Thursday 20 August 2009

கோபாலபுரம்-டெல்லி-கொழும்பு அடுத்த தொடர் நாடகம் ஆரம்பம்?


இந்த ஆண்டின் முதற் பகுதியில் இலங்கையில் இனக்கொலை உக்கிரமாக நடந்து கொண்டிருந்தவேளை கோபாலபுரத்திலிருந்து டெல்லிக்கு தந்திகள் கோரிக்கைகளாகப் பறக்கும் போர் நிறுத்தம் உடனடியாக வேண்டும் என்று. கோபாலபுரம் அது நடக்கப் போவதில்லை என்பதயும் நன்கு அறியும் இருந்தும் தொடர்ந்து கோரிக்கைகள் பறந்த வண்ணமே இருந்தன. டெல்லியும் சும்மா இருக்கவில்லை போர் நிறுத்தம் போர் நிறுத்தம் என்று கொழும்பை நோக்கி கூவிக் கொண்டே இருந்தது. ஆனால் டெல்லியும் கொழும்பும் இணைந்து தான போரை நடாத்தி தமிழர்களை கொன்று குவித்ததாம். இடையில் இலங்கையில் போர் முடிந்து விட்டது என்று கோபாலபுரம் மார்தட்டிக் கொண்டது. அப்படி இல்லை அங்கு இப்போதும் போர் நடக்கிறது என்று யாராவது சொன்னால் அவர்கள் மிரட்டப் பட்டனர். சனி-நரிக் கூட்டமைப்பு இந்த நாடகத்தை வைத்து தேர்தலில் வென்றது. இந்த ஆண்டில்அறுபதிராயிரத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் கொல்லப் பட்டனர்.

இரண்டாவது நாடகம்.
கொழும்பின் இரண்டாவது இன அழிப்பு மூன்று இலட்சம் தமிழர்களை இடைத் தங்கல் முகாம் எனப்படும் வதை முகாம்களில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்பது. அதற்கு டெல்லி ஐநூறு கோடி ரூபா கொடுக்கும். டெல்லி கோபாலபுரத்திற்கு ஆறு மாதங்களுக்குள் மூன்று இலட்சம் தமிழர்களும் மீள் குடியேற்றப் படுவார்கள் என்று சொல்லி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. எதுவும் நடக்கவில்லை.
கோபாலபுரம் தொடர்ந்து கோரிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது தமிழர்கள் மீளக் குடியேற்றப் பட வேண்டும் என்று.
டெல்லியும் கொழும்புக்கு "வலியுறித்திக்" கொண்டே இருக்கிறது.
கொழும்பு எதுவும் செய்யவில்லை. கொழும்பு இலங்கை முழுவதும் சிங்களவர்கள்தான் வாழவேண்டும் என்ற கொள்கையுடையது. மற்றவர்கள்????

கொழும்பிலிருந்து கோபாலபுரத்திற்கு டெல்லியூடாக வந்த உத்தரவிற்கு அமைய கோபால புரம் இப்போது சொல்கிறது இலங்கையில் சுமூக நிலை தோன்றிவிட்டது என்று.
இதுதான் இப்போதைய வெற்றி நாடகம்.
இல்லை இலங்கையில் தமிழர்கள் பரிதவிக்கிறார்கள் என்று சொல்பவர்கள் மிரட்டப் படுவார்களா?

1 comment:

Unknown said...

உங்க தமிழ் மக்களை இப்போவே காப்பாற்ற முடியலை. அப்பறம் எதுக்கு தனி நாடு வேணும்னு கேட்கறீங்க.
இரண்டு தலைமுறைகளை கல்வி கற்க விடாமல் செய்தது போதாதா? புள்ள குட்டிங்களை படிக்க வைங்க .

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...