Monday 13 July 2009

நம்புவோம் நம் தலைவன் வருவான் என்று.



அவர் இறந்துவிட்டார் என்கின்றனர்

அவர் பின் நின்றோர்.

அவர் இருக்கின்றார் என்கின்றனர்

அவருக்குத் துணை நின்றோர்.

இரு சாராரும் நம்மவரே.


தமிழ்த்தேசியத்தை அழித்தவர்

பல பொய்கள் சொன்னார்கள்.

பல பொய்கள் சொல்கின்றார்கள்.

தமிழ்த்தேசியத்தைப் பாதுகாக்க

நம்மவரும் ஒரு பொய் சொல்லலாம்.




மறைந்திருந்து வழிகாட்டியவன்

மறைந்தாலும் வழிகாட்டுவான்.

கானகத்திலிருந்து வழிகாட்டிய தலைவன்.

மறைந்தாலும் மறைக்கப் பட்டாலும்

வானகத்திலிருந்து வழிகாட்டுவான்.


அந்திக் கடலில் மறையும் சூரியன்

மறு நாள் காலை உதிக்கிறான்.

நந்திக் கடலில் மறைந்தவன்

மீண்டும் வருவான் என நம்புவோம்.


கிறிஸ்த்தவர்கள் நம்புகின்றனர்

ஏசு மீண்டும் வருவார்

பாவிகளை ரட்சிக்க என்று.

இந்துக்கள் நம்புகின்றனர்

திருமால் மீண்டும் வருவார்

பாவிகளை அழிக்க என்று

நாமும் நம்புவோம்

நம் தலைவன்

வருவான் என்று.

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...