Friday 21 August 2009

வன்னியில் பாக்கிஸ்த்தானியப் படைகள் முகாம் - பயிற்ச்சி என்ற போர்வையில்


இலங்கையில் பாக்கிஸ்த்தானிய இராணுவத்திற்கு பயிற்ச்சி அளிக்கவிருக்கிறது. இதற்கு வன்னியில் பயிற்ச்சிக் கல்லூரியை இலங்கை இராணுவம் அமைக்கவிருக்கிறது.

இது செய்தி. ஆனால் இதன் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும். நேற்றுவரை இலங்கை இராணுவம் பாக்கிஸ்த்தானில் பயிற்ச்சி பெற்று வந்தது. பாக்கிஸ்த்தானிய படையினர் முக்கியமாக விமான ஓட்டிகள் நேரடியாகவே தமிழர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப் பட்டது. இப்படி இருக்கையில் பாக்கிஸ்த்தானுக்கு இலங்கையில் பயிற்ச்சி என்பது நம்ப முடியாததொன்று.

இந்தியப் படைகள் கண்ணிவெடி அகற்றுவது என்ற போர்வையில் இலங்கையில் காலடி எடுத்து வைத்ததை பாக்கிஸ்த்தானும் சீனாவும் விரும்பி இருக்காது. இதற்கு அவை தனியாகவோ அல்லது ஒருங்கிணந்தோ எடுக்கும் நடவடிக்கையா இது? இது பயிற்ச்சி முகாம் என்ற போர்வையில் அமைக்கப் படவிருக்கும் பாக்கிஸ்த்தானிய இராணுவ முகாமா?வன்னி வதை முகாம்களில் இருக்கும் மக்களின் நிலங்கள் இதற்காகப் பாவிக்கப் படவிருக்கிறதா?

1 comment:

Anonymous said...

Storm in a tea-cup...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...