Sunday 2 August 2009

யாழ் தேர்தல்: சுதந்திரமும் மக்களாட்சியும்


மக்களாட்சி என்பது ஒரு இனிய சொல். உலகின் பெரும் பகுதிகளில் மக்களாட்சி என்பது அடக்கு முறையாளர்களின் போலிப் போர்வையே. உலகின் பல நாடுகளின் அடக்குமுறை ஆட்சியாளர்கள் ஒழுங்காக தேர்தல் நடந்தி முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே. ஜேர்மனியின் ஹிட்லர் கூட மக்களாட்சி முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர். ஒழுங்காகத் தேர்தல் நடத்தப் படாமல் தேர்தெடுக்கப்படும் அரசுகளும் உண்டு. பெரும்பாலான அரசுகள்பொய்யான வாக்குறுதிகளாலும் ஊடகங்களால் தவறான வழிநடத்தல்களாலும் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. தன்னை மக்களாட்சி நாடெனக் கூறும் அமெரிக்காவில் தங்கள் வாக்குக்கல் கணக்கில் எடுக்கப் படுவதில்லை என பல இலட்சக் கணக்கான மக்கள் குறை கூறுவது உண்டு.
சுதந்திரமாக மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாத இடத்தில் தேர்தல் நடத்துவதால் என்ன பயடும் இல்லை.

யாழ்ப்பாண மாநகரத் தேர்தலை ஒட்டி நடாத்தப் பட்ட கருத்துக் கணிப்பு வாக்களிப்பில் தேர்தலில் வாக்களிபீர்களா என்ற கேள்விக்கு 85% மக்கள் பதிலளிக்கவில்லை! இந்நிலையில் வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப் படுகின்றன. தேர்தல் நடாத்தும் சூழ்நிலை இல்லாப் பகுதியில் தேர்தல் தேவையா?

1 comment:

Unknown said...

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் வேல் தர்மா... யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடந்த தேர்தலில் ஜனநாயக் முறைப்படிதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜெயித்ததா? செல்வராசா கஜேந்திரன் பெற்ற அத்தனை வாக்குகளும் நேர்மையானதா... புளுகுவதற்கும் ஒரு அளவு வேண்டும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...