Tuesday 23 June 2009

மானம் கெடும் ஐநா செயலர் பான் கீ மூன்


ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் திரு பான் கீ மூன் அவர்கள் பத்திரிகைகளின் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.

இவர் ஐநா செயலராகப் பதவி ஏற்றபோது இவரைப் பற்றி வந்த கருத்துக்கள்:
  • முப்பது வருடங்களின் பின் ஐநா செயலராகப் பதவி ஏற்கும் ஆசியர்.
  • 13ம் திகதி ஜூன் மாதம் 1944இல் Chungju, Korea வில்பிறந்தவர்.
  • பன்னாட்டு உறவுகள் தொடர்பான படிப்பில் பட்டம் பெற்றவர்.
  • கொரியாவின் வெளிநாட்டமைச்சர்.
அவர் தன்னைப் பற்றிச் சொன்னவை:
  • ஒத்துப் போகச் செய்பவன், சமப் படுத்துபவன், நடுநிலையாளன்.
  • வெளியில் சாதுவாகத் தென்பட்டாலும் தேவையான நேரத்தில் மன உறுதியுடன் செய்ற்படுபவன்.
  • போரின் சாம்பலில் இருந்து எழுந்த கொரியாவச் சேர்ந்தவன்
நேர்மையற்ற பான் கீ மூன்.
The Economist சஞ்சிகை அதிகாரத்திற்கு உண்மையாயிருத்தல் என்ற அம்சத்தில் இவருக்கு பத்திற்கு மூன்று புள்ளிகளை மட்டும் வழங்கியது. இதற்கு அப் பத்திரிகை கூறிய காரணம் இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடாத்திய போரில் அவர் நடந்து கொண்டவிதம். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது அவர் தன்க்கு இலங்கை செல்ல நேரமில்லை என்று தட்டிக் கழித்தார். போர் முடிந்த பின் அங்கு போனார். இது தொடர்பாக அவர்டம் ஒரு பத்திரிகையாளர் என்ன போர் வெற்றி விழாவில் பங்கேற்கப் போகிறீர்களா என்று ஏளனமாகக் கேட்டார்!
Financial Times என்ற பத்திரிகையும் இவர் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக நடந்து கொண்டவிதத்தை தாக்கி எழுதி இருந்தது.
.
ஐநா ஊழியர்களுடன் முரண்பாடு
ஐநா ஊழியர் சங்கத்துடன் பான் கீ மூனுக்கு நல்ல உறவு இல்லை. இவர் செய்த சில நியமனங்களால் உறவு பாதிக்கப் பட்டது. இது தொடர்பாக வந்த கருத்து:

Ban apponted former peacekeeping chief Jean Marie Guehenno as his Under Secretary General
for Regional Cooperation, that is on all these groups. Then, Ban did no assign Guehenna a single
peice of work. It was a patronage appointment, apparently designed to keep Guehenno's visa status. This is not a new way of doing business.
.
தட்டிக் கழிக்கப் பட்ட தமிழர் விவகாரம்.
இலங்கையில் தமிழ்ர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப் பட்டபோது அது தொடர்பான பல கேள்விகளை பான் கீ மூனும் அவரது உதவியாளர்க்ளும் தட்டிக் கழித்தனர். முக்கியமாக விஜய் நம்பியாரின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவான விளக்கங்கள் வழங்கப் படவில்லை.
.
பான் மிகப் பயங்கரமான கொரிய நாட்டவர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு ஊடகம் பான் கீ மூனை மிகப் பயங்கரமான கொரிய நாட்டவர் என்று வர்ணித்துள்ளது. அது தொடர்ந்தும் கூறுகையில்:

Not for him bold speeches or attempts to mobilize public opinion behind what could be an organization that helps tackle nuclear proliferation or reconstruct Afghanistan. Not for him championing human rights, or even rallying in defense of beleaguered civilians. Visiting Malta in April for yet another honorary degree, he was evasive when asked about the island's penchant for sending illegal African immigrants packing off to Italy, saying, "I am not in a position to intervene." As tens of thousands of Tamil refugees lingered under fire on a narrow strip of beach in Sri Lanka, Ban and his advisors did little more than huddle in New York and wring their hands, only making a trip to the war zone after hostilities ended. Under his stewardship, the United Nations isn't merely an unhelpful place—it's a largely irrelevant one.

தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப் பட்டுக்கொண்டிருக்கும் போது இவரும் இவரது ஆலோசகர்களும் நியூயொர்க் நகரில் கட்டியணைத்துக் கொள்வதைத் தவிர மேலதிகமாக ஒன்றும் செய்ய வில்லை என்று கிண்டலடித்ததோடு நிற்காமல் இவரது வழிகாட்டலின் கீழ் ஐநா என்பது உதவாத இடமும் தேவையற்ற இடமும் ஆக இருக்கிறது என்கிறது அந்த ஊடகம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...