Friday 3 July 2009

கலைஞரின் காகித ஓடமும் ஈழத் தமிழரும்.


அண்மையில் நண்பர் ஒருவர் கலைஞர் கருணாநிதி எழுதிய திரை படப் பாடல் என்று சொல்லி ஒரு பாடலை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். கலைஞர் ஐயா முப்பது வருடங்களுக்கு முன்னதாகவே ஈழத்தமிழனின் இன்றைய நிலையை கவிதையாக வடித்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் என்ன சாதாரண ஆளா?

இரு பெண்டாட்டிகள் உடனிருக்க
இரு குளிரூட்டிகள் அருகிருக்க

நாலு மணி நேர உண்ணா விரதத்தால்

போரை நிறுத்திய பெருந்தகை.

அவரது மறக்க முடியுமா திரைப் படப் பாடல் இப்படி ஆரம்பிக்கிறது:

காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்

ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்

அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்


ஈழத்தமிழனுக்கும் இன்று மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை!

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து

வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான் ( காகித)


இந்தியா ஈழத்தமிழனுக்கு ஆயுதம் தந்தது பயிற்ச்சி தந்தது. இப்போது சிங்களவனுடன் சேர்ந்து தமிழனை வததைத்து விட்டது.

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை

ஏழைகள் வாழ இடமே இல்லை

ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை ( காகித)


ஈழத்தவன் இசுலாமியனாக இருந்தால் இசுலாமியர் வாழும் நாடு உதவியிருக்கும்.
கிறிஸ்தவனாக இருந்த்தால் கிறிஸ்த்தவர்கள் வாழும் நாடு உதவியிருக்கும்.
கத்தோலிக்கனாக இருந்தால் கத்தோலிக்கர்கள் வாழும் நாடு உதவியிருக்கும்.
பௌத்தனாக இருந்தால் பௌத்தர்கள் வாழும் நாடு உதவியிருக்கும்.
பெரும் பாலான ஈழத்தவர்கள் இந்துக்களாக இருந்ததால் எந்த நாடும் உதவவில்லை.

தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

அம்மா எங்களை அழைத்திடு தாயே (காகித)

தமிழ்நாட்டைத் தாயென்று நம்பினான் இந்தியாவைத் தந்தை நாடென்று நம்பினான். எதுவும் நிலைக்கவில்லை.

Thursday 2 July 2009

ஐயோ கிளம்பீட்டாங்களய்யா - மைக்கேல் ஜக்சன் சாகலையாம்


செத்தாரா? சாகவில்லையா? முடியை பிய்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் ஒரு தலையிடி. மைக்கேல் ஜக்ஸன் சாகவில்லை அவர் உயிருடன் இருக்கிறார் என்று வதந்தி கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

'Jackson's not dead, he's living in a bunker with Elvis Presley': Conspiracy theories flood the internet

Living in a bunker with Elvis Presley

Internet site 68comeback reported that Jackson was living in a 'bunker' with Elvis Presley.

It wrote: 'Surely you've heard of the secret, seven-storey-deep bunker that Elvis Presley had built underneath Graceland, prior to faking his own death? MJ lives there now with Elvis and certain other "dead" celebrities. You don't have to be sad for him any more.'

இந்தமாதிரிப் போகுது செய்தி.


எல்விஸ் பிரெஸ்லி இன்னும் சாகவில்லை என்று அவரது பல கோடிக்கணக்கான இரசிகர்கள் இன்றும் நம்பியிறுக்கின்றனர். பலர் அவரைப் போல உடையணிந்து தாம் தான் அவர் என்றும் சொல்லித் திரிகின்றனர்.

இப்போது மைக்கேல் ஜக்சன் தான் தான் என்று கூறிக்கொண்டு பலர் கிளம்பப் போகின்றனர்.

MICHAEL JACKSON FAKED HIS OWN DEATH?


“Michael Jackson, like Elvis, is sick and tired of being larger than life and wants to get a life,” said world-renowned psychic and metaphysician Dr. Andy Reiss at the time.

“The superstar trip has trapped Michael in Neverland. Also there’s a very good chance he could end up in prison if he’s convicted of child sex abuse.

“The only way out of this mess he’s in is to fake his death, cut his hair and go underground,” says Dr. Reiss, who specializes in celebrity predictions.

Dr. Reiss believes The Gloved One will try to escape his hellish existence by “dying” in Neverland, his remote amusement park retreat.

“The cover story will be that Michael Jackson suffered a fatal heart attack while riding his Ferris wheel. Jackson’s ‘remains’ will be cremated and his ‘ashes’ will be scattered on the grounds of his estate,” he explains.

“The only way for Michael to start a fresh new life is to end the grotesque life he has now. He learned the trick from Elvis.”

———————————————————–

While Jackson did not end his days at his beloved Neverland, he did indeed “die” of a heart attack this afternoon.

மைக்கேல் ஜக்சன் தனது வாழ்க்கையின் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஒரு சுதந்திர மனிதனாக வாழ்வதற்காக தானே தான் இறந்ததுபோல் பொய்யாக நாடகமாடுகிறாராம்.

மைக்கேல் ஜக்ஸனின் பாடல் தலைப்புகளை வைத்து வந்த குறுந்தகவல்: Police say Michael Jackson's death could be suspicious they're currently looking for a smooth criminal, he could be black or white but he's definitely bad and dangerous. They got fingerprints off the wall and say say say there was a man in the mirror, so he has to be there. They would like Ben & Billy jean to come forward but they don't wanna be starting something, police say they don't stop till they get enough as they found blood on the dance floor. Its going to be a tough case but they will beat it. Police say its a real thriller.

13வது அரசியலமைப்புத் திருத்தம் மூலமான தீர்வு சாத்தியமா?


எண்பதுகளில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவதாக இருபதிற்கு மேற்பட்ட இயக்கங்கள் செய்ற்பட்டன. அவற்றில் சில தமிழ்த்திரைப் படங்களின் பெயரால் அழைக்கப்பட்டதுண்டு. விடுதலை புலிகள் இயக்கத்தை அலைகள் ஓய்வதில்லை என்ற பெயரால் அழைப்பார்கள். ஒயாமல் இலங்கை இராணுவத்தின்மீது தாக்குதல் நடாத்துவதால் இப்பெயர். புளொட் இயக்கத்தை விடியும் வரை காத்திரு என்று அழைப்பர். இலங்கை இராணுவத்தின் மீது வெறுமனே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தாக்குதல் நடாத்தாமல் தக்க தருணம் வரும்போது தாக்கவேண்டும் என்று கூறுயதால் இந்தப் பெயர். ரெலொ இயக்கத்தை தூறல் நின்று போச்சு என்று அழைப்பர். சில தாக்குதல்களை இலங்கை இராணுவத்தின் மீது நடாத்திவிட்டு பின்னர் எதுவும் செய்யாததால் இப்பெயர். இவைதவிர தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், ஈரோஸ், தமிழீழ விடுதலைப் படை போன்றவை இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடாத்துவதுண்டு. ஈரோஸ் இலங்கையின் பொருளாதரத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியது. ஆக மொத்தத்தில் இவைஎல்லாம் இலங்கை அரசிற்குப் பாரிய தலையிடியாகவே இருந்தன. இந்த இயக்கங்களால் இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தமுடியும். விடுதலைப் புலிகள் விக்டர் தலைமையில் அநுராதபுரத்தில் நாடாத்திய தாக்குதல் முழு இலங்கையையும் படு அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் 13வது அரசியல் திருத்த சட்டம் இலங்கைப் பாராளமன்றில் நிறை வேற்றப் பட்டது.

பார்த்தசாரதியின் திறமையால் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவிற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் கடப்பாடு உண்டு என்பதை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டது. பூமாலை நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படைகள் இலங்கையில் அத்து மீறிப் பிரவேசித்ததை எந்த நாடும் கண்டிக்கவில்லை. இந்தியக் கடற்படைகள் இலங்கையை சூழ நிற்க, 30,000 படையினர் பெங்களூரில் எதற்கும் தயாராக நிற்க, இலங்கையின் எப்பகுதியிலும் தமிழ் ஆயுத இயக்கங்கள் தாக்குதல் நடாத்தும் வல்லமை பெற்றிருந்த நிலையில் 13ம் அரசியல் திருத்தம் இலங்கையில் நிறைவேற்றப்பட்டது.

13ம் அரசியல் திருத்தற்கு எதிராக பலத்த எதிர்ப்பு சிங்கள மககள் மத்தியில் எழுந்தது. அவை உழங்கு வானூர்தித் தாக்குதல் மூலம் அடக்கப் பட்டது. இந்த அரசியல் திருத்தம் கிட்டத்தட்ட இந்திய மாநில அரசுக்குரிய அதிகாரங்களை இலங்கையின் மாகாண சபைகளுக்கு வழங்கியது. இந்த அரசியல் சட்டத் திருத்தம் இதுவரை தமிழர்களைப் பொறுத்தவரை அமூல் படுத்தப் படவில்லை. கிழக்கு மாகாணத்தில் தற்போது முதலமைச்சராக இருப்பவருக்கு இதன்படி அதிகாரங்கள் முழுமையாக வழங்கப் படவில்லை.

தீர்வு சாத்தியமா?
13ம் அரசியல் திருத்தம் அதிகாரப் பகிர்வு அல்ல இது ஒரு வகையான அதிகாரப் பரவலாக்கம் தான். மைய அரசு மகாண அரசை எந்நேரமும் கலைக்கலாம். இந்தியாவின் மாநில அரசை ஒரு பாரிய மாநகர சபையாகவே அரசமைப்பு அறிஞர்கள் கூறுகின்றனர். It is a glorified municipality. இப்படிப்பட்ட அதிகாரப் பரவாலாக்கல் மூலம் இனப் பிரச்சனக்குத் தீர்வு காண முடியாது.

அமூலாக்குவது சாத்தியமா?
இந்த 13ம் அரசியல் திருத்தற்கு ஜாதிக ஹெல உறுமய ஜேவிபி ஆகிய அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு இலங்கை இராணுவதின் ஆதரவுண்டு என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்ல இலங்கை இராணுவமும் இலங்கையின் இனப் பிரச்சனை தொடர்பாக ஒரு நிலைப் பாட்டில் இருப்பதாகக் கூறப் படுகிறது. இலங்க அரசாங்கத்தைப் பொறுத்த வரை எந்தவிதமான் உள்ளக அழுத்தங்களும் இதை அமூலாக்குவதற்கு இல்லை. இதற்கான அழுத்தங்களை யார் கொடுப்பார்கள்? இலங்கை மீது எந்த அழுத்தங்களையும் தாம் பிரயோகிக்கப் போவதில்லை என்று இந்திய அதிகாரிகள் கூறிவிட்டனர். அமெரிக்கா இதை அமூல் படுத்தும் படி ஒரு வேண்டு கோளை மட்டும் விடுத்துள்ளது. ஆகவே இரு முக்கிய கேள்விகளுக்கு விடை தேவை:
  • 13வது திருத்தம் நிறைவேற்றப் படுமா?
  • 13வது திருத்தம் தீர்வாகுமா?

Wednesday 1 July 2009

மனித உரிமைகள் என்றால் என்ன?


மனித உரிமைகள் என்றால் என்ன?
எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளூம் சுதந்திரமும் மனித உரிமைகள் எனப்படும்.

உரிமை என்பது எத்தைகயது?
சுதந்திரமாக மற்றவர்களைப் பாதிக்காத வகையில் செயற்படும் அனுமதி உரிமையாகும். ஒருவருக்குத் தனது கைத்தடியை சுழற்ற உரிமை உண்டு ஆனால் அது மற்றவர்மேல் படாமல் இருக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு உண்டு.
.
10-12-1948 இல் ஐக்கிய நாடுகள் சபை முதன் முதலில் உல மனித உரிமைகள் பிரகடனத்தை வெளியிட்டது. குடியுரிமை, அரசியல், பொருளாதார சமூக உரிமைகளை அனுபவிக்கும் உரிமை சகலருக்கும் உண்டென்பதி இப் பிரகடனம் வலியுறுத்தியது.
.
இப் பிரகடனத்திலும் இதன் பிறகு வந்த பல மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுதிட்ட நாடுகள் இவற்றை மதித்து நடக்கும் கடப்பாடுடையன. பல நாடுகள் இதற்கு ஏற்றாப் போல் தமது நாட்டுப் பாராளமன்றத்தில் சட்டங்களை சமர்ப்பித்து நிறைவேற்றி உள்ளன. பல நாடுகளின் மனித உரிமை ஆணையகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. இது தன்னாட்சி உடையது என்று சொல்லப்படுகிறது.
.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகம்.
இக் கழகம் 2005ஆம் ஆண்டு உருவாகக்ப் பட்டது. இது மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரிக்கும் உரிமை உள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் உப அமைப்பாகும். இதன் நிலை ஐக்கிய நாடுகளின் பாது காப்புச் சபையிலும் கீழானது. இதன் 47 உறுப்பினர்களையும் பொதுச் சபையின் 191 உறுப்பினர்கள் தெரிவு செய்வர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். இது ஜெனீவா நகரில் செயற்படுகிறது. மனித உரிமகள் கழகம் ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப் படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாது காப்புச் சபையைக் கோரமுடியும். பாது காப்புச் சபை சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக எடுக்க முடியும்:
  • நாட்டுக்கு எதிராக பொருளாதரத் தடை, பயணத்தடை விதித்தல்.
  • சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தாககுதல் செய்தல்.
இக்கழகத்தின் செயற்ப்பாட்டை அண்மையில் நாம் பார்த்தோம். இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையினை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித மனித உரிமைகள் ஆலோசனை சபை (United Nation Human Rights Council, UNHRC) முயன்று அது முடியாமல் போயுள்ளது. இலங்கை அரசிற்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்து விசாரனையினை மேற்கொள்ளாது தடுத்துள்ளன.

ஜரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மணி ஆகிய நாடுகளின் படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதல்களில் அப்பாவி மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கீட்டின் பிரகாரம் கடந்த ஆண்டு மட்டும் 2000 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இவ் வருட ஜனவரி மாதம் வரை பலஸ்தீனிய காசா பிரதேசம் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 500 மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டு இருந்தார்கள். இஸ்ரேலிய படையினர் ஐக்கிய நாடுகள் சபை கட்டிடம் மீது மேற்கொண்ட தாக்குதலில் சேதம் 10.4 மில்லியன் அமெரிக்க டொடலர் என ஐ.நாவினால் கணக்கெடுக்கப்பட்டது.

சோமாலியா , சிம்பாவே மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட இனப்பிரட்சனைகளில் பொது மக்கள் கொல்லப்பட்ட போது ஐக்கிய நாடுகள் சபை தனது கொடியினை உயர்த்தி நீட்டியது. ஆனால் பலம் பொருத்திய நாடுகள் ஈராக், ஆப்கானிஸ்தான், செச்சினியா , தீபெத் ஆகிய நாடுகளில் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட போது மெளனமாக இருந்தது. பலம் பொருத்திய நாடுகளும் தமது யுத்தத்தில் அப்பாவி மக்களை கொண்டுள்ளார்கள். மனித உரிமைகள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஓர வஞ்சனையாக (Double standard) நடந்து கொள்ளுகின்றது என இதனை மேகோள் காட்டியே அரேபிய நாடுகள் கூட்டமைப்பும் அணிசேரா நாடுகளின் அமைப்பும் கூறியிருந்தது.

என்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்



உன் கண்கள் செய்கின்றன
என் இதயத்தில்
ஊடறுப்புத் தாக்குதல்.
.
உன் புன்னகை செய்கிறது
என் உள்ளத்தில்
அதிரடித் தாக்குதல்.
.
உன் நினவு செய்கிறது
என் கனவில்
கரந்தடித் தாக்குதல்.
.
பாரா முகத்தால்
ஏன் நிதம் செய்கிறாய்
பனிப் போர்.

பொறுக்க முடியாது
உன் நாணம் செய்யும்
தற்காப்புத் தாக்குதல்
..
பஞ்சணையில் என்று
செய்வாய் உன் கைகளால்
சுற்றி வளைப்புத் தாக்குதல்

Tuesday 30 June 2009

நாடு கடந்த அரசாங்கம் என்றால் என்ன?


A government in exile is a political group that claims to be a country's legitimate government, but for various reasons is unable to exercise its legal power, and instead resides in a foreign country. Governments in exile usually operate under the assumption that they will one day return to their native country and regain power

நாடு கடந்த அரசாங்கம் என்றால் என்ன?

xU ehl;bd; muR jdJ nrhe;j ehl;by; VjhtJ fhuzq;fSf;fhf nraw;gl Kbahikapdhy; .....,d;ndhU ehl;by; my;yJ jiy kiwthfr; nraw;gLtij ehL fle;j murhq;fk; vd miof;fg;gLம்.

VjhtJ murpaw;FO nrhe;j ehl;il NtW xU muR MSifapy; சொந்த நாட்டில் தாம் இருப்பதால் அழியும் நிலை ஏற்படும் எனக்கருதி jhk; jhd; cz;ikahd muR vd;W ntW xU ehl;by; ,Ue;J வரும் காலத்தில் தமது நாட்டை விடுவிக்கும் நோக்குடன் gpufldk; nra;J nraw;gl;lhy; mJ ehL fle;j murhq;fk; vdg;gLk;.

cjhuzq;fs;.

rPdh jPngj;ij Mf;fpukpj;J Ml;rp nra;ifapy; jya; yhkh ehL fle;j murhq;fk; xd;iw epWtpAs;shu;. 1959ம் ஆண்டில் இருந்து இது இந்தியாவில் இருந்து செயற்பட்டு வருகிறது.

,uz;lhk; cyfg; Nghupd; NghJ gy INuhg;gpa ehLfs; `pl;yupd; gilfshy; Mf;fpukpf;fg; gl;l NghJ Mf;fpukpf;fg; gl;l ehLfspd; Ml;rpahsu;fs; gpupj;jhdpahtpy; ehL fle;j murhq;fk; mikj;Jr; nraw;gl;ldu;.

gu;kpa ehl;il ,uhZtk; Gul;rp %yk; ifg;gw;wpajhy; gu;kpa ehl;bdu; ehL fle;j murhq;fk; xd;iw epWtpdu;.

.....

எந்த சூழ்நிலையில் நாடு கடந்த அரசு சிறப்பாகச் செயற்படும்.

...

மாற்றான் வலிமையும் தன் வலிமையும்

நாடு கடந்த அரசு தனக்கென ஒரு ஆயுதம் தாங்கிய படையணியைக் கொண்டிருக்க வேண்டும். சீனாவும் தலய் லாமாவும் இதற்கு நல்ல உதாரணங்கள். இங்கு லாமாவின் வலிமையிலும் பார்க்க சீனாவின் வலிமை பல்லாயிரம் மடங்கு. அதனால் லாமாவின் நாடு கடந்த அரசு அர்த்தமற்ற அரசாகவே இருக்கிறது. லாமாவின் அரசு தனக்கென ஒரு படையை உருவாக்கி தீபெத்தைக் கைப்பற்றினால் அது வெற்றியாகும்.அல்லது வெளியில் இருந்துகொண்டு தீபெத்தில் பலத்த ஆயுத போராட்டத்தை வளர்த்தெடுத்தால் அது தீபெத்தின் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். ஆக மொத்தத்தில் மா சூ துங் கூறியதுபோல் ஆட்சி அதிகாரம் துப்பாக்கி முனையில் பிறக்கிறது.

....

மற்ற நாடுகளின் அங்கீகாரம்.

மற்ற நாடுகள் பல அதிகாரத்திலிருக்கும் அரசைவிட நாடு கடந்த அரசு நாடுகடந்த அரசை அங்கீகரித்திருந்தால் அதிகாரத்திலிருக்கும் அரசிற்கு பல நெருக்கடிகள் தோன்றும். இந்நாடுகள் அதிகாரத்திலிருக்கும் அரசின் மீது பொருளாதாரத்தடையை ஏற்படுத்துங்கால் அதிகாரத்திலிருக்கும் அரசு கவிழ்ந்து நாடு கடந்த அரசு பதவியைக் கைப்பற்ற வாய்ப்புண்டு.

...

மற்ற நாடுகளின் படை உதவி

மற்ற நாடு ஒன்றின் அல்லது பலவற்றின் உதவியுடன் தமது நாட்டிற்குப்..... .. படை எடுத்து தமது ஆட்சியை தம்து நாட்டில் நிலை நாட்டலாம்.

....

பாரிய உள் நாட்டுக் கலவரம்.

பாரிய உள் நாட்டுக் கலவரம் ஒன்று ஏற்பட்டு அதிகாரத்தில் இருக்கும் அரசு ஆட்டம் காணும் போது நாடு கடந்த அரசு அங்கு சென்று தனது அதிகாரத்தை நிலை நாட்டலாம்.

....

பாரிய இயற்கை அழிவு.

பாரிய இயற்கை அழிவு ஏற்பட்டு அதிகாரத்தில் இருக்கும் அரசு அழிந்தோ அல்லது செயற்பட முடியாமற் போகுமிடத்து நாடு கடந்த அரசு அங்கு சென்று தனது அதிகாரத்தை நிலை நாட்டலம்.

....

நாடு கடந்த அரசிற்கு தேவையானது.

  • படை பலம்.
  • கணிசமான நாடுகளின் நேரடியான அல்லது மறை முகமான அங்கீகாரம்.
  • பண பலம்.
  • உறுப்பினர் பலம்.
  • சொந்த நாட்டில் பலத்த திரை மறைவு ஆதரவு.
தமிழர்கள் அமைத்துள்ள நாடு கடந்த அரசாங்கம் மற்ற நாடு கடந்த அரசாங்கங்களில் இருந்து வேறு பட்டது. தமிழர்கள் அமைத்தது Trans National Government மற்றைய அரசுகள் Government in exile.

Trans National Government இற்கும் Government in exile இடையிலான வேறு பாடு
Trans National Government என்பது ஒரு இனக் குழுமம் தனது நாட்டிலிருந்து அல்லது தாம வாழ்ந்த நாடுகளிலிருந்து வெளியேறிமையால் அல்லது வெளியேற்றப் பட்டமையால் தாம் ஒன்று கூடி தமக்கென ஒரு அரசை அமைப்பது. இப்படி யூதர்கள் செய்தார்கள். ஆனால் தமிழர்கள் ஒரு தேர்தல் மூலம் தமது அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வகையான தேர்ந்தெடுக்கப் பட்ட நாடுகடந்த அரசு முதல் முறையாக தமிழர்கள் உருவாக்குகிறார்கள். Government in exile என்பது ஒரு அரசு தோற்கடிக்கப் பட்டதால் தனது நாட்டிலிருந்து ஆட்சியாளர்கள் வெளியேறி வேறு ஒரு நாட்டில் செயற்படுவது.

Monday 29 June 2009

விகடனின் கபடம் – பிரபாகரனின் இறப்பு



 விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை விகடன் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ஈழத்தைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தியது. அதன் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முடிவுகள் புலிகளுக்கும் ஈழத்திற்கும் பலத்த ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டியது. அதன் பிறகு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளிவிட்டது. இதில் விடுதலிப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டன. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்த சாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. (அவர் எப்படி சட்டக்கல்லூரியில் தேர்ச்சி பெற்றார் என எமக்குத் தெரியும்.) இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும். நானும் எனது நண்பர்களும் இதற்கு எதிராக தெரிவித்த பல கருத்துக்கள் அங்கு பிரசுரிக்கப் படவில்லை. நாம் விகடனைப் பரிசோதிப்பதற்காக சில பார்ப்பனியர்களை தாக்கி பின்னூட்டம் எழுதுவோம். அவை பிரசுரிக்கப் படுவதில்லை. 

விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை. .
பிரபாகரனின் முடிவு இரு வாரங்களுக்கு முன்னர் பிரபாகரனின் முடிவு பற்றி கொழும்பின் ஒரு கதை பரவி இருந்தது. பிரபாகரன் சரின் நஞ்சு வாயுக் குண்டு மூலம் மயங்க வைக்கப் பட்டு கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப் பட்டு கொல்லப் பட்டார். கைது செய்யப் பட்டவர்களுள் பிரபாகரனின் மனைவி மதிவதனி 14 வயது மகன் பாலச்சந்திரனும் அடங்குவர். தந்தைமுன் மகன் சித்திரவதை செய்யப்பட்டார். இந்த மாதிரிப் போனது அப் பொய்க்கதை. உண்மையில் எஞ்சியுள்ள ஒவ்வொரு விடுதலைப் புலிகளின் பிரிவுகள் ஒவ்வொன்றாக பிரபாகரன் இறந்துவிட்டார் என்று ஒத்துக் கொண்டபின் கொழும்,பிலுள்ள தமிழ்த்தேசிய விரோதிகள் பிரபாகரன் எப்படி இறந்தார் என்று கதை கட்டுவது என்று அறை போட்டு யோசிக்கத் தொடங்கிவிட்டனர். விடுதலைப் புலிகள் தரப்பில் பிரபாகரன் எப்படி இறந்தார் என்று தெரிவிக்கவில்லை. அது இவர்களுக்கு மிக வசதியாகப் போய்விட்டது. அவிழ்த்து விட்டாங்களய்யா ஒரு கதை. இக்கதை விகடன் முன்னர் வெளியிட்ட பிரபாகரனின் முடிவு தொடர்பான பலகதைகளுக்கு முரண்பாடானது.ஜுனியர் விகடன் தனது கடைசிப் பதிவில் இக் கட்டுக்கதையைப் பிரசுரித்துள்ளது. . விகடனின் கதை இப்படிப் போகிறது: ''பிரபாகரனின் நெற்றியின் மேல்பகுதியில் ஜெனரல் ஜகத் டயஸ் என்ற ராணுவ அதிகாரி அங்கிருந்த கோடரியால் தாக்கியதைத் தொடர்ந்தே இறப்பு நிகழ்ந்ததாக ராணுவத் தரப்பிலிருந்து தகவல் வருகிறது. அதற்கு முன்பாக, காய்ச்சிய கம்பிகளாலும் பிரபாகரன் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். அந்த வரிக் காயங்கள் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் நந்திக்கடல் நீர்நிலை அருகே உடம்பைக் கண்டெடுத்தாகக் காட்டிய பதிவுகளில், உடையோடு காட்டினார்கள். சீருடை இல்லாமல் காட்டிய மற்றொரு படத்தில் காயங்களின் மீது சேற்றைப் பூசி வைத்திருந்தார்கள் போலி ருக்கிறது...'' என்றும் சொல்கிறார் இவர். . இப்பதிவின் நோக்கம் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது பற்றியல்ல. அவர் எப்படி இறந்தார் என்பது பற்றியுமல்ல. தமிழ்த் தேசியத்தின் விரோதிகளின் பொய்ப் பிரசாரங்களைப் பற்றியதே. . இலங்கை அரசு பிரபாகரனின் இறந்த உடலின் பல படங்களை வெளியிட்டது. இதில் எந்தப் படமும் பிரபாகரனுடையது அல்ல. மேலுள்ள இரண்டு படங்களையும் பாருங்கள். தலையில் காயத்துடன் இருக்கும் படம் இலங்கை அரசு வெளியிட்ட படம் அதையே விகடனும் மறு பிரசுரம் செய்துள்ளது. மற்றப் படம் உண்மையான பிரபாகரனின் படம். பிரபாகரனின் அகன்றமுகம் இறந்த உடலில் இல்லை. நாடியின் மத்தியில் உள்ள பிளவைக் கவனியுங்கள். பிரபாகரனின் தோற்றமுடைய கொழும்பு நகைக் கடை உரிமையாளர் எங்கே? அவர் எப்படிக் காணாமற் போனார்? ஏன் காணாமற் போனார்? சிந்தித்துப் பாருங்கள் ஏதாவது விடை கிடைக்கும். . இலங்கை அரசு வெளிவிட்ட எந்த ஒரு படத்திலும் அதன் முகம் சரின் நஞ்சுக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான ஒருவரின் முகம்போல் இல்லை. சரின் குண்டுத் தாக்குதலுக் குள்ளானவர்களின் படங்களை இதற்கு முன்னர் தொலைக் காட்சிகளின் பார்த்திருக்கிறேன். முகம் நன்கு கறுதிருக்கும். சரின் நஞ்சுக் குண்டுகளைப் பற்றி ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்: In 1995, Japan's Aum Shinrikyo cult unleashed sarin gas in Tokyo's subways, killing 12 people and sickening thousands. In February of this year, Japanese courts convicted the cult's former leader, Shoko Asahara, and sentence him to be executed. Developed in the mid-1930s by Nazi scientists, a single drop of sarin can cause quick, agonizing choking death. Nerve gases work by inhibiting key enzymes in the nervous system, blocking their transmission. Small exposures can be treated with antidotes, if administered quickly. Antidotes to nerve gases similar to sarin are so effective that top poison gas researchers predict they eventually will cease to be a war threat. xxx Even at very low concentrations, sarin can be fatal. Death may follow in one minute after direct ingestion of a lethal dose if antidotes, typically atropine and pralidoxime, are not quickly administered.[2] Atropine, an antagonist to muscarinic acetylcholine receptors, is given to treat the physiological symptoms of poisoning. Since muscular response to acetylcholine is mediated through nicotinic acetylcholine receptors, atropine does not counteract the muscular symptoms. Pralidoxime can regenerate cholinesterases if administered within approximately five hours. It is estimated that sarin is more than 500 times more toxic than cyanide.[7] The short- and long-term symptoms experienced by those affected included: coma convulsions death difficulty breathing disturbed sleep and nightmares extreme sensitivity to light foaming at the mouth high fevers influenza-like symptoms loss of consciousness loss of memory loss of bowel control nausea and vomiting paralysis post-traumatic stress disorder respiratory problems seizures uncontrollable trembling vision problems, both temporary and permanent.

முதலில் plasticine clayஆல் செய்யபட்ட ஒரு முகத்தை இறந்த ஒருவரின் தலையில் பொருத்திக் காட்டினார்கள் அது மேலுள்ள படத்தின் இடதுபக்க மேல் மூலையில் உள்ளது. அதில் நன்கு சவரம் செய்யப்பட்ட முகம்.  நாள் முழுக்க குண்டுமழைக்கு நடுவில் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு முகம் சவரம் செய்து அழகாக தோற்றமளிக்க முடியுமா என்றும் தலை பிளந்து இரத்தம் போன பின்பு முகம் சுருங்காமல் இருக்குமா என்ற கேள்வி எழுப்பிய பின்னர் வேறு ஒருவரின் உடலை சவரம் செய்யாத முகத்துடன் காட்டினார்கள். பிரபாகரனின் நாடியில் உள்ள பிளவு இலங்கை அரசு வெளியிட்ட இரண்டு படத்திலும் இல்லை. 

பிரபாகரனின் உடல் என்று யாரோ ஒருவருடைய உடலை சவரம் செய்யப்படாத முகத்துடன் பின்னர் படமாக வெளியிட்டனர். பிரபாகரனைப் போல் தோற்றமுடைய ஒருவர் கொழும்பில் நகைக்கடை வைத்திருந்தார். அவர் 2009 மே மாதத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். மேலுள்ள படத்தின் வலது பக்க மேல் மூலையில் உள்ள படம் அதுவாக இருக்கலாம். 

இலங்கை அரசின் உளவுத்துறை பொய்ப்பரப்புரைக்காக பெரும் செலவு செய்கின்றது. அதில் கணிசமான பகுதி விகடன் குழுமத்திற்கு செல்கின்றதா? சென்னைக்கான துணைத்தூதுவரகத்தில் பணிபுரியும் ஹம்சா குணவர்த்தனா எப்படி தமிழ்நாட்டு ஊடகர்களை தன் கைப்பொம்மைகளாக வைத்து ஆட்டிப்படைத்தார் என்பதை நாம் அறிவோம். 

Sunday 28 June 2009

இல்லாத புலிகளுக்கு என் இந்தப் பயமோ?


  • அமெரிக்காவின் இராசாங்க அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தனது நட்டினரை இலங்கைக்குச் செல்ல வேண்டாமென்று எச்சரித்துள்ளது.
  • அமெரிக்கா விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடித்துள்ளது.
  • இலங்கை அரசு இன்னும் அவசர கால நிலைமையின் கீழ் நாட்டை வைத்திருக்கிறது.
  • இலங்கைப் படைத்துறை மேலும் தமக்கு நாற்பதினாயிரம் படையினர் புதிதாகத் தேவை என்று சொல்கிறது.
விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டி நாட்டைப் பயங்கர வாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து விட்டோம் என்று வெற்றி விழாவும் கொண்டாடி மகிழ்ந்துவிட்டார்கள். கிழக்கில் உதயம் வடக்கில் வசந்தமும் ஏற்பட்டுவிட்டதாக அறிவித்தாயிற்று. இன்னும் ஏன் இந்த புலிப் பூச்சாண்டி?.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...