Sunday 9 August 2009

இலங்கையில் நடந்தது வெறும் பயங்கரவாத ஒழிப்பா? அல்லது ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் சதியா?







. .
தமிழ்த்தேசியத்தின் ஆயுதப் போராட்டம் ஒருநாளில் அல்லது ஒரு வருடத்தில் உருவானதல்ல. இலங்கை சுதந்திரமடைந்த பின் தமிழர்களின் மொழியுரிமையப் பறித்து அவர்களது நிலங்களை அபகரித்து கலாச்சாரத்தை சீரழித்து வாக்குரிமைகளைப் பறித்து...இப்படிப் பல கொடுமைகளைச் செய்த போது அதை எதிர்த்து அமைதியான வழியில் குரல் கொடுத்தபோது அவர்கள் மீது பயங்கர கொதிக்கும் தாரில் குழந்தைகளைப் போட்டெடுத்தமை உட்படப் பல கொடுமைகளைச் செய்தபோது அவர்கள் மீது திணிக்கப் பட்டது. இப்படிப்பட்ட அரச/பேரினவாத பயங்கரவாதம் தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படது. முப்பாதாண்டுகால அடக்குமுறையின் விளைவாகவே தமிழர்களின் ஆயுதப் போராட்டம் உருவானது

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் ஆட்சி உரிமையை இழந்ததில் தமிழர்கள் மத்தியில் இருந்த துரோகிகளுக்குப் பெரும் பங்குண்டு. அதே போல் இன்று தமிழ்தேசியத்தின் ஆயுத போராட்டம் ஆரிய சிங்களக் கூட்டமைப்பால் மழுங்கடிக்கப் பட்டதிலும் துரேகிகளுக்கும் பங்குண்டு.

தமிழ்த் தேசியவாதத்தை ஒழிப்பதில் ஆரிய-சிங்கள பேரினவாதிகள் கைகளை இணைத்துக் கொண்டமை ஒரு சம்பவத்துடன் சம்பந்தப் பட்டதல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாய்க்கு எங்கு அடித்தாலும் அது காலைத்தான் தூக்குமாம்.
தமிழ்த்தேசியத்தைப் பற்றிய பேச்சு எழும்போது உத்தரப் பிரதேசவாதிகளின் தமிழ்நாட்டுக் கொத்தடிமைகள் முதலில் சொல்லுவது "போபஸ்-காந்தியின் கொலை".
ஆனால் இதற்கு முன்னதாகவே ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு ஏற்படுத்தப் பட்டு விட்டது. இவர்கள் வலுவாகும் அடாவடித்தனமாகவும் தமக்கு ஆதரமாக எடுக்கும் கொலையானது தமிழ்த்தேசிய வாதத்தை ஒடுக்குவதற்காக ஒழுங்கு செய்யப் பட்ட நாடகமா என்ற சந்தேகத்தைபலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்தது ஒரு தேசிய இனத்தின் உரிமைப் போருக்கு எதிராக

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...