Tuesday 9 June 2009

மறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை


மறப்பேனா அன்று
உன்னிரு விழிகள்
எனைப் பார்த்ததை
உடல் வியர்த்ததை
.
மறப்பேனா அந்த
நெருக்கத்தில்
ஒரு புன்னகையை
சிறு கண்ணசைவை
.
மறப்பேனா அன்று
எம் உடல்கள்
மெல்ல உரசியதை
என்னுயிர் உருகியதை
.
மறப்பேனா அங்கு
நடனசாலையில்
எம்கரங்கள் பற்றியதை
சுரங்கள் வற்றியதை
.
மறப்பேனா அன்று
எமை மறந்து
இணைந்ததை காமத்தீ
அணைந்ததை.
.
மறப்பேனா அன்று
எனை நீ வெறுத்துப்
பிரிந்ததை என்னுயிர்
எரிந்ததை

2 comments:

இளங்குமரன் said...

எனக்கு நிகழ்ந்தது வேறு எவருக்கும் நிகழக்கூடாதென அந்த இறைவனை வேண்டினேன். அவன் பொய்யன். அதனால்தான் உங்களுக்கும்.....

amma said...

எனக்கு நிகழ்ந்தது வேறு எவருக்கும் நிகழக்கூடாதென அந்த இறைவனை வேண்டினேன். அவன் பொய்யன். அதனால்தான் உங்களுக்கும்.....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...