Thursday 28 May 2009

பிரபாகரனின் மனைவியும் இரண்டாவது மகனும் சென்ற ஆண்டே தப்பிவிட்டனர்.







விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி கொல்லப் பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இது இதுவரை யாராலும் மறுக்கப் படவில்லை. ஆனால் இலங்கை அரசுவெளியிட்ட படம் சாள்ஸ்ஸினுடையது அல்ல அது வேறு ஒரு கடற்புலியுனுடையது என்று சிலர் மறுத்தனர். இலங்கை அரசு வெளியிட்ட படம் 24 வயதிலும் கூடியவர் போலிருப்பது உண்மை. சாள்ஸ் அன்ரனியின் மரணத்திலும் மர்மம் தொடர்கிறது.
.
பிரபாகரனின் மனைவி மதிவதனியும் மகள் துவரகாவும் இளைய மகன் பாலச்ச்ந்திரனும்(13 வயது) கொல்லப் பட்டதாக முதலில் அறிவித்த இலங்கை அரசு பின்னர் கொல்லப் பட்டவில்லை என அறிவித்தது. ஆனால் துவாரகா அயர்லாந்தில் படித்துக் கொண்டிருப்பது என்ற உண்மை அறிந்த பின்னரே இலங்கை அரசு தனது கூற்றை மாற்றிக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. இலங்கையில் போர் உச்சக் கட்டத்தை அடைந்த வேளை துவாரகா நோர்வே சென்றதாகவும் ஒரு தகவல் உண்டு.
.
மதிவதனியும் பாலச்சந்திரனும் சென்ற ஆண்டே முல்லைத்திவிலிருந்து தமிழ்நாடு சென்று பின்னர் விமான மூலம் சிங்கப்பூர் சென்று அதன் பின்னர் அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டனர் எனவும் சிலர் உறுதியாகக் கூறுகின்றனர்.



2 comments:

கொழுவி said...

இந்த ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு.. தலைப்பிற்கேற்ப கவிதைகள் எழுதுங்களேன்..

தேவன் மாயம் said...

உங்கள் உள்ளத்துடிப்பு புரிகிறது நண்பரே!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...