Saturday 18 April 2009

பனை மரத்திலை வெளவாலா புலிகளுக்கே சவாலா


இலண்டனில் நடக்கும் ஆர்ப்பாட்த்தில் பல கோரிக்கை வாக்கியங்கள் ஒலிப்பதுண்டு. இவை பிரித்தானிய அரசையும் மக்களையும் நோக்கி இருப்பதால் பெரும்பாலானவை ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. அவ்வப்போது தமிழிலும் ஒன்றிரண்டு ஒலிப்பதுண்டு. அவற்றிலொன்று:

பனை மரத்திலை வெளவாலா புலிகளுக்கே சவாலா

இதற்கான சரியான பொருள் எனக்கு விளங்கவில்லை. பனை மரத்திற்கும் வெளவாலுக்கும் என்ன தொடர்பு என பலதமிழறிஞர்களிடம் கேட்டேன். அவர்களுக்கும் தெரியவில்லை. இயற்கை விஞ்ஞானம் படித்த ஒருவர்தான் சொன்னார். பனை மரத்தில் வெளவால் தொங்குவது சாத்தியமற்றது. கிளையில்லாத மரம். இலையின் மட்டை முள்போன்ற அமைப்புடையது. அதனால் பனையில் வெளவால் தொங்குவது சாத்தியமற்றது. அது போலவே புலிகளுக்கும் சவால் விடமுடியாது.
அங்கு ஒலித்த மற்றக் கோரிக்கைகள்:

We want – Ceasefire
When we want? – Now
Permanent - Ceasefire
Srilanka, Srilanka – Stop the war, stop the war.
Gordon Brown, Gordon Brown – Open your eyes, open your eyes
Our Nation – Tamil Eelam
Our leader – Pirapaharan
Stop, stop – genocide
Stop using – chemical weapons
BBC, BBC – Tell the truth! Tell the truth!!
Indian Army – Go home
Rajapakse – Terrorist
Tamil Tigers – Freedom fighters

Friday 17 April 2009

ஆரிய-சிங்கள கூட்டமைப்பின் அடி வருடிகளின் அட்டகாசம் தாங்க முடியலை ஐரோப்பாவில்

ஆரிய சிங்களக் கூட்டமைப்பு தனது அடியாட்கள் பலரை ஐரோப்பாவில் உள்ள தமிழர்களுக்கு தொல்லை கொடுக்கவும் அவர்கள் இன உணர்வை மழுங்கடிக்கவும் அனுப்பி வைத்துள்ளது அனைவரும் அறிந்த செய்தி. இது பல வருடங்களாக நடந்து வருகிறது.

கடன் அட்டை மோசடி
இங்கு பல கடன் அட்டை மோசடிகள் பல மில்லியன் கணக்கில் நடந்தது, நடக்கிறது. இவர்கள் எல்லாம் பிடிபடும் போது தாம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று சொல்வார்கள். இலங்கையின் பிரசாரப் பிரிவினர் பல தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளில் இதைப் பெரிது படுத்தி விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததுண்டு. சில நாடுகளின் உளவுத் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டபோது இவர்களுக்கும் புலிகளுக்கும் எது வித தொடர்புமில்லை என்று கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கும் ஆரிய-சிங்களக் கூட்டமைப்பிற்கும் உள்ள தொடர்பையும் சிலர் கண்டறிந்துள்ளனர்.

வீடுகளில் களவு
இலண்டனில் தங்க நகை களவு போகாத தமிழர் இல்லங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு கள்ளர்களின் அட்டகாசம் இங்குள்ளது. இவையும் பேய்-நாய் கூட்டமைப்பின் அடியாட்களின் கைவரிசையே.

நிகழ்ச்சிகளில் குழப்பம்
தமிழர்கள் நடாத்தும் பொது நிகழ்ச்சிகளில் பேய்-நாய் கூட்டமைப்பின் அடியாட்களின் போய்க்குழப்புவது ஐரோப்பாவில் ஒரு சாதாரண நிகழ்வு. ஒரு விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சூடும் நடந்தது.

இப்போது புதிய அட்டகாசம்
தமிழ் வானொலி தொலைக்காட்சி நேரடி தொலைக்காட்சி உரையாடல்களில் கலந்து கொண்டு மிக அசிங்கமான வார்த்தைகளால் திட்டுதல் என்ற புதிய அட்டகாசத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

2011 உலகக் கிண்ணத்திற்க்கான கிரிக்கெட் போட்டி பாக்கிஸ்தானில் நடை பெறமாட்டாது


அடுத்த உலகக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டி பாக்கிஸ்த்தானில் நடை பெறமாட்டாது என உலக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பாதுகாப்பை மனதில் கொண்டே தாம் இந்த முடிவை மிகுந்த மன வருத்தத்துடன் எடுத்ததாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

நாலு நாடுகளில் நடை பெறைருந்த போட்டி.
பாக்கிஸ்த்தான் இந்தியா பங்களதேசம் இலங்கை என 4 நாடுகளில் இப்போட்டி நடை பெறவிருந்தது.

சோனியாவின் ஆட்சியில் இந்தியாவிலும் துடுப்பாட்டக்காரர்களுக்கு உயிராபத்து?
ஆட்சி ஒருவர் கையில் அதிகாரம் இன்னோருவர் கையில் என்ற இரண்டும் கெட்டான் இந்தியாவில் வெளிநாட்டுத் துடுப்பாட்டக்காரர்களுக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிர் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய தீர்மானம் எடுக்க மிக அதிகமான நேரம் எடுத்தற்கு காரணம் இந்த இரண்டும் கெட்டான் கட்டமைப்புத்தான் என்று பலரும் கூறினர். தக்க தாக்குதல் அணியை அனுப்பாததால் பலத்த இழப்பை மும்பையில் சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது லாகூரில் இலங்கை அணியிர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாக்கிஸ்தானில் இருந்து மறைமுக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இனி இந்தியா வரும் வெளிநாட்டு துடுப்பாட்டக்காரர்களுக்கு உயிராபத்து வருமா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

புலிகளுக்கு குண்டு தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கியதால் இலண்டனில் சாந்தன் குற்றவாளியாம்.


அருணாசலம் கிரிசாந்தகுமார் எனப்படுபவரும் பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர்கள் விடுதலைக்காக உழைத்து வருபவருமான சாந்தன் மீது சாட்டப் பட்ட ஐந்து குற்றங்களில் இரண்டில் அவர் கிங்ஸ்டன் முடிக்குரிய நீதிமன்றில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப் பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உபகரணங்கள் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டமை, வெடி குண்டுகள் தயாரிக்கும் பொருட்களை புலிகளுக்கு அனுப்பியமை ஆகியவற்றில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதற்கான தண்டனன விபரங்கள் இன்னும் வெளியிட்ப் படவில்லை. ஏனைய மூன்று குற்றச்சாட்டுகளில் ஜுரர்கள் முடிவு ஏதும் எடுக்கவில்லை.

52 வயதான சாந்தன் பிரித்தானியாவில் பிரபல தமிழ் இன உணர்வாளர். இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் உறவினருமாவார்.



துரோகிகளுக்கு பேரிடி - சீமான் விடுதலை

விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட டைரக்டர் சீமான் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் விடுதலை ஆகிறார்.
சினிமா டைரக்டர் சீமான் பெப்ரவரி மாதம் புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார். அவர் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

17-2-09 அன்று நெல்லையில் நடந்த கூட்டத்திலும், இலங்கை தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசினார். இதில் அவர் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டார்.

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தவறு என்றும் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

Thursday 16 April 2009

இலங்கை அரசின் கொடுமைகள் வெளிவந்தது

பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவை இலங்கை அரசின் கொடுமைகளை வெளிக் கொண்டுவந்துள்ளது. உண்மையான காட்சிகள் இதை விடக் கொடுமையானது எனவும் அதை ஒளிபரப்ப முடியாதெனவும் அது தெரிவித்துள்ளது.Channel - 4 தெலைக்காட்சிச் சேவையின் ஒளிப்பதிவு கீழுள்ளது.

Wednesday 15 April 2009

இரட்டை வேடம் போடும் ஐநாவிடம் விடையில்லை









ஐக்கிய நாடுகளின் ஊழியர்கள் இலங்கை அரசின் இடைத்தங்கல் மூகாம் எனப்படும் வதை மூகாம்களில் தடுத்து வைத்திருப்பதற் எதிராக ஐநா ஏதும் செய்யாதது ஏன்?
இவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதால்தான் ஐநா பாராமுகமாக இருக்கிறதா?
மூன்று முறை போர் நிறுத்தம் செய்யும் படி ஐநா கேட்டதிற்கு இலங்கை அரசு ஏதும் செய்யாத போதும் மேற் கொண்ட நடவடிக்கை ஏதும் எடுக்காதது ஏன்?
சூடானிலும் மத்திய கிழக்கிலும் நடக்கும் அவலங்களில் செலுத்தும் அக்கறையும் செலவழிக்கும் நேரமும் இலங்கை சம்பந்தமாக காட்டாதது ஏன்?




சர்வதேச நியமங்களை மீறிய ஐநா


சர்வ தேச நியமங்களின்படி ஐக்கிய நாடுகளின் ஊழியர்களுக்கு இராச தந்திரிகளுக்கு உள்ள functional immunity உண்டு. இதன்படி இவர்கள் மீது ஒரு அரசு சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் இலங்கையில் நாடுகளின் ஊழியர்கள் அரச இடைத்தங்கல் முகாம் எனப்படும் வதை கூடங்களில் அவர்களின் விருப்பத்திற்கு மாறாகவும் சர்வதேச நியமங்களுக்கு எதிராகவும் தடுத்து வைக்கப் பட்டுள்ளதை ஐநா ஒத்துக் கொண்டுள்ளது. இதுபற்றி ஐநாவின் பேச்சாளர் Farhan Haq இடம் Inner City Press வினவியபோது அவர் கூறிய பதில் அவர்களுக்கு நடமாடும் சுதந்திரம் வழங்கப்படும் என்று (இலங்கை) அரசு தெரிவைத்துள்ளதாகப் பதிலளித்துள்ளார். இத்தடுத்து வைப்பு பன்னாட்டு விதிகளுக்கு முரண்பட்டதல்லவா என்று கேட்டபோது அவர் பதிலேதும் கூறவில்லை என்பதோடு ஏன் இதுபற்றி ஐநா ஏன் தகவல் ஏதும் வெளியிடவில்லை என்பதற்கும் விளக்கமளிக்கவில்லை.
பாக்கிஸ்த்தனில் ஐநா ஊழியர்கள் தடுத்து வைக்கப் பட்டிருந்தபோது ஐநா உரக்கக் குரல் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
ஐநா ஊழியர்களை இலங்கை அரசு அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்றும் அடையாளம் தெரிந்திருந்தால் அவர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப் படுகிறது. அடையாளம் காணாமல் அவர்கள் இடைத் தங்கல் முகாமில் இலங்கை அரசு வைத்திருக்கிறது. ஐநாவும் அவர்கள் பற்றிய உயிரச்சம் காரணமாகவே தகவல்களை மறைத்து வைத்திருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவே இருக்கலாம்.
இனப் படுகொலைக்கு இன்னும் ஒரு சாட்சி.

மூன்றாம் அணி


Tuesday 14 April 2009

நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவரகத்தின் மீதான தாக்குதலின் மர்மம்.

1983 ஆம் ஆண்டின் பின் பல ஐரோப்பிய நாடுகளில் வருடந்தோறும் பல ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் அங்கு வாழும் தமிழ்ர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வன்முறைகள் அற்றனவாகவும் மிகுந்த கட்டுக் கோப்புடனும் நடாத்தப் படுகின்றன. காவல்துறையினர் வெறும் பார்வையாளர்களாகவே கலந்து வருகின்றனர். இதனால் இதுவரை தமிழர்களினது ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு எவ்வித தயக்கமுமின்றி காவல் துறையினர் அனுமதிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு தை மாதத்தில் இலண்டனில் நடந்த நூறாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட பேரணி காவல் துறையினர் எதிர் பார்த்ததிலும் அதிகமான மக்கள் கலந்து கொண்டபோதிலும் நிலமையை சமாளிப்பதில் நகர காவல் துறைக்கு பெரும் சிரமம் இருக்கவில்லை. போக்குவரத்துத் துறை மட்டும் தான் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறியது. இலண்டனின் போக்குவரத்துத் துறையின் பலவீனம் யாவரும் அறிந்ததே. இப்பேரணியைப் பார்த்த Sky Television நிருபர் ஒரு பேரணி எப்படி இருக்கவேண்டும் என்பதை தமிழர்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சுவிஸ் காவல் துறை மாஅதிபர் பாராட்டினார்.
சுவிஸில் நடந்த பேரணிகளின் போது தமிழர்களின் கட்டுக்கோப்பைப் பார்த்து வியந்த சுவிஸ் காவல் துறை மாஅதிபர் பேரணி ஏற்பாட்டாளர்களை அழைத்துப் பாராட்டினார்.

கண்டிப்பான பிரெஞ்சு அரசு
பிரான்ஸ் தேசம் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சட்டம் ஒழுங்கு விடயத்தில் மிகவும் கண்டிப்பாகவே நடந்து கொள்ளும். தமிழர்கள் பிரான்ஸில் எவ்வித தடையுமின்றி ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி பெற்றுக்கொள்வர்.

இலங்கைத் தூதுவரகம் ஏன் தாக்கப் பட்டது.
நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவரகத்தை தாண்டி தமிழர் பேரணி சென்றபோது அங்கு காவலாளிகளைத் தவிர எவரும் இருக்கவில்லை. ஆதலால் ஊர்வலத்தில் சென்றவர்களை ஆத்திரமூட்டும் செயல் ஏதுவும் நடக்க வாய்ப்பில்லை. இதில் தமிழ்தேசியப் பேராட்டத்திற்கு எதிரான சக்திகள் ஈடுபட்டதாகவும் தகவல்கள் இல்லை. தமிழ்தேசியவாதம் இப்போது சர்வதேச அங்கீகாரத்திற்காக துடித்து நிற்கிறது. உலகின் பல பாகங்களிலும் நடந்த அண்மைக்கால தமிழர் பேரணிகளில் எந்த இலங்கை அரச சொத்துக்களும் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. பின்வரும் சம்பவங்களின் பின்னணியில் நாம் நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவரக்த்தின் மீதான் தாக்குதலின் காரணத்தைப் பார்க்க வேண்டும்:
· கொழும்பிலுள்ள நோர்வேத் தூதுவரகம் ஏற்கனவே குண்டுத் தாக்குதலுக் குள்ளானது.
· நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவரகத்தை எப்படி இருமுறை தாக்க முடிந்தது. முதலில் தாக்குதல் நடந்போது அங்கிருந்த தூதுவரகக் காவலாளிகள் இரு தாக்குதலாளிகளளத் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் மேலும் பல தமிழர்கள் உட் புகுந்து அவர்களை மீட்டதுடன் மீண்டும் தாக்கினர்.
· விடுதலைப் புலிகளின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கே. பத்மநாதனை ஐக்கிய நாடுகள் சபை நோர்வே ஊடாகத் தொடர்பு கொண்டதில் இலங்கை நோர்வேமீது தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியது.


· தாக்குதலின் பின் இலங்கை நோர்வேயை சமாதன ஏற்பாட்டாளர் என்ற நிலையில் இருந்து நீக்கியது.


. அதற்கு நேர்வே சமாதான ஏற்பாடு எப்போதே முடிவடைந்து விட்டது என்று பதிலடி கொடுத்தது

ஐநாவின் பாராமுகம் அம்பலம்- ஐநாவின் ஊழியர்கள் இலங்கை அரசால் தடுத்து வைப்பு!

ஐக்கிய நாடுகள் சபையினதும் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புக்களினதும் ஊழியர்கள் பலரை இலங்கை அரசு தனது வதை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஐநா இவர்களை விடுவிக்கும் படி பலமுறை இலங்கை அரசைக் கோரியும் இலங்கை அரசு இவர்களை விடுவிக்க மறுத்துள்ளதை ஐநா மறைத்து வைத்திருந்ததை Inner City Press அம்பலப் படுத்தியுள்ளது. இதை அடுத்து ஐநா இரட்டை வேடம் பூணுகிறதா என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Inner City Press e-mailed the spokespeople for The Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) and UNICEF, repeating the question. OCHA spokeswoman Stephanie Bunker replied first:

Subj: Re: Q if there are UN system staff / family in Sri Lankan government's "IDP" camps, and if so...
From: [OCHA at] un.org
To: Inner City PressSent: 4/13/2009 3:17:39 P.M. Eastern Daylight Time

Among those tens of thousands of people who have managed to flee the No Fire Zone in northern Sri Lanka, we are aware that some UN and NGO staff and their dependents have managed to flee as well. As far as we know, they are still in the camps for displaced people set up in the area, and we have repeatedly asked the Government of Sri Lanka to allow them freedom of movement so that they can eventually resume their role as aid workers. While the Government has repeatedly assured us that this request would be met, the staff still remain in the camps.

Inner City Press' sources in Sri Lanka say that OCHA chief John Holmes was informed of these people while he was in Sri Lanka, that local staff dissatisfaction with his public silence about it has been growing.

காட்சிகள், காணொளிகள் - இலண்டன் உண்ணா விரதம் மேலும் பல மாணவர்கள் உண்ணா விரதத்தில் குதிப்பர்.























இலண்டனில் தொடர்ட்ர்ந்தும் தமிழர்கள் பாராளமன்ற சதுக்கத்தில் போராடி வருகின்றனர். நேற்று மாலை ஒரு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சனிக்கிழமை (11-04-2009 ) நடந்த வரலாறு காணாத மாபெரும் பேரணியுடன் ஓய்ந்துவிடுமென்று பலரும் நினைத்திருந்த போதிலும் பல்கலைக் கழக மாணவர்கள் இதில் சளைக்காது ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டமும் தொடர்கிறது.


பரமேஸ்வரன் சுப்பிரமணியம்

உண்ணாவிரதமிருக்கும் மாணவன் பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உடல் நிலை மோசமடைவதால் நகரக் காவலர் அவரை எந்நேரமும் அவர் விருப்பத்திற்கு மாறாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லலாம். அப்படி எடுத்துச் செல்லப் படும் பட்சத்தில் பல மாணவர்கள் உண்ணா விரதப் போராட்டதில் குதிக்கத் தயாராகிறார்கள்.


பாராளமன்ற சதுக்கத்தில் உள்ள புற்றரை தொடர் போராட்டத்தால் பழுதடைந்து விடுமென்று இலண்டன் நகர அதிகார சபையினர் மக்களை நடையோரத்தில் மட்டுமே அனுமதித்தனர்.





Monday 13 April 2009

யுத்த நிறுத்தத்தை மீறயது சிங்கள-ஆரியக் கூட்டமைப்பு


48 மணி நேர யுத்த நிறுத்தத்தை அறிவித்த 12 மணித்தியாலங்களுள் அதை மீறி பாதுகாப்பு வலயத்தில் பயங்கர ஆயுதங்களை ஏவி 37 அப்பாவித் தமிழர்களைக் கொன்று 120 அப்பாவித் தமழர்களைக் காயப் படுத்தி உள்ளது.
இன்று காலை முதல் புதுக்குடியிருப்பில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதி மீது தொடர்ச்சியான தாக்குதல்களை தொடங்கியுள்ள சிறிலங்கா படையினர், பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் பகுதிகளை நோக்கியும் வழமைபோலவே எறிகணைத் தாக்குதல்களைப் பெருமளவுக்கு மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி நள்ளிரவு முதல் எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் பீரங்கி மற்றும் தொலைதூர துப்பாக்கி தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி அப்பாவிகளைக் கொன்று குவிக்கின்றனர்.

ஆரிய சிங்களப் பேய்களின் 48 மணி நேர ஏமாற்று




போக்குவரத்து வசதியில்லாப்
போக்கிரியர் சூழ் போக்கற்ற பூமியது
முடியுமா நாற்பத்தெட்டு மணியில்
இரண்டு இலட்சம் பேர் வெளியேற
தேர்தல் கடலில் தத்தளிக்கும்
காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு துரும்பு
ஆரிய சிங்கள கூட்டுப்படைக்கு
ஒரு இளைப்பாறும் வாய்ப்பு
படையணிகளை மறுசீரமைக்க
தேவையான ஒரு இடைவெளி
கலைஞருக்கு தம்பட்டமடிக்க
நல்லதொரு சந்தர்ப்பம்
உலகெங்கும் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு
வைக்க முயல்கின்றனர் ஒரு ஆப்பு
சர்வதேசத்திற்கு காட்டுகின்றனர்
ஒரு போலிக் காட்சி
எவரும் ஏமாறலாம் போர் நிறுத்தத்தில்
தமிழ் உணர்வாளர்கள் ஏமாறார்

Sunday 12 April 2009

காணொளியில் - இலண்டன் தமிழர் பேரணி

இலண்டன் நகர் என்றுமே காணாத வரலாறு படைத்த பேரணியை அங்குள்ள தமிழ் அமைப்பினர் நடாத்தி முடித்துள்ளனர். குழந்தைகள், சிறார்கள், வயோதிபர், நிறைமாதக் கற்பிணிகள் எனப் பலதரப்பட்ட மக்களும் உணர்ச்சியுடன் கலந்து கொண்டனர்.









இலண்டனில் - வரலாறு படைத்த தமிழர் பேரணி







கின்னஸ் சாதனை
இலண்டன் நகர் என்றுமே காணாத வரலாறு படைத்த பேரணியை அங்குள்ள தமிழ் அமைப்பினர் நடாத்தி முடித்துள்ளனர். வந்த மக்கள் தொகை தொடர்பாக் மூன்று விதமான கணிப்புக்கள் வெளிவந்துள்ளன. சிலர் ஒன்றரை இலட்சம் என்றும் சிலர் இரண்டு இலட்சம் என்றும் சிலர் இரண்டரை இலட்சம் என்றும் கூறியுள்னளர். இப்பேரணி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டியது என்றும் கூறப்படுகிறது.
திணறிய இலண்டன்
மக்கள் இலண்டனை நோக்கி நாட்டின் பல பாகங்களிலுமிருந்து சென்றதால் இலண்டனின் போக்கு வரத்து அமைப்புக்கள் நிலமையை சமாளிக்க முடியாமல் திணறின.

ஐந்து அம்சக் கோரிக்கை
இப் பேரணி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:
1. உடனடியானதும் நிரந்தரமானதுமான போர் நிறுத்தம்.
2. தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை உடன் விடுவிக்க வேண்டும்.
3. ஐக்கிய நாட்டு அமைதிப்படை இலங்கை சென்று தமிழர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
4. இந்திய அரசு தனது படைகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
5. சர்வ தேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி வழங்கக் கூடாது.
கட்டுக் கோப்பான பேரணி.
இலட்சக் கணக்கில் மக்கள் கலந்து கொண்ட போதும் இப் பேரணியில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் மக்கள் மிகக் கட்டுக் கோப்புடன் நடந்துகொண்டனர்.
மாணவர்கள் முன்னின்று செயல்பட்டனர்.
இப்பேரணியின் பெரு வெற்றிக்கு பிரித்தானியப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பெரும் பங்காற்றினர்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...