Monday 21 September 2009

பத்மநாதனைக் கடத்தியது பிரபாகரன் இருக்கும் இடத்தை அறியவா?


பத்மநாதன் இலகுவில் கைது செய்யப் படக் கூடியவர் அல்லர். ஆரிய சிங்களக் கூட்டமைப்புடன் மூன்றாவது ஒரு நாடும் பத்மநாதனை கள்ளத்தனமாக கடத்தப் பட்டதில் சம்பந்தப் பட்டுள்ளது. அம் மூன்றாவது நாட்டில் இருந்துதான் விடுதலைப் புலிகள் இனிச் செயற்படும் சாத்தியம் இருப்பதாக இந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கொழும்பு தெரிவித்தது. பிரபாகரன் அந்த மூன்றாவது நாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று கூடக் கொழும்பில் இருந்து செய்திகள் வெளிவந்தன. அந்த அளவிற்கு விடுதலைப் புலிகளுக்கும் அம் மூன்றாவது நாட்டிற்கும் நெருக்கம் இருந்தது. அம் மூன்றாவது நாட்டுக்குரியவர்களுக்கு பெருந்தொகை இலாபமீட்டக் கூடிய வர்த்தக உடன்பாட்டு வாக்குறுதி அளித்து பத்மநாதனை சட்டவிரோதாமாகக் கடத்தும் நடவடிக்கை எடுக்கப் பட்டதாம். பத்மநாதன் பன்னாட்டுக் காவற்துறையால் தேடப் படுபவர். அவரை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்காமல் இப்படி கள்ளத்தனமாக கடத்தியது ஏன்?

முள்ளிவாய்க்காலைக் கைப்பற்றியவர்களுக்கு பிரபாகரனை உயிருடனோ அலது பிணமாகவோ கைப்பற்ற முடியவில்லை. இலங்கை இராணுவம் காட்டிய படங்கள் எதுவும் பிரபாகரனை ஒத்தது அல்ல. காட்டிய படங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. பிரபாகரன் தனது உடல் கூட எதிரியின் கைகளுக்கு சிக்கக் கூடாது என்று உருத்தெரியாத மாதிரி தற்கொலை செய்திருக்கவேண்டும் என்ற முடிபு அவரது உடலை முள்ளிவாய்க்காலில் தேடியவர்கள் எடுத்துவிட்டனர். அதன் பிறகு அவரது உடலைக் கைப்பற்றி அதை கருணாவும் தயா மாஸ்டரும் அடையாளம் காட்டியபின் தாம் எரித்து விட்டதாக அறிவித்த இலங்கை அரசு இன்றுவரை பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை வழங்கவில்லை.

பத்மநாதன் முதலில் பிரபாகரன் இறக்கவில்லை என்றார். பின் இறந்து விட்டார் என்றார். ஆனால் பிரபாகரனுக்கு யாரும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் அஞ்சலிக் கூட்டம் ஏறபாடு செய்யவில்லை. பிரபாகரனின் உத்தரவின் பேரில்தான் பிரபாகரன் இறந்து விட்டதாக பத்மநாதன் தான் முதலில் அவர் உயிருடன் இருக்கிறார் என்று சொன்னதை மாற்றி அறிவித்தாரா?

இலங்கை அரசுக்கு தனது பாதுகாப்புச் செலவீனங்களையோ படைத்துறை பலத்தையோ அல்லது அதன் எண்ணிக்கையையோ குறைக்கும் எண்ணம் கிடையவே கிடையாது. பொருளாதர நெருக்கடியில் இருக்கும் இலங்கை ஏன் இதைச் செய்யத் தயங்குகிறது?

எல்லையில் சீன ஊடுருவல் பாக்கிஸ்த்தானியத் தீவிர வாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விடுதலைப் புலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியப் பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்கே நாராயணன் புதுடில்லியில் காவல் துறை அதிகாரிகளுக்கான மாநாட்டில் புலம்பினார்: விடுதலைப் புலிகளின் புலம் பெயர்ந்த தமிழர்களின் கட்டமைப்பு இப்போதும் அப்படியே இருக்கிறது. அவர் ஏன் இப்போதும் விடுதலைப் புலிகளுக்கு பயப் படுகிறார்?

இவற்றிலிருந்து ஒன்று தெரிகிறது: விடுதலைப் புலிகளின் தலைமைக்கு இறுதியில் என்ன நடந்தது என்று தெரியாமல் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது. ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் முக்கிய குழப்பம் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது என்பதுதான். இதற்கு விடை கொடுக்கக் கூடியவர் பத்மநாதன்தான். இதற்க்காகத் தான் பத்மநாதன் சட்ட விரோதமாகக் கடத்தப் பட்டார். இதனால்தான் பத்மநாதன் கடத்தலுக்குப் பிறகு இலங்கை தனது கவனத்தை எரித்திரியாமீது திருப்பியது. அங்கு அவசரம் அவசரமாக இலங்கைத் தூதுவராலயம் திறக்கப் பட்டு இலங்கை இராணுவப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரா தூதுவராக நியமிக்கப் பட்டார். விடுதலிப் புலிகளின் தலைமை எரித்திரியாவிலா?

8 comments:

ttpian said...

namathu thalaivar irunthalum vaazvar:iranthaalum vazvaar!

thamilini said...

The sun that set in Nandhikadal will rise soon...

Anonymous said...

oru naal vidiyum, ethirikal kathai mudiyum...

Anonymous said...

Nambi iruppom...

Anonymous said...

எத்தனை நாளைக்குத்தான் இப்படிச் சொல்லுவீர்கள்....

yalini said...

I do not know whether "he" will come or not, but there are thousands of them already born.

Anonymous said...

பிரபாவின் மரணம் என்ற கடையில் நல்ல வியாபாரம் நடக்கிறது வலைப் பதிவுகளில்..

Anonymous said...

இனியும் இப்படியான பொய்யான செய்திகளை எல்லாம் போட்டு மக்களை ஏமாத்த வேண்டாம்.
இனியாவது எமது மக்கள் நிம்மதியாக இருக்க விடுங்கோ.
உங்களோட சுயநலமிக்க போராட்டம் மக்களையும் அவர்கள் சொத்துக்களையும் அழித்ததே ஒன்றி வேறு ஒன்றுமே இல்லை.
தயவு செய்து இப்படி கேலிக்கூத்தான வலைப்பதிவுகளை எழுதுவதை இனிமேலாவது நிறுத்துங்கோ.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...