Friday 25 December 2009

திருமா, மணியன் ஐய்யாக்களிடம் ஒரு கேள்வி.



இலண்டனிற்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாததில் வருகை தந்த தோழர் திருமாவளவனும் தமிழருவி மணியனும் ஒரு கருத்தை தமிழர்கள் மத்தியில் விதைக்க முயன்றனர்: "இலங்கைத் தமிழர்களுக்கு உதவ ஒருவரும் இல்லை. இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை".

அவர்கள் இலண்டனில் ஆற்றிய உரைகளின் பதிவுகளை இங்கு காணலாம்:

http://veltharma.blogspot.com/2009/09/blog-post_27.html

http://veltharma.blogspot.com/2009/10/blog-post_06.html


இலண்டனில் தோழர் திருமாவின் உரையிலும் அவர் ஜீடிவி எனும் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியிலும் சிலகருத்துக்கள் உள்ளடக்கப் பட்டிருந்தன:

  • இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்டி ஆட்சியில் இருந்தாலும் இந்திரா காங்கிரசு ஆட்சி செய்ததையே செய்திருக்கும்.
  • தமிழர்களுக்கு இந்தியா மட்டும் எதிரி இல்லை, சகல நாடுகளூமே எதிரி.
  • தோழர் திருமாவளவன் இலங்கைத்தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்ற பொருள்படப் பேசினார்.
  • எல்லா வற்றிலும் மேலாக, இலங்கையில் சீனா காலூன்றாமல் இருக்க இலங்கைக்கு இந்தியா உதவிவருகிறது. உங்களின் எதிரியான இலங்கைக்கு உதவுவதால் இந்தியாவை உங்கள் எதிரியாக எண்ணாதீர்கள் என்று சொன்னது பல தமிழின உணர்வாளர்களை ஆச்சரியப் பட வைத்தது.
இப்போது கொழும்பில் இருந்து வரும் தகவல்களின் படி விடுதலைப் புலிகளுக்கு உதவ 2009 மார்ச் மாதத்திலேயே அமெரிக்கா தயாராகிவிட்டது. அதை இந்தியாவின் உதவியுடன் தான் இலங்கை தவிர்த்துக் கொண்டது.

கொழும்புல் இருந்து வெளிவரும் ஐலண்ட் பத்திரிகை இப்படிக் கூறுகிறது:

  • About two months before the final battle on the banks of the Nanthikadal lagoon in May, the United States had offered to evacuate top LTTE leaders and their families. The unprecedented proposal had been made by the then US Ambassador in Colombo Robert Blake after the Co-Chairs to the Sri Lankan peace process, spearheaded by the Norwegians agreed that the LTTE could no longer halt the army advance. Responding to The Island queries, sources said that at one point the Sri Lankan government had suggested that Ambassador Blake should also consult New Delhi regarding the controversial evacuation plans.
ஐலண்ட் பத்திரிகையின் முழுச் செய்தியையும் இங்கு காணலாம்:
http://www.island.lk/2009/12/24/news1.html

அமெரிக்காவை இலங்கையில் தலையிட அன்று அனுமதித்திருந்தால் 70,000 இற்கு மேற்பட்ட அப்பாவிகளின் கொலைகளைத் தவிர்த்திருக்கலாம். தமிழர்கள் இந்தியாவை கொலையாளியாகத்தான் பார்கிறார்கள்.

தமிழர்கள் எல்லோரும் இந்தியாதான் தமிழர்களின் முதல் எதிரி என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். இப்படி இருக்கையில் திருமாவளவன் ஐய்யாவும் தமிழருவி மணியன் ஐய்யாவும் இந்தியாவை விட்டால் வேறு கதி இல்லை என்று எமக்குப் போதித்தது ஏன்? இந்திய உளவுத்துறைதான் உங்களை அனுப்பி அப்படிச் சொல்ல வைத்ததா?

4 comments:

தமிழ் said...

Absolutely correct. RAW and IB are behind that. Thiruma is a dog because of MP meat is in front of him.
Maniyan is a basically Congress man. He never think beyond ****A country.

sakthi_karup said...

திருமா மணியன் மட்டுல் அல்ல. இவர்களைவிட ஒரு நயவஞ்சகன் ஜெகத் காஸ்பர் எனும் பாதிரி இருக்கிறான்.
அவனை பற்றியும் எழுதுங்கள்

Unknown said...

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!
http://www.vinavu.com/2009/11/16/father-jegath-gaspar-raj-milks-blood/

pandiyan said...

கவிஞர் வேல் தர்மா.. இந்திய அடிபொடிகளை அழைத்து பேச வைத்து ஈழத்தவரை எதால் அடிப்பது..இனியாவது இந்த அடிப்பொடிகள் வந்தால் ஜார்ஜ் புஸ்சுக்கு செய்ததை போல செருப்பால் அடித்து விரட்டுங்கள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...