Sunday 7 June 2009

மூடிய அறைக்குள் ஐநா அதிகாரிகள் வறுத்தெடுக்கப் பட்டனரா?


ஐக்கிய நாடுகளின் அதிபர் பான் கீ மூன் அவரது உதவியாளர் விஜய் நம்பியார் உட்பட சில அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர்கள் போலவே அண்மக்காலங்களில் செயற்பட்டு வந்தனர். ஹெலிக்கொப்டரில் இருந்து தான் பார்த்தபோது இலங்கையின் வன்னிப்பகுதியில் கனரக ஆயுதங்கள் பாவித்தமைக்கான அடையாளங்கள் எவற்றையும் தான் பார்க்கவில்லை என்று அண்மையில் பான் கீ மூன் தெரிவித்தது அவர்மீது பலத்த சந்தேகங்களை பலருக்கும் ஏற்படுத்தியது. விஜய் நம்பியார் வில்லன் நம்பியார் ஆகவே செயற்பட்டார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் மிரட்டலை பிரித்தானியா வெளியிட்டது. இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கையில் அங்கு சென்ற நம்பியார் தனது அறிக்கையை சமர்பிக்காமல் அடாவடித்தனமாக இழுத்தடிதார்.
யூன் மாதம் 5ம் திகதி அதிகார பூர்வமற்ற ஐநா பாதுகாப்புச் சபைக் கூட்ட மொன்று மூடிய அறைக்குள் நடை பெற்றது. அதன் பின் பான் கீ மூன் இலங்கை தொடர்பாகத் தனது கருத்தை மாற்றிக் கொண்டது போல் தெரிகிறது. அவர் வெளியிட்ட அறிக்கையில்:

Ban Ki-moon told UN Security Council on Friday that any "credible accusations" against either the military or the Liberation Tigers of Tamil Eelam (LTTE) should be investigated.
"Whenever and wherever there are credible allegations for the violations of international humanitarian law there should be a proper investigation," Ban told said after the closed-door meeting.
"I'd like to ask the Sri Lankan government to recognise the international call for accountability and full transparency," he said.
இலங்கையில் போர் குற்றங்கள் இழைக்கப் பட்டமைக்கான நம்பகமான ஆதரங்கள் இருக்கிறதாம் அதை விசாரிக்கப் படவேண்டியவையாம். இப்படிச் சொல்கிறார் பான் கீ மூன் அவர்கள்.
அவர் போர் நடந்துகொண்டிருந்த வேளை இலங்கைக்குச் செல்லாமல் நேரமில்லை என்று சொல்லித் தட்டிக் கழித்தார். போர் முடிந்த பின் இலங்கை சென்றார். அவரது பயண நோக்கத்திற்கு சம்பந்தமில்லாத கண்டி நகர் சென்று அங்குள்ள பௌத்த சின்னங்களைக் கண்டு களித்தார்.
அதன் பின் அவர் இலங்கை தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள் இலங்கையை பாதுகாப்பதாகவே இருந்தன.
இப்போது பான் கீ மூன் அவர்கள் திடீரென்று இலங்கை மீது விசாரணை வேண்டுமென்று கூறுவது ஏன்? மூடிய அறைக்குள் நடந்த கூட்டத்தில் அவர் சில பிரதி நிதிகளால் வறுத்தெடுக்கப் பட்டாரா?

2 comments:

மயாதி said...

எல்லாம் அரசியல் ரகசியம் ..

Anonymous said...

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

Top Tamil Blogs

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

சிறந்த வலைப்பூக்கள்

நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...