Monday 21 December 2009

அம்பலமாகும் வன்னி வதை முகாம்களின் அசிங்கங்கள்.


வன்னி வதை முகாம்களின் அசிங்கமான அட்டூழியங்கள் பற்றி மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் இருந்து ஒரு ஊடக ஆசிரியப் பன்றி ஒன்று இலங்கை வந்து வன்னி முகாம்கள் இந்தியாவில் உள்ள முகாம்கள் சிறந்தன என்றன. இன்னொரு பன்னாடைக் கூட்டம் முகாம்களை பார்வையிட என்று வந்து மஹிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்திப் பரிசு பெற்றுச் சென்றது. ஆனால் அங்குள்ள உண்மைகளை வெளிக் கொண்டுவரவில்லை.

இப்போது வன்னிமுகாமில் பணிபுரிந்த வாணி குமார் என்பவர் பிரித்தானிய The Guardian பத்திரிகை மூலமாக பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்துள்ளார்.
  • பாலியல் கொடுமை முகாம்களில் ஒரு பொதுவான விடயம். யாரும் எதிர்த்துக் கதைக்க முடியாது.
  • எதிர்த்துக் கதைப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவர்.
  • மிகக் குறைந்த தண்டனை கடும் வெய்யிலில் நீண்ட நேரம் முழங்காலில் நிற்க வைப்பது.
  • வெள்ளை வானில் அடிக்கடி முகாமிலிருந்து மக்கள் இழுத்துச் செல்லப் படுவர். அவர்களை உறவினர்கள் மீண்டும் காணமுடியாது.
  • சிறு கூடாரங்களில் பல்லாயிரக் கணக்கானோர் போதிய உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றித் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.
  • பெண்கள் திறந்த வெளியில் காவலர்கள் முன்னிலையில் குளிக்கும்படி உத்தரவிடப் பட்டனர்.
  • எங்கும் பூச்சிகளும் இலையான்களும் நிறைந்திருந்தன.
  • ஒரு முதியவர் தாக்கப்பட்டதை என் கண்ணால் கண்டேன்.
இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்தவர் வன்னியில் உள்ள "சிறந்த" முகாம்களில் ஒன்றில் வைக்கப் பட்டிருந்தவர். அவர் வெளியிட்ட தகவல்களே இப்படி என்றால் மற்ற முகாம்களில் நடந்தவை என்னென்னவோ? அவை என்று வெளிவருமோ?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...