Tuesday 11 August 2009

பத்மநாதனைக் கடத்தலும் கருணாவின் பிதற்றலும்


பத்மநாதனின் கைது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கருணா என்கிற முரளீதரன் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் பத்மநாதனைக் கைது செய்திருக்க முடியாது அவர் கைது செய்யப் பட்ட படியால் பிரபாகரனின் மரணம் உறுதியாகிவிட்டது என்பது போல் கூறியிருந்தார். அவரது கூற்று பிரபாகரனின் உடலை நேரில் கண்டு அடையாளம் காட்டி(க்கொடுத்த)ய கருணாவிற்கே அதில் சந்தேகம் இருப்பதாகத் தெரிகிறது. அல்லது அவர் சொல்லவதைப் பலர் நம்பவில்லை என்று அவருக்கு தன் மீதே சந்தேகம். வேறு யாராவது அடையாளம் காட்டியிருந்தால் மக்கள் நம்பி இருப்பார்கள். வேலிக்கு ஓணான்தான் சாட்சியம் கூற முடியும் என்பதால், கருணா போன்றவர் அடையாளம் காட்டியது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பத்மநாதனின் கைதுக்கும் பிரபாவின்
மரணத்துக்கும் சம்பந்தம் உண்டா?


பழைய கைது
ஒரு குறிப்பிட்ட நாடு பத்மநாதனைக் கைது செய்ததாம் . இதை கேள்விப்பட்ட ஆரிய சிங்களக் கூட்டமைப்பு உடன் அந்த நாட்டுக்கு விரைந்ததாம் பத்மநாதனை தமது நாட்டுக்கு கடத்திக் கொண்டுவர. அதற்குள் வன்னிக்காட்டுக்கு செய்தி போக பிரபாகரன் இருபது மில்லியன் டொலர்களுக்கு மேல் செலவழித்து(?) பத்மநாதனை மீட்டு விட்டாராம். இப்போது பத்மநாதனை கைது செய்தபோது அப்படிச் செய்யாத படியால் பிரபா உயிருடன் இல்லை. மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் நல்ல முடிச்சு.

இப்போதைய கைது/கடத்தல்
இந்தமுறை நடந்தது பத்மநாதன் பெயர் தெரியாத் நாடு ஒன்றின் பிரதிநிதி, பெயர் குறிப்பிடப் படாத நாடு ஒன்றிற்கு பேச்சு வார்த்தைக்கு வரும் படி, பத்மநாதனை அழைத்து விட்டு அங்கிருந்து சர்வதேச நியமங்களுக்கு எதிராக அவரைக் கடத்திக் கொண்டுவந்து விட்டனர். கொழும்பு வந்த பின்னேதான் செய்திகள் வெளிவந்தன. பத்மநாதனுக்கு தனது மூக்குக் கண்ணாடியையோ அல்லது அவசிய மருந்துப் பொருட்களையோ எடுத்து வரக் கூட வாய்ப்பு கொடுக்கப் படவில்லை. இதை பிரபாகரன் மண்ணில் இருந்தாலும் (இப்போதைய நிலையில்) அறிய முடியாது அல்லது விண்ணில்(அல்லது துரோகக் குழுக்கள் சொல்வது போல் நரகத்தில்) இருந்தாலும் அறிய முடியாது.

ஏன் இந்தப் பிதற்றல்.

8 comments:

Anonymous said...

"pithartralkal" cannot be counted!!!!

Anonymous said...

Just ignore the idiot...

ttpian said...

during kattapomman age,we have only one ettappan:now....so many!
karuna(nidhi)jeyaa,cho,the hinsu raam,thinamalar ramesh,the list is endless....

yalini said...

சொல்லுவார் சொல்லக் கேட்ப்பார்க்கு மதி என்ன?

Anonymous said...

என்று முடியுமிந்த துரோகிகள் வஞ்சகம்....

Anonymous said...

Excellent picture.....

Anonymous said...

The picture tells the whole story...

Anonymous said...

எம்தலைவர் சாகவில்லை. இன்னும் புலி ஓயவில்லை!

இப்பொழுது நடக்கும் எல்லா நாடகங்களும் தலைவரின் கணக்குப்படி கச்சிதமாக நடந்தேறுகின்றன.

தலைவர் அரசியற் சூழ்நிலைகளால் தந்திரோபாயமாக மறைந்திருந்தே கட்டளைகள் பிறப்பிக்க வேண்டிய நிலை. ஆனாலும் விசுவாசமான புலம்பெயர் புலனாய்வுப்பிரிவுப் போராளிகளால் கச்சித்மாக காரியங்கள் நடாத்தப்படுகின்றன.

தலைவரை இறந்ததாய் அறிவித்து தான் மொத்தப்பணத்தையும் தட்டிக்கொள்ள நினைத்த கே பீ எனும் தமிழினத் துரோகிக்கு தலைவர் தன் வழியில் தக்க பாடம் புகட்டியுள்ளார். எதிரியைக் கொண்டே எதிரியை அழிக்கும் தலைவரின் தனித்துவமான புதிய போரட்ட நெறிமுறை ஆரம்பித்துவிட்டது.

அதனால் கே பீ உருவாக்கிய மாயைக்குள் சிக்கி அந்த துரோகியை தலைவனாக்காதீர்கள் தமிழீழ மக்களே..

தலைவன் வருவான் தக்க தருணத்தில்.. அதுவரை பொறுங்கள். அதிரடியாய் தொடங்கும் ஐந்தாம் கட்ட ஈழப்போர்!!! அது ஓர் உலகப்போர்!!!! தமிழீழம் நாளை நிச்சயம் மலரும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...