Sunday 24 May 2009

கேள்விக் குறியான தமிழர் எதிர் காலம்!!!



போலிப் போர்நிறுத்த வேண்டுகோள்கள் விட்டுக் கொண்டே சிங்களவருக்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கின பல நாடுகள். போலியாக விட்ட அறிக்கையை நம்பி பிரபாகரன் இறந்ததாக பல செய்தி ஏடுகள் செய்தி விட்டு மகிழ்ந்தன. போருக்குப் பின் என்ன செய்வதென்று போர் முடியமுன்னரே திட்டமிடுவதாகவும் ஒருசில நாடுகள் கூறின. இப்போது என்ன செய்வது என்ன சொல்வது என்று சொல்ல முடியாமல் இருக்கின்றன.
.
தமிழர் மீதான அடுத்த கட்ட அடக்கு முறைக்குத் தயாராகி விட்டார் மஹிந்த. அதாவது தமிழர்களுக்கு என்று ஒரு அரசியல் கட்சி இருக்கக் கூடாது என்பது தான் அவரது அடுத்த திட்டம். விடுதலைப் புலிகளை அழித்துவிட்ட நிலையில் தமிழர் தரப்பில் சிறிய கட்சிகள் எதுவும் தேவையில்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து வடபகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச டக்ளசிடம் கேட்டதாகவும் கொழும்பில் ஈ.பி.டி.பி. வட்டாரங்கள் கூறுகின்றன. கருணா ஏற்கனவே சேர்ந்து விட்டார். சேராத பிள்ளையானுக்கு என்ன நடக்கும்? தமிழர்களை இப்படி ஒடுக்க நினைப்பவரிடம் தமிழர்களுக்கு சம உரிமை பெற்று தரப்படும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
.
தமிழர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நடக்கும் அடக்கு முறைகள் பலப்பல. இவை மறைக்கப் படுகின்றன.
.
இலங்கையில் மனித உரிமை மீறப் படுவதில்லை என்கிறது இந்தியா
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று ஆர்ஜென்ரீனா ,பொஸ்னியா, கனடா ,சிலி, பிரான்ஸ் ஜேர்மனி, இத்தாலி, மெக்ஸிக்கோ, மொரிசியஸ், நெதர்லாந்து, கொரிய குடியரசு,ஸ்லோவாக்யாஇ ஸ்லோவேனிய , சுவிற்சர்லாந்து, உக்கிரைன், ஐக்கிய ராச்சியம், உருகுவே ஆகிய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தியா இதை ஏற்றுக் கொள்ள வில்லையாம். ஐநாவின் மனித உரிமைக்கான ஆணையத்தில் இந்தியா இலங்கையில் மனித உரிமைகள் மீறப் படுவதில்லை என்று வலியுறுத்துமாம். இலங்கையில் நடப்பதைச் சரிவரப் புரிந்து கொள்ளாத இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு உதவுமாம். இலங்கை இனப் பிரச்சனையைத் தீர்க்குமாம்.

1 comment:

ttpian said...

தமிழன் கருனானிதி மெல்ல இந்தியனாக மாறி,இப்போது இதாலிய பிரஜை!
வாழ்நாள் முழுவதும் உன்னை நம்பி ஏமாந்தேனே!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...