Sunday 13 December 2009

இறுதிப் போர் உண்மைகள்: காணொளி


வன்னியில் இறுதிப் போரில் நடந்த உண்மைகளை உள்ளடக்கிய காணொளிக்காட்சி வெளிவந்துள்ளது. அதன் படி:

முடங்கிக் கிடந்த போரை சிங்களவனுக்கு சாதமாக்கிய
இந்திய இரசாயன ஆயுதங்கள்.
மன்னாரை கைப்பற்றிய சிங்கள இராணுவம் அங்கிருந்து முன்னேறமுடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். பல சிறப்புப் படையணிகளஐச் சேர்ந்த சிங்களவர்கள் கொல்லப் பட்டனர். சிறப்புப் படையணிகளை சிதறடித்து போரை தமக்குச் சாதகமாக மாற்றுவது புலிகளின் திட்டம். அக்கிராயனை நோக்கி முன்னேற முடியாமல் சிங்கள இராணுவம் தவித்துக் கொண்டிருந்த வேளை இந்தியா வழங்கிய இரசாயன ஆயுதங்கள் அக்கிராயனைக் கைப்பற்ற சிங்களவர்களுக்கு உதவின

மூன்று அணிகளாகப் பிரிந்த புலிகள்.
ஆறு நாடுகளை எதிர் கொண்டு வெற்றி கொள்ள முடியாது என்று உணர்ந்த விடுதலைப் புலிகள் போராட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் தம்மை மூன்று வகையாகப் பிரித்துக் கொண்டனர்:
1. செய் அல்லது செத்து மடி என்ற அடிப்படையில் சிங்களப் படையுடன் மோதும் அணி.
2. ஊடறுத்துத் தாக்கி தப்பிச் செல்லும் அணி.
3. சிங்களவர்களிடம் சரணடைந்து உலகிற்கு உண்மையை உணர்த்தும் அணி. இதில் பெரும்பாலும் காயப் பட்டவர்கள் அடங்குவர்.


இரசயான ஆயுதத்தால் முறியடிக்கப் பட்ட திட்டம்
புதுக்குடியிருப்புக்கே வடக்கே சிங்கள இராணுவத்தை முறியடித்து சிங்கள படைகளின் அணியின் பின்பு சென்று அங்கிருந்து தாக்குதல் நடாத்தும் விடுதலைப் புலிகளின் திட்டத்தை துரோகிகளின் காட்டிக் கொடுப்பால் அறிந்த சிங்களவர்கள் இரசாய ஆயுதத்தை மீண்டும் பவித்து 389 புலிகளைக் கொன்றனர்.

உயிருடன் தப்பிய பிரபாகரன்.
பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியைக் களத்தில் நிற்க வைத்து விட்டு300 கரும்புலிகள் 3000கிலோ வெடி மருந்துகளுடன் தாக்கி பிரபாகரனைத் தப்பவைத்தனர். இதில் சசி மாஸ்டர் கொல்லப் பட்டார். சசி மஸ்டர் பிரபாகரன் போல் தோற்றம் அளிப்பவர். அவர் உடலையே இலங்கை இராணுவம் பிரபாகரன் உடல் என காட்சிப் படுத்தியது. காயப் பட்ட மூத்த தளபதி சொர்ணம் சயனைட் அருந்தி வீரச் சாவு அடைந்தார்.

தப்பி ஓடிய பல விடுதலைப் புலிகள்.
விடுதலைப் புலிகளின் பல படையணிகள் பலத்த எதிர்த் தாக்குதல் நடத்தி சிங்களப் படைகளைப் பல கிலோமீற்றர் வரை பின்வாங்கச் செய்து வன்னிக்குத் தெற்காக தப்பிச் சென்றனர்.

இறுதியாகத் தப்பிச் சென்ற பொட்டு அம்மான்.
பிரபாகரன் முதலில் தப்பிச் செல்ல களத்தில் இருந்த பொட்டு அம்மானும் தப்பிச் சென்றார்.

இந்தியப் படைகள் நேரடியாகக் களத்தில் நின்றன
இறுதிப் போரில் சிங்களவர்களுடன் இந்தியப் படைகளும் (தமிழ் பேசுபவர்கள் உட்பட) தமிழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்தனர்.

இவை அடங்கிய காணொளி:

3 comments:

Anonymous said...

India's dirty hand is in blood..

Anonymous said...

இந்தியா என்று ஒரு நாடு இருக்கும் வரை தமிழர்கள் உலகில் நிம்மதியாக வாழ முடியாது.

Anonymous said...

இந்திய மக்களையும் இந்திய நாட்டையும் பல காலாமாக நேசித்த ஒரு ஈழத்தமிழன் நான்.
இப்போதும் தமிழ்நாட்டு மக்களை நான் நேசிக்கிறேன்.ஆனால் இந்திய அரசுதான் எமது இக்கட்டான நிலைக்கு காரணம் . சிங்களவர்களைவிட இந்திய அரசை வெறுக்கிறேன் .
எமது இனம் நிர்க்கதியாக இன்று அடிமை இனமாக மாறிவிட்டது. எதிர்காலத்தில் சிங்கள மேலாதிக்க இன வாத அரசால் தமிழ் இனம் அழிந்துவிடும் நிலைக்கு வந்ததற்கு இந்தியாவே காரணம் .
எனக்கு இப்போது முப்பது வயது ,நான் சாவதற்கு முதல் இந்தியா சிதறி சின்னா பின்னமாகி பல நாடுகளாகி பிரிவதைப் பார்த்துவிட்டு சாக வேண்டுமென்பதே எனது ஆசை.
சிங்களவனை மன்னித்தாலும் நாம் இந்தியாவை மன்னிக்க மாட்டோம். சிங்களவனுக்கு துணிவையும் ஊக்கத்தையும் கொடுத்தது இந்தியாதான் .

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...