Monday 14 September 2009

ஐநாவின் பொய் நா மாறுகிறதா?


சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் இலங்கையில் மூடிய திரைகளுக்குப் பின்னால் நடந்த போரில் இலங்கை அரசு:

1. போர்க் குற்றம் புரிந்துள்ளது
2. இனக் கொலை புரிந்துள்ளது
என்ற குற்றச் சாட்டுக்கள் பலமாக எழுந்துள்ளது.

இலங்கையின் உள்விவகாரங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இதில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று சொல்கின்றனர்.

இவை இரண்டையும் ஐக்கிய நாடுகள் சபை தடுக்க முயற்ச்சிக்கவுமில்லை இது பற்றி விசாரிக்கவுமில்லை. விஜய் நம்பியாரின் அடாவடித்தனமும் ஐநா அதிபரின் மௌனமும் ஐநாமீது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சந்தேகங்கள் ஏற்படுமிடத்து ஊகங்கள் வந்தந்திகள் பரவுவது இயல்பு. அவை உண்மைகளாகவும் இருக்கலாம். இப்போது ஐநாவைப் பற்றிய ஊகம் அல்லது வதந்தி இரண்டு பரவுகிறது:
1. இலங்கைக்கு ஐநா எதைச் செய்தாவது போரை முடி உன்மீது போர்க்குற்றம் சுமத்தப் படாமல் நாம் பார்த்துக் கொள்கிறோம் என்று ஐநா தரப்பிலிருந்து கூறப்பட்டதாம்.

2. ஐநா அதிபர் பான் கீமூனின் இரண்டாவது பதவிக்காலம் நீடிப்புக்கு அவர் எதையாவது சாதிக்க வேண்டும். அதற்கு அவர் இலங்கையுடன் ஒரு உடன்பாடு ஏற்படுத்த முயன்றாராம். அதன்படி அவரின் வேண்டுதலின் பேரில் வன்னி முகாம்களில் உள்ள மக்களை இலங்கை விடுவிக்கும் நாடகம் ஒன்றை அரங்கேற்றி அதன் மூலம் ஐநா அதிபர் பான் கீ மூனிற்கு புகழ் சேர்ப்பது.

இலங்கையில் போர் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது ஐநா அதிபர் இலங்கை சென்று போர் நிறுத்த வற்புறுத்தும் படியும் பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டிருக்கும் மக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும் படியும் ஐநா அதிபர் பான் கீ மூனிடம் வற்புறுத்தப் பட்டது. அப்போது இலங்கை அரசு இரு பொய்களைச் சொன்னது முதலாவது பாதுகாப்பு வலயத்துள் எழுபதினாயிரம் மக்கள் மட்டுமே இருக்கின்றனர் என்பது. இரண்டாவது அவர்களை வெளியேற விடாமல் ஐநூறுவரையிலான விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கின்றனர் என்பது. ஐநாஅங்கு இரண்டு இலட்சம் மக்கள் இருப்பதாகக் கூறியது. இருந்தும் அவர்களைப் பாதுகாக்க ஐநா அதிபர் இலங்கை செல்வதைத் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். பின் வேறு வழியில்லாமல் விஜய் நம்பியாரைத் தூதுவராக இலங்கைக்கு அனுப்பினார். அவர் அங்கு பேசிவிட்டு உடனடியாக ஐநா சென்று உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்தியா சென்றார். அவர் இந்தியா சென்றது இந்தியாவின் தமிழ்த்தேசியத்தின் எதிரிகளான சிவ் சங்கர மேனன் நாராயணன் ஆகியோருடன் எப்படி இலங்கையில் இனக்கொலையை அரங்கேற்றுவது பின்னர் அதை எப்படி மூடி மறைப்பது என்பது பற்றியா என்ற சந்தேகத்தை பலருக்கும் ஏற்படுத்தியது. அவர் இலங்கையில் என்ன பேசினார் என்பது பற்றிய அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்க முதலில் மறுதார். பிரித்தானியா அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாம மிரட்டியதாம். அதன்பின்னர் நேரத்தை இழுத்தடித்து விட்டு மூடிய நிலக்கீழறைக்குள் தனது இலங்கப் பயணம் பற்றி கூறினார். அவர் என்ன இலங்கையில் பேசினார் என்பது இதுவரை வெளிவரவில்லை.

இப்போது புதிய ஒரு தகவல் கசிந்துள்ளது: ஐநா விலிருந்து இலங்கைகு போர் குற்றங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் படி ஒரு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாம். இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் இப்படி ஒருதகவல் வந்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐநாவின் நிலைப்பாடு மாறுகிறதா?

2 comments:

Anonymous said...

appadi ellam onrumillai.veenaka moolaiya poattu kulappathayunko

கவிக்கிழவன் said...

good analyze

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...