Tuesday 9 June 2009

வணங்கா மண்ணும் வழங்கா மண்ணும்



இலங்கையின் வன்னிப் பிரதேசத்தில் நடந்த இன ஒழிப்புப் போரின் போது அங்கிருந்து பன்னிரண்டாயிரம் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து யாழ்ப்பாண மாவட்டம் சென்றனர். இவர்களைப் பராமரிக்க தேவையான வழங்கள் இன்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் (மாவட்ட ஆட்சியாளர்) யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இவர்களுக்கு உணவு மற்றும் தேவையானவற்ற வழங்கும் படி கேட்டுக் கொண்டார். யாழ் அரச அதிபர் தனது அரசாங்கத்திடமிருந்தே இடம் பெயர்ந்த மக்களை பராமரிக்கத் தேவையான நிதியைப் பெற்றிருக்க வேண்டும். அப்படியிருக்கையில் யாழ் அரச அதிபர் மாணவர்களிடம் கையேந்தியதேன்? இலங்கை அரசு நிதி வழங்க மறுத்ததா? இலங்கை அரசு தமிழர்களுக்கு எதையுமே வழங்காதா?

ஆபத்தான பொருட்கள் இல்லாத படியால் அனுமதி இல்லை!
வன்னியில் இருந்து வரும் தகவல்களின் படி அங்கு தங்கியிருக்கும் மக்கள் மிக மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள்.
  • உண்ண உணவில்லை.
  • உடுக்க உடையில்லை.
  • உறங்க இடமில்லை.
  • உயிர் வாழ உரிமையில்லை.
  • மரணத்தைத் தவிர வேறு தெரிவில்லை.

இந்நிலையில் இலங்கைக்கு தமிழர்களுக்கான நிவாரணப் பொருள்களுடன் சென்ற வணங்காமண் என்ற கப்பல் இலங்கை அரசால் தடுத்து நிறுத்தப் பட்டது. அக்கப்பலை பலத்த சோதனைக்குள்ளாக்கிய இலங்கை அரசு அதற்குள் எந்தவித ஆபத்தான பொருட்களும் இல்லை நிவாரணப் பொருட்கள் மட்டுமே இருக்கின்றன என்று கூறித் திருப்பி அனுப்பி விட்டது!!!!!

தமிழனுக்கு உண்ண உணவில்லை. உணவு வேண்டாம் காசு தா!
இப்போது இலங்கை அரசு எந்த தொண்டர் நிறுவனங்களையும் தமிழர்களுக்கு உதவ அனுமதிப்பதில்லை. அது கேட்பதெல்லாம் பணம் மட்டும்தான்.

சிங்களவர்கள் வாக்குறுதியை நிறைவேற்ற
வேண்டும் என்கிறது காங்கிரசு.
சிங்களவர்கள் கடந்த காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள். அதில் எதையும் நிறைவேற்றியதில்லை. இந்நிலையில் மஹிந்த ராஜபக்சே அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஜயந்தி நடராஜா அவர்கள் தெரிவித்திருக்கின்றார். யாருக்கு எங்கு எப்போது என்ன வாக்குறுதி வழங்கப் பட்டது?

3 comments:

சாந்தி நேசக்கரம் said...

இலங்கையின் சனநாயகம் இப்படித்தான் இருக்கிறது. தமிழர் தலைவிதியை நோகத்தான் முடிகிறது.

சாந்தி

Anonymous said...

வணங்க மண் ஒரு வின போன மண்

Anonymous said...

டெல்லியில் இரு பார்ப்பன நாய்கள் இருந்து இலங்கைகு உதவி செய்யும் வரை எல்லாமே வீணாப்போகும் மண்தான்!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...