Saturday 26 September 2009

தடை செய்யப்பட்ட ஆயுதப் பாவனைகள் மூடி மறைக்கப் படுகின்றன.


வன்னியில் உள்ள மூன்று இலட்சம் அகதிகளின் அவலங்களைப் பற்றி ஓரிரு தகவல்கள் மட்டுமே வெளியில் வந்தன. கைத்தொலை பேசிகளில் இரகசியமாக எடுக்கப் பட்ட ஓரிரு காணொளிக் காட்சிகாளால் மொத்த மூன்று இலட்சம் மக்களின் அவலங்களை வெளிக் கொண்டு வர முடியாது. உண்மையான அவலங்கள் வெளிக் கொண்டுவரப் பட்ட அவலங்களிலும் பன்மடங்கானது. முகாமுக்குள் இருக்கும் காயப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் முகாமுக்குள் வைத்தே செய்யப் படுகின்றது. பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடைந்த நிலையில் உள்ளனர். இவர்களில் எவருக்கும் வெளியில் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப் படவில்லை. இவர்கள் வெளியில் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப் பட்டால் இவர்களைக் காயமடையச் செய்த தடை செய்யப் பட்ட ஆயுதங்கள் பற்றிய உண்மை வெளிவந்துவிடாமல் மூடி மறைக்கவே இவர்கள் முகாமுக்குள் வைத்தே மருத்துவ வசதிகள்(?) செய்யப் படுகின்றன.

1 comment:

maruthamooran said...

என்ன தர்மா, இப்பொழுதெல்லாம் கவிதைகளை தங்களிடமிருந்து அதிகம் காண முடிவதில்லை.

நன்றி,
பிரவீன் தங்கமயில்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...