Saturday 16 May 2009

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி சொர்ணம் கொல்லப் பட்டதாக இலங்கை அறிவிப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி சொர்ணத்தையும் சசி மாஸ்டரையும் கொன்று விட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மூவரில் ஒருவர் சொர்ணம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்த 50 உறுப்பினர்களில் சொர்ணமும் ஒருவர். அந்த 50 பேரில் பிரபாகரன், பொட்டு அம்மான் (சண்முகலிங்கம் சிவசங்கரன்) விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், சொர்ணம் எனப்படும் அந்தனிதாஸ் ஆகிய மூவருமே எஞ்சி இருந்ததாகச் சொல்லப் பட்டது. சசி மாஸ்டர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நில அளவைப் பிரிவின் பொறுப்பாளர் ஆவார். இவர்கள் இருவரையும் இன்று 16ம் திகதி நடந்த சண்டையில் கொன்று விட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவம் இவர்கள் கொல்லப்பட்ட விபரம் எதையும் வெளியிடவில்லை. இவர்கள் உடல்கள் கைப்பற்றப் பட்டதாகவும் தகவல் இல்லை.

இலங்கை அரசின்மீது போர்க்குற்றம் சுமத்தப் படலாம்


இலங்கையின் வட பகுதியில் பாரிய மனிதாபிமானப் பிரச்சினையை தோற்றுவித்துள்ள அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நவநீதம் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒரு நடவடிக்கை இப்போது அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். வடபகுதிப் போர் முனையில் என்ன நடைபெறுகின்றது என்பதற்கு சரியான கணக்கு எதுவும் இல்லை எனத் தெரிவித்த அவர், "கடுமையான எறிகணைத் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பகுதியில் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன" எனவும் குறிப்பிட்டார்.
.
.
பக்கச்சார்பற்ற கண்காணிப்பாளர்களையும், ஊடகத்துறையினரையும், தொண்டு நிறுவனங்களையும், அனைத்துலக அவதானிப்பாளர்களையும் போர்ப் பிரதேசத்திற்கு சென்று, அங்கு என்ன நடக்கின்றது என்பதை பார்க்க விடாமல் தடுப்பது என்பது, அவ்வாறு தடுப்பவர்கள் எதையோ மறுக்கின்றார்கள் எதையோ மறைக்க முனைகின்றர்கள் என்பதையே காட்டுகின்றது எனவும் அவர் மேலும் தெரித்தார்.
.
.
இதுதொடர்பில் நவநீதம் பிள்ளைஅவர்களது பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில் கருத்து தெரிவிக்கையில் போர்க்குற்றம் என வகைப்படுத்துவதற்குரிய ஆதாரங்கள் தமக்கு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Friday 15 May 2009

கடற் புலிகளின் தலைவர் சூசையின் குடும்பத்தினரைக் கைது செய்ததாக இலங்கை தெரிவிப்பு


விடுதலைப் புலிகளின் கடற் படைத் தளபதி சூசை அவர்களின் குடும்பத்தினர் தப்பி ஒடிய படகைத்தாம் கைப்பற்றி அதில் இருந்த சூசையின் மனைவி சத்தியதேவியையும் மகன் சுரேஸையும் மகள் மதியையும் மைத்துனியையும் மருமகனையும் தாம் கைது செய்ததாக இலங்கைக் கடற் படை அறிவித்துள்ளது.
.
முன்னர் பிரபாகரனின் மகள் துவரகாவைக் கைது செய்ததாகவும் இலங்கைக் கடற் படை அறிவித்திருந்தது!!!!
.
அதற்கு முன்னர் சூசை தப் பி ஓடிவிட்டதாகவும் அறிவித்தது!!
அதற்கு முன்னர் சூசை கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவித்தது!!!
அதற்கு முன்னர் சூசையும் மகனும் தப்பி ஓடுகையில் விடுதலை புலிகள் தாக்கி சூசை படுகாயம் என்றும் மகன் கொல்லப் பட்டதாகவும் அறிவித்தது!!!

பலத்த பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கும் இலங்கை


அண்மைக் காலங்களில் இலங்கை இராணுவம் பலத்த இழப்புக்ளைச் சந்தித்து வருகிறது. சென்ற வாரம் அநுராதபுரத்தில் உள்ள மருத்துவ மனைகள் காயப்பட்ட பெருந்தொகையான இராணுவத்தினரால் நிரப்பப்பட்டன. இப்போது அநுராதபுர மருத்துவ மனைகளில் இட நெருக்கடியால் காயப்படும் இராணுவத்தினர் கொழும்பிற்கு எடுத்துச் செல்லப் படுகின்றனர். கடந்த மூன்று தினங்களாக நோயாளர் காவு வண்டிகள் பல கொழும்பு வீதிளில் பெருமளவில் ஓடித்திரிந்தன. இவை பல இராணுவத்தினர் இறப்பதையும் காயப் படுவதையும் எடுத்துக் காட்டுகின்றன. இனி வரும் காலங்களில் இறந்த இராணுவத்தினர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதிலும் காயப் பட்ட இராணுவத்தினரை பராமரிப்பதிலும் இலங்கை அரசிற்கு பெருந் தொகைப் பணம் தேவைப்படும்.
.
.
சர்வ தேச நாணய நிதியத்தின் கடன் கிடைப்பது சிரமம்.
ஹிலாரி கிளிண்டன் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இல்ங்கைக்குக் கொடுப்பது பற்றி கருத்தில் எடுத்துக்கொள்ள உரிய நேரம் இதுவல்ல என்று தெரிவித்துள்ளார். சர்வ தேச நாணய நிதியத்தின் கடன் இலங்கைக்கு கொடுப்பதை பிரித்தானியாவும் எதிர்த்தே ஆகவேண்டும். அல்லது அது உள்ளூரில் அதற்கு நெருக்கடியைக் கொடுக்கும்.
.
.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை நிறுத்தப் படுமா?
ஐரோப்பிய ஒன்றியம் GSP+ என்ப்படும் வரிச் சலுகையை சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து இலங்கைக்கு வழங்கியிருந்தது. :
This means a saving of 12.5pc for textiles and garments and 15pc for all other goods. In 2003 the UK absorbed around 13pc of Srilanka's exports, but the good news for UK companies is that the components of much of this trade originates in Britain.
இந்த வரிச்சலுகையை விலக்கக் கோரி ஐரோப்பியா வாழ் தமிழர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கிறது. Marks & Spencer இந்த வரிச்சலுகை தொடர்ந்து வழங்கப் படவேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப் படும் அநீதிகளை நன்கு அறிந்த சுவீடன் அடுத்த தலமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் நிலையில் இவ்வரிச் சலுகை அந்தரத்தில் தொங்குகிறது!!!

உலக நாடெங்கும் நடக்கும் தமிழர்கள் போராட்டம் இலங்கைக்கு எதிரான அபிப்பிராயத்தை உலக மக்கள் மனதில் ஏற்படுத்தி வரும் நிலையில் இலங்கையின் உல்லாசப் பிரயாணத் துறை மேலும் பாதிக்கப் படலாம். தமிழ்நாட்டுத் தேர்தலில் ஆளும் கட்சிகள் வாங்கிய அடி இந்தியா இனிப் பணத்தை இலங்கைக்கு வாரி இறக்கத் தயங்கலாம். ஆக மொத்தத்தில் இலங்கைக்கு பெரும் பொருளாதார நெருக்கடி காத்திருக்கிறது.

Thursday 14 May 2009

உன்னோடு ஏன் வந்தது


உனை அணைத்த கைகள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை

உன் பெயர் உரைத்த உதடுகள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை

உனை நாடி நடந்த கால்கள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை

உனைச் சுமந்த என் இதயம்
என்னோடில்லை
உன்னோடு ஏன் வந்தது

பிரித்தானியாவில் அவதானிக்கப் பட்ட பறக்கும் தட்டு - காணொளியுடன்.

பிரித்தானியாவில் பிரிஸ்டல் நகரில் அண்டி ஹடிங்ரன் என்பவர் வானில் தெரிந்த ஒரு நூதனமான பொருளைப் படம் பிடித்துள்ளார். அந்த நூதனமான பொருள் சென்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 5:30 மணியளவில் வானில் தென்பட்டதாம். இதை வேறும் பலர் அவதானித்தார்களாம். பறந்து சென்ற நூதனமான பொருளில் இருந்து சத்தம் ஏதும் வரவில்லையாம்.

ரெலிகிறாf பத்திரிகை இதன் ஒளிவடிவத்தை வெளியிட்டுள்ளது
::

ஐரோப்பாவில் இரத்தக் களரிக்கு தூபம் போடும் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு



சென்ற சனிக்கிழமை (8ம்திகதி) பிற்பகல் பிரித்தானியப் பாராளமன்ற சதுக்கத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் பகுதியில் உள்ள குப்பைகளைப் பொறுக்கி துப்பரவு செய்பவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். அப்போது முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவர் என்னிடம் வந்து பிரதர் முன்று மற்றப் பாட்டிக்காரர் வந்து நிக்கிறாங்கள். ஆர்ப்பாட்டம் செய்யும் பெண் பிள்ளைகளைப் பற்றி அசிங்கமாக விமர்சிக்கிறாங்கள் வாங்கோ ஒருக்கா என்று என்னைக் கூப்பிட்டார். அவர் இலங்கைத் தமிழைப் பேசுவது போலிருந்தாலும் அதன் போலித்தனம் தெளிவாகத் தெரிந்தது. அவரை ஐயர் என்று அழைப்போமே!! நானும் போனேன். மூவரச் சுட்டிக்காட்டினார். ஒருவன் சிங்களவன் ஒருவன் தமிழன் மற்றவன் முஸ்லிம் என் று முவரையும் எனக்குக் காட்டினார். அதில் சிங்களவர் ஒரு இடத்திலும் மற்ற இருவரும் வேறிடத்திலும் நின்றனர். சிங்களவர் என்று சொன்னவரை நான் நன்றாக கவனித்தேன். அவர் என்னையும் என்னுடன் நின்றவரையும் பார்த்தார். மற்றவர்கள் இருவரின் இருவருக்கும் அண்மையில் சென்று நின்றேன். என்னுடன் கதைத்த ஐயரும் அங்கு வந்தார். அவர்கள் பிரச்சனைக்கு உரியவர்கள் என்று தெரிந்த்தது. நான் ஆர்ப்பாட்ட ஏற்ப்பாட்டாளர்களிடம் சொன்னேன். அவர்கள் சொன்னார்கள் இப்படிப் பட்டவர்கள் தினம் வருவதுண்டு அவர்களை அப்படியே விட்டு விடுவோம் என்றார். ஆனால் அவர்களைப் புகைப்படங்கள் எடுக்க விடுவதில்லை என்றார்கள். நான் அதை ஐயரிடம் கூறினேன். அவர் இல்லை இல்லை இவங்களைச் சும்மா விடக் கூடாது என்று பலகதைகள் கூறி அங்கு ஒருகுழப்பம் ஏற்படுத்துவதற்கான முயற்ச்சியில் முனைப் பட்டார். இப்போது எனது தோளில் இருந்த புகைப்படக் கருவியின் பை கீழே விழுந்துவிட்டது. ஐயர் இப்போது அதை எனக்கு எடுத்துத் தருவதற்கு குனிந்தார். அவர் பூனூல் அணிந்திருப்பது தெரிந்தது.
பின்னர் எனக்கு நிலமை புரிந்துவிட்டது. ஒருவாறு அவரிடமிருந்து விலகிவிட்டேன். சில மணித்தியாலங்களின் பின் வீடு திரும்ப சுரங்க தொடரூந்து நிலையத்திற்கு சென்ற போது அந்த ஐயர் மற்ற மூவருடனும் ஒரு மூலையில் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்!!!!!!

இந்தியத் தூதுவரகத்தின் மீது கல் வீச்சு - சதி வேலையே
இலண்டனில் உள்ள இந்தியத் தூதுவரகத்தின் முன்னர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது தூதுவரகத்தின் மீது கல்வீசியவர்கள் வெளியில் இருந்துவந்த உள்வாளிகளே என்று தமிழர்கள் கூறுகிறார்கள். தங்கள் நிகழ்ச்சித் திட்டத்தில் அப்படி ஏதும் இருந்திருக்கவில்லை. இச் சம்பவம் ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் உள்வாளிகளின் வேலையே என்று தமிழர் தரப்பு கூறுகிறது.
.
வடக்கு இலண்டன் விஹாரை மீது தாக்குதல்
வடக்கு இலண்டன் விஹாரை மீது இரு முறை தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளது. இதுவும் ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் உள்வாளிகளின் வேலையே என்று தமிழர் தரப்பு கூறுகிறது.

பிரான்சில் தாக்குதல்கள்
பிரான்சில் பெளத்த விஹாரை மீதும் அதைத் தொடர்ந்து சைவக் கோயிலின்மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக சிங்கள இளைஞர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்ககும் போது ஐரோப்பாவில் முனைப்புப் பெற்றுவரும் தமிழ்தேசிய வாதத்தை அசிங்கப் படுத்த ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் உள்வாளிகள் ஒரு நாசகார வேலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது புலனாகிறது.

Wednesday 13 May 2009

Love is like a gamble


I used to love a girl
With all my heart
I was thinking of none but her
She made me bright
Holding her very tight
Dancing under dim light
Walking through the night
She messed me with my heart
She never realizes how I felt
Love is like a gamble
Hard to see the outcome
I want to live without woe
With someone with me forever

இந்தியாவின் வைத்திய குழு மனித உறுப்புகள் திருடுகிறதா??

கொடூரமான படங்கள்!! நான் பார்த்துப் பதறிவிட்டேன்!!!

உங்களுக்கு மனத்தைரியம் இருந்தால் பாருங்கள்:

http://www.tamilwin.org/view.php?2aSWnBe0d1j0g0ecGG7B3b4j9EE4d3g2h2cc2DpY3d436QV3b02ZLu2e

சிங்களத்தை சுற்றி வளைக்கும் தமிழர்கள்

இராணுவ ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் இந்தியா சிங்களத்திற்கு பக்க பலமாக நின்று செயல்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் விஜய் நம்பியார் செய்த அடாவாடித்தனம், இரசியா பாதுகாப்புச் சபையில் கொடுக்கும் முட்டுக் கட்டை ஆகியன சர்வதேச ரீதியில் இலங்கையின் இனப் படு கொலைக்கு இந்தியா கொடுக்கும் கள்ளத்தனமான ஆதரவிற்கு நல்ல எடுத்துக் காட்டு. இந்த இந்தியாவின் கள்ளத்தனத்தை தகர்தெறிய உலகெங்கும் வாழ் தமிழர்கள் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர். அவர்கள் இரவு பகலாக செய்யும் பல போராட்டங்கள் சில அரசுகளின் கொள்கை வகுப்பாளர்களிடம் மன மாற்றம் எற்படுத்துவது உண்மை. தமிழர் பிரச்சனை பலநாடுகளில்நாடாளாவிய ரீதியில் பிரபல மடைந்து வருகிறது. நான் இலங்கையில் நடக்கும் கொடுமைகளை என்னுடன் வேலை செய்பவர்களுக்கு எடுத்துச் சொல்வதுண்டு. சுமார் 3 மாதங்களிற்கு முன் இதற்காக மிகச் சிரமம் எடுத்துக் கொண்டதுண்டு. இப்போது கலையில் அவர்களாக வந்து இலங்கையில் நேற்று அரச படைகள் மருத்துவ மனையைத் தாக்கியதாம் என்று அவர்களாகவே வந்து எனக்கு செய்தி சொல்லும் அள்விற்கு மாறிவிட்டது. வானொலி தொலைக்காட்சி பத்திரிகைகள் எல்லாவற்றிலும் அவ்வப்போது இல்ங்கைச் செய்திகள் வெளிவருகின்றன. இன்றைய ரைம்ஸ் பத்திரிகை இப்படிக் கூறுகிறது:
Slaughter in Sri Lanka
The world must force Colombo to halt the shelling of trapped civilians.

மேலும் வாசிக்க: http://www.timesonline.co.uk/tol/comment/leading_article/article6276147.ece

இங்கு Slaughter என்பது மிகக் கடுமையான பதம் என்பதைக் கவனிக்கவும்.
.
பிரித்தானியாவின் பாராமுகக் கொள்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தமிழர்கள் கூறுகின்றனர். பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழர்கள் சர்வதேச ரீதியாக இலங்கை அரசிற்கு எதிராக போர்க் குற்றதிற்கான சட்ட நடவடிக்கை எடுக்க விருக்கின்றனர்.

பிரித்தனிய பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டு முயற்சி, பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சரதும் ஹிலரி கிளிண்டனதும் கூட்டறிக்கை எல்லாம் உலகத் தமிழர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. உலகத்தமிழர்களின் போராட்டங்கள் இப்போதைக்கு ஓய்விற்கு வருவதாகத் தெரியவில்லை.

சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள இஸ்ரெலிய இராச தந்திரி ஒருவர் இலங்கை அரசிடம் தெரிவித்த கருத்து:

"நீங்கள் இங்கு தமிழர்களைச் சுற்றி வளைக்கிறீர்கள், உலகெங்கும் உள்ள தமிழர்கள் உங்களைச் சுற்றி வளைக்கிறார்கள்"

படிக்கட்டும் ஒரு பாடம் இத்தாலிச் சனியாள் கட்சி


படிக்கட்டும் ஒரு பாடம்

இத்தாலிச் சனியாள் கட்சி

உலகத்தில் எந்த மூலையில்

தமிழ் உறவுகளுக்கு எதிராக

ஒரு துரும்பு அசைந்தாலும்

திரண்டெழுவான் மானத் தமிழன்

கொதித்துப் பொங்கிடுவான்

கொலை வெறி கொள்வான்


படிக்கட்டும் பெரும் பாடம்
தமிழின விரோதிகள் கூட்டம்
ஓடட்டும் தமிழ் மண்ணை விட்டு
தறிகெட்டுத் தலை தெறிக்க
அடிபட்டு உதைபட்டு
அவமானப் பட்டு அல்லல் பட்டு
ஓடட்டும் தமிழ் மண்ணைவிட்டு
.
படிக்கட்டும் புதுப்பாடம்
மத்தியில் வரும் ஆட்சிகள்
மறத்தமிழனுக்கு இங்கே
இன்னல் கொடுத்தால்
அடிபடுவீர் அனைவரும்

Tuesday 12 May 2009

இத்தாலிச் சனியாள் சென்னையில் சொல்லிப் புட்டுப் போன சேதி என்ன?

சேலையணிந்த்தொரு முசொலினி சென்னை வந்தாள்!!!
அவள் சொன்ன சேதிகள் என்ன? என்ன??????


இழவு வீட்டில் வந்து
பாயாசம் என்ன பாயாசம்
பொணத்தில் உட்கார்ந்து
பிரியாணியே சாப்பிடுவேண்டா!!
பொத்திக்கிட்டுப் போங்கடா
போக்கத்த பயலுகளா!!


இலங்கையில் தமிழர்க்கு சமத்துவம் பெற்றுக்
கொடுப்பேன் என்று நான் சொன்னா
கேட்டுப் புட்டு கை தட்டுங்கடா கையாலாகாத நாய்களா!!!

முடிச்சவிக்கி கெழட்டுப் பயல் தின்னாமல் இருந்தான்!!
நான் சொன்னேன் ஓட்டைவாய ராஜபக்சேவிற்கு
நிறுத்தடா மொள்ள மாரியே சண்டை எண்டு!!!
நிறுத்திட்டாங்க அவங்க என்று நான் சொன்னா
நம்புங்கட நாதியற்ற நாதாரிப் பயலுகளே

Monday 11 May 2009

தமிழர்களை கள்ளத்தனமாக "ரவுண்டு கட்டித்" தாக்கிய இலண்டன் காவல் துறையினர்.











நேற்றைய தினம் -11ம் திகதி - பிரித்தானிப் பாராளமன்றத்தின் முன் கூடி நாலு பெருந்தெருக்களை முடக்கி அங்குள்ள தமிழர்கள் இலங்கையில் 3200ற்கு மேற்பட்டோர் கொல்லப் பட்டதற்கு எதிராக மறியல் போராட்டம் செய்தனர்.
.
மூன்று காவல் வலயம்
ஒரு மாதத்திற்கு மேல் தமிழர்கள் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் இரவு பகலாக தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இவர்களைச் சுற்ற மூன்று வலயமாக காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதல் வலயம் ஆயுதம் தரிக்காத நகரக் காவல் துறையினர். இரண்டாவது வலயம் குண்டாந்தடி போன்ற சிறு ஆயுதங்கள் தாங்கிய கலகம் அடக்கும் காவல் துறையினர். இவர்கள் ஆர்ப்பாட்டக் காரர்களிலிருந்து தொலைவில் நிற்கின்றனர். மூன்றாம் வலயம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு. இவர்கள் செந்நிற வாகனங்களுக்குள் இருப்பார்கள் இவர்கள் என்ன ஆயுதம் வைத்திருப்பார்கள் என்று காண்பது கடினம். இத்தனை காவல் வலயங்களுக்கு மத்தியிலும் ஒருமாதத்திற்கு மேல் தொடர் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர் தமிழர்கள்.
,
நேற்று தமிழர்கள் 3200 தமிழர்கள் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து கொதித்து எழுந்து பாராளமன்றத்தின் முன் உள்ள நான்கு தெருக்களில் மறியல் செய்தனர். காலை 11-30 இற்கு இது ஆரம்பமானது. பலத்த வாகன நெரிசல் இலண்டன் நகர் முழுக்க ஏற்பட்டது. பாராளமன்றத்திற்கான பிரதான வாசல் மூடப் பட்டது. காவல் துறையினர் முதலில் பேச்சு வார்தை மூலம் தீர்க்க முற்பட்டனர். தாம் 3 நாள்கள் தொடர்ந்து மறியல் செய்யப் போவதாக தமிழர்கள் அறிவித்தனர்.

புதிய உத்தியைக் கையாண்ட காவல் துறையினர்
இப்படிப்பட்ட மறியல்களை கண்ணீர்ப்புகை அல்லது தண்ணிர்த் தாரை அடித்து கலைப்பது முடியாவிட்டால் குதிரைகளில் வந்து தாக்கிக் விரட்டுவது போன்றவற்றை காவல் துறையினர் செய்வது வழக்கம். இதில் மரணங்களும் நிகழ்வதுண்டு. இது இளையோரை மட்டும் கொண்ட கூட்டங்களில் செய்யலாம். ஆனால் தமிழர்கள் மத்தியில் முதியோரும் கைக்குழந்தைகளும் நிறைந்து காணப்பட்டனர். பலர் மரணமடைவதையும் பத்திரிகைகளின் கண்டனங்கள் அரசியல் வாதிகளின் அறிக்ககைள் ஆகியவற்றைத் தவிர்க்க காவல் துறையினர் புது உத்தியைக் கையாண்டனர். பெருமளவில் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டு உள் நுழைந்து ஒருவர் அல்லது இருவரை சுற்றி வளைத்து இரும்புக் கம்பிகளால் இடுப்புக்குக் கீழ்த் தாக்கியும் காலால் உதைத்தும் கைது செய்தனர். இதைப் பத்திரிகையாளர்களால் படம் பிடிக்க முடியவில்லை. ஒரு வயதும் நிறையாத குழந்தையுடன் நின்ற ஒரு 19 வயதுத் தாய் தன்னை நான்கு காவல் துறையினர் சூழ்ந்து நின்று தாக்கியதாகவும் குழந்தையை இழுத்துப் பறித்ததாகவும் கூறினார். இப்படியான தாக்குதல் மூலம் மூன்று வீதிகளிலிருந்து தமிழரக்ளை அப்புறப் படுத்தினர். தமிழர்களின் ஆத்திரத்தை தணிக்கு முகமாக அவர்களை ஒரு வீதியில் அமர்ந்து மறியல் செய்ய அனுமதித்தனர். பின்னர் அவர்களைச் சுற்றி வளைத்து நின்று வேறு தமிழர்கள் உட்செல்லாதவாறு தடுத்து வருகின்றனர். உள் நிற்பவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கின்றனர். உள்நிற்பவர்கள் சாப்பிட நீர் அருந்த இயற்கைக் கடன்கள் செய்ய எப்படியும் வெளியே வந்துதானே ஆகவேண்டும். இப்படி அவர்களின் தொகையைக் குறைத்து விட்டு பின்னர் அப்புறப் படுத்தும் திட்டமாக இருக்கலாம்.






காணொளி - Skynews

ஈழதுக் கொடூரங்கள்!!

இலண்டனில் மீண்டும் சாலை மறியல்






இலங்கையில் 3200ற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து 10,000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் உள்ள சாலை நடுவே அமர்ந்து மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இம்மாதிரியான போராட்டம் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் சாலை மறியல் பெரும் வாகன நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நகரக் காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் செய்யும் தமிழர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டுள்ளனர்.

தடை செய்யப் பட்ட புலிக்கொடிகள்
மீண்டும் இலண்டனில் பறக்கின்றன.

ஈழம் - 4 சர்வதேச அமைப்புக்கள் ஜப்பானியப் பிரதமருக்கு கடிதம்


இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கடுமையாக விமரிசித்து சர்வதேச் மனித உரிமகள் கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்புச் சபை காப்பதற்கான பொறுப்புடைய பூகோள மையம் சர்வ தேச நெருக்கடிக் குழு ஆகிய 4 அமைப்புக்களும் கடிதம் எழுதியுள்ளன. கடிதத்தில் தெரிவிக்கப் பட்ட முக்கியமானவற்றின் சாராம்சம்:
.
இலங்கையில் மனித உரிமைகள் ஆபத்திற்குள்ளாகி இருப்பதுடன் மோசமடைந்து வருகிறது.
.
இப்போது செய்வது போல் உலகம் பாராமுகமாகத் தொடர்ந்து இருக்குமானால் மனித உரிமைகள் தொடர்பாக உலகம் ஒரு வரலாற்றுத் தவறை இழைத்ததாக வரலாற்றில் பதியப்படும்.
..
பல்லாயிரக் கணக்கான மக்கள் "பாது காப்பு வலயம்" எனப்படும் பிரதேசத்தில் இப்போதும் அகப்பட்டுள்ளனர். சென்றமாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத்திற்கான செயலர் ஜோன் ஹொல்ம்ஸ் அவர்கள் மாபெரும் இரத்தக் களரி ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
.
நான்கு நிறுவனங்களும் சேகரித்த தகவல் களின் அடிப்படையில் ஜப்பான் உட்பட செல்வாக்கு மிக்க நாடுகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென நாம் நம்புகிறோம்.
. .
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பற்றிய அறிஞர்கள் இலங்கையில் மக்களுக்கு உணவிற்கும் நீருக்குமான உரிமை இருப்பதாக வலியுறுத்தினர்.
.
இலங்கை அரசிற்கு பொறுப்பும் பிறருக்கு தெரியும்படியான செயற்பாடும் அவசியம்.
.
இலங்கை அரசு செய்யும் மோசமான மனித உரிமை மீறல்களை அது சொல்லும் பயங்கரவாத ஒழிப்பு நியாயப் படுத்த மாட்டாது.
.
ஜப்பானின் காத்திரமான நடவடிக்கைகளை நாம் வலியுறுத்துகிறோம்.
.
ஐநா பாது காப்புச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்கு ஜப்பான் ஆதரவு வழங்க வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறோம்.
.
ஐநாவில் இலங்கை தொடர்பான விவாதங்கள் நிலத்திற்கு கீழுள்ள அறையில் முடிய கதவுகளுக்குள் நடக்காமல் பாது காப்புச் சபையில் பகிரங்கமாகவும் உடனடியாகவும் நடக்க ஜப்பான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
. .
மே மாதம் 11ம்திகதி நடக்கவுள்ள பாதுகாப்புச்சாபைக் கூட்டத்தில் இலங்கையில் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு உடன் நிவாரண உதவிகள் கிடைக்கவும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அங்கு செல்ல அநுமதி கிடைக்கவும் ஜப்பான் வழி வகை செய்யுமென்று நம்புகிறோம்.
.
நடவடிக்கைகள் அவசரமானதும் அவசியமானதுமாகும்.



புலம் பெயர்ந்த தமிழர்களின் பணத்தைக் குறிவைக்கும் சன் தொலைக்காட்சி


முல்லைத்தீவில் 3000 தமிழர்களை கனரக ஆயுதங்களைப் பயன்படுத்திப் படு கொலை செய்ததை சன் மற்றும் கலைஞர் தொலைக் காட்சிகள் மூடி மறைத்துவிட்டன. அது மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கு கலைஞர் உண்ணா விரத நாடகத்தின் பின் பிரச்சனைகள் குறைந்துது விட்டன என்று பறை சாற்றுகின்றன. ஈழப்பிரச்சனையை சர்வதேச அரங்கில் பகிரங்கப் படுத்த பலத்த பிரயத்தனம் செய்யும் ஈழத் தமிழர்களுக்கு இது பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு சர்வ தேசிய மட்டத்தில் பெருமளவு பணம் செலவு செய்து வரும் இலங்கைக் கொடுங்கோலரசு பல ஊடகங்களுக்கு கையுட்டு மற்றும் சிங்கள ரத்னா பட்டங்கள் வழங்குவது உண்டு.

இப்போது சன் தொலைக்காட்சி சர்வதேசரீதியில் தாம் ஈழத் தமிழர்களுக்கான தாயகச் செய்திகளை ஒலிபரப்பவிருப்பதாக விளம்பரம் செய்கிறது.

Sunday 10 May 2009

தமிழர்களைத் துரத்தி விட்டு சிங்களப் படைகள் குடியமர்வு


போரில் பல இராணுவத்தினர் காய மடைந்து வருவதால் அவர்களைப் பராமரிப்பதில் இலங்கை அரசு நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. இலங்கை அரசுக்கு நெருக்கடி என்றால் தமிழர்களுக்கு பேரிடிதானே.
.
இரத்தினபுரியில் வாழும் தமிழர்களை விரட்டிவிட்டு அங்கு காயமடைந்த இராணுவத்தினரை குடி அமர்தும் வேலையில் ஈடுபட்டுள்ளது.தமிழர்கள் 70வது வருடங்களுக்கு மேலாக வாழந்து வரும் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப் படவுள்ளனர்.
.
இது தொடர்பாக பாராளமன்ற உறுப்பினர் திரு மனோ கணேசன் அவர்கள் இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டுள்ளார்.
...
...
..
முத்துக் குமாரனை விதைத்தோம்
காங்கிரசைப் புதைப்போம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...