Tuesday 25 August 2009

காணொளி இனக் கொலைச் சாட்சியத்தை அம்பலப் படுத்திய Channel - 4 TV

இந்திய உதவியுடனும் பயிற்ச்சியுடனும் ஆசியுடனும் ( இந்தியப் படைகளின் நேரடிப் பிரச்னமும் இருப்பதாகக் கருதப் படுகிறது) இலங்கை மேற்கொண்ட இன அழிப்பிற்கான ஆதாரங்களை பிரித்தானிய தொலைக்காட்சியான Channel - 4 TV மீண்டும் அம்பலப் படுத்தியுள்ளது.

கொலை செய்யும் இராணுவத்தினர் கொலை செய்யும் போது சகசமாக உரையாடுவதையும் சிரிப்பதையும் கவனிக்கும் போது இது அவர்களது அன்றாடக் கடமைகளில் ஒன்று என்பது போலத் தெரிகிறது. பட்டப் பகலில் வெட்ட வெளியில் நடக்கும் இக்கொலைகள் நன்கு திட்டமிடப் பட்டு ஒளிவு மறைவின்றிச் செய்யப் படுவதைப் பார்த்தால் இராணுவத்தின் மேலிடம் இதை நன்கு அறிந்துள்ளது என்று புலப் படுகிறது.

இதன் காணொளிப் பதிவை கீழ்க் காணலாம்:



இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் அவரது கைத்தொலைபேசியில் எடுக்கப் பட்ட காணொளிப்பதிவை இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு இலங்கையில் இருந்து கடத்திச் சென்று அம்பலப் படுத்தியுள்ளது.

Channel - 4 TV இன் செய்தியாளர் கிருஷ்ணன் குருமூர்த்தி இதை Channel - 4 TV செய்தியில் வெளிப் படுத்தினார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...