சதுக்கத்தில் 26-07-2009 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மக்கள் ஆயிரக் கணக்கில் கலந்துகொண்டு கொலை செய்யப் பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் பிரதான அம்சம் விழ விழ எழுவோம் என்பதாகும்.





புலிக்கும் சிங்கிற்கும் என்ன வித்தியாசம்?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...