Saturday 7 February 2009

சதிகள் பல செய்யுது பார்ப்பனியம்


சாவின் விளிம்பில் நம்மினம்
சரணடை என்கிறது பலதேசம்
இது நடக்குமா
அது அடுக்குமா

எண்பத்து மூன்றில் பார்த்தோமே
பேரினவாதத்தின் பேயாட்டம்
அன்று முடிந்ததா
எம் போராட்டம்

எண்பத் தெட்டில் பார்த்தோமே
ஆரிய அமைதிப்படை அட்டூழியம்
அதில் அழிந்ததா
எம் தேசியவாதம்

சதிபல செய்யுது பார்ப்பனீயம்
வீறு கொண்டது சிங்களம்
இங்கு ஓயுமா
எங்கள் போரலை

துரோகிகள் பலரைக் கண்டோமே
தோல்விகள் பலதையும் கண்டோமே
என்று தளர்ந்தது
எம் மனத்துணிவு

எது வரினும் அஞ்சோமே
எவர் வரினும் துவளோமே
எங்கள் தாகம்

என்றும் தமிழீழம்

Thursday 5 February 2009

www.hell.com



I try to log on to your heart
I got “password incorrect”
I tried again and again
I was ignored and ignored
I will never ever abort
Your software is not so soft

I will try again and again
Your heart-disk is so hard.
Do not be so user unfriendly
Do not divert me to www.hell.com
My memory is full of you.

My poem was copied in http://thamilislam.blogspot.com/

http://thamilislam.blogspot.com/ copied my poem ஊடக விபச்சாரம்.

A warning message was sent to him before making legal action.

Wednesday 4 February 2009

இணைத் த(றுத)லை நாடுகள்


நோர்வே என்றொரு மாரீசன்
ஜப்பான் என்றொரு நயவஞ்சகன்
அமெரிக்கா என்றொரு அயோக்கியன்
ஐரோப்பிய ஒன்றியம் என்றொரு கயவன்
இத்தறுதலைகள் போதாதென்று
இந்தியா என்றொரு விபீஷணன்
இணைந்தாங்கள் தமிழரை ஏமாற்ற
கதையுங்கள் கதையுங்கள் எனச் சொல்லி
கழுத்தறுத்தாங்கள் ஈழத் தமிழரை
சமாதானம் சமாதானம் எனச் சொல்லி
ஆயுதங்கள் கொடுத்தாங்கள் சிங்களவனுக்கு
சமாதானம் பேசிய சாத்தான்கள் சொல்கிறாங்கள்
சரணடையுங்கோடா! அல்லது சாவீங்கடா!

பனியே நீ இந்திய அமைதிப் படையா?



விண்ணில் இருந்து
வெண்பூக்கள் துாவியதுபோல்
பனி மழை பொழிந்தது
இலை உதிர்த்த மரங்கள்
புது வாழ்வு பெற்ற விதவைபோல்
மல்லிகை மலர் சூடியது போல்
புத்தழகு பெற்று நின்றன
எங்கும் துாய வெண்மை
நாளொன்று சென்றது
பனி மெல்ல உருகியது
கருஞ் சேறாக மாறியது
நடந்தோர் வழுக்கி விழுந்தனர்
வாகனங்கள் சறுக்கி மோதின
எல்லா இடத்திலும் களேபரம்
வரும்போது அழகு
போகும் போது நிர்மூலம்
பொழிந்த பனியே நீயும்
இந்திய அமைதிப் படையா?

Tuesday 3 February 2009

Kill, kill kill - Srilankan Religion



Kill, kill, kill, kill all Tamils
Kill the innocents
Kill the babies
Kill even the disabled
Srilanka belongs to Buddhists

Bomb, bomb, bomb everywhere
Bomb all the hospitals
Bomb all the schools
Bomb all the temples
Srilanka belongs to Singhalese

Burn burn burn! Burn all Tamils alive
Burn their houses
Burn their businesses
Burn everywhere
Srilanka belongs to Rajapakse family.

Monday 2 February 2009

எனக்குயிர் கொடுப்பாயே


என்னைச் சாகடிக்க வந்தவளே
என் மனம் நோகடிக்க செய்தவளே
என் தூக்கம் எடுத்துச் சென்றாளே
பெரும் துயரம் கொடுத்து பிரிந்தாளே

சோலை வனமாய் அவளிருந்தாள் - எனைப்
பாலை வனமாய் ஆக்கிச் சென்றாள்.
கனவுகளை கானல் நீராக்கிச் சென்றாள்
நெஞ்சினை கனலாய் கொதிக்க வைத்தாள்

ஒத்துவராக் காதலியாய் அவளிருந்தாள்
ஒற்றைக் காலணியாய் ஆக்கிச் சென்றாள்
படுக்கையை பழுதாக்க வந்திருந்தவள்
தலையணை ஏனோ நனைக்க விட்டாள்

என் கவிதையும் வரியின்றித் துடிக்கிறதே
வரும் செற்களும் சரியின்றித் தவிக்கிறதே
எழுத்துக்களும் எரிகின்ற தணலானதே
மீண்டும் வந்து எனக்குயிர் கொடுப்பாயே!

Sunday 1 February 2009

ஊடக விபச்சாரம்



கொழும்பில் குண்டு வெடித்தால்
அது பயங்கரவாதமெனக் கூச்சல்
தமிழன் மேல் குண்டு விழுந்தால்
அவர் பேசா மடந்தையாவர்

காசாவில் மக்கள் இறந்தால்
காது கிழியக் கத்துவார்கள்
ஈழத்தில் குழந்தைகள் இறந்தால்
காதிலேயும் போட மாட்டார்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...