Friday 8 May 2009

சட்ட விரோதச் செயலுக்கு இந்தியா 100கோடி தமிழ்நாடு 25 கோடி.


இலங்கை அரசு சட்டத்திற்கு விரோதமாகவும் பன்னாட்டு நியமங்களுக்கு எதிராகவும் 192000 தமிழர்களை தடுத்து வைத்திருக்கிறது. இங்கு இவர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைத்திருந்து சொல்லோணாக் கொடுமைகளைச் செய்து வருகிறது. பெண்கள் பாலியல் வதைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு. சிசுக்கள் கொல்லப் படுவதாகவும் தகவல். நாளைய புலிகள் என்று!!! மனைவிகள் கணவன்மார்களிடமிருந்து பிரிக்கப் பட்டு பாலியல் வதை. இராணுவத்தினர் வீடுகளில் கொத்தடிமைகள். படையினர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குளிக்க வேண்டும் உடை மாற்ற வேண்டும்.

இளைஞர்கள் தனியாக்கப் பட்டு நிர்வாணமாக்கப் பட்டுஇருவரை ஒன்றாகச் சேர்த்து கைகால்கள் கட்டப் பட்டு வைக்கப் பட்டுள்ளனர்.
இந்தக் கொடுமைகள் புரியும் இலங்கையுடன் நல்ல நட்புறவைப் பேண விரும்புகிறது இந்தியா!!! வெட்கக்கேடு.
இந்தக் கொடுமைகள் புரியும் இலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டைப் பேண விரும்புகிறது இந்தியா!!! வெட்கக் கேடு!!! வெட்கக் கேடு!!!
இத்தோடு நிற்கவில்லை இந்தியாவின் வெட்கங் கெட்ட செயல். கேவலமான இலங்கைக்கு இப்போது மோசமான பொருளாதாரப் பிரச்சனை. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைப்பதில் தாமதம். இப் பிரச்சனையை தீர்க்க இந்திய ஆட்சியாளர்கள் ஒரு தந்திரத்தைக் கையாளுகின்றனர். இடைத்தங்கல் முகாம் எனப்படும் வதை முகாம்களைப் பராமரிக்க என்று சொல்லி இந்திய மத்திய அரசு 100கோடியும் உண்ணாவிரத நாடகக் கலைஞரின் அரசு 25 கோடியும் கொடுத்து உதவிசெய்ய விருப்பதாக இலங்கைப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
16 தொகுதிகளிலும் காங்கிரசு தோற்கட்டும்.

1 comment:

கவிக்கிழவன் said...

இந்திய ஆட்சியாளர்கள் தந்திரத்தைக் கையாளுகின்றனர்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...