Saturday 21 March 2009

தமிழ்நாட்டுத் தமிழர்க்குப் பாடம் படிபிக்கும் ஆரியரின் நீண்டகாலத் திட்டம்.

இலங்கையில் தமிழன் படும் அவலம் யாவரும் அறிந்தது. இது சரித்திரத்தில் அழிக்க முடியாத இடம் பிடித்து விட்டது. இதன் பின்னணியில் ஆரியப் பேய்களின் நீண்டகாலத் திட்டம் உள்ளது.

கொல்லப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள்.
தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களவர்களால் கொல்லப் படுவதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஆரிய அரசு மேற்கொள்வதில்லை. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது.

தமிழர் சம்மதமின்றித் தாரை வார்க்கப்பட்ட கச்ச தீவு
தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்ச தீவை ஆரிய அரசு தமிழர் சம்மதமின்றி சிங்களவனுக்கு தாரை வார்த்தது. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது.

தண்ணி தராத இந்தியா
தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணியின்றித் தற்கொலை செய்தபோது, தண்ணீர்ப் பங்கீட்டை உச்ச நீதி மன்றத் தீர்பின்படி நிறைவேற்றாமல் வேடிக்கை பாரத்தது ஆரிய அரசு. ஆரியன் ஆள்பவன் தமிழன் ஆளப்பட வேண்டியவன் என்ற திமிரான எண்ணம் இதன் பின் உள்ளது
இப்படிப்பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நிலையை அதாவது தமது சுயநிர்ணய உரிமை இல்லா நிலையை தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணர்ந்து ஒரு சுயநிர்ணய உரிமைப் போரைத் தொடக்கும் போது அவர்களுக்கு ஈழத் தமிழர்கள் சுய நிர்ணய உரிமைப் போர் தொடங்கி பட்ட இன்னல்கள் முதலில் மனதில் தோன்றி அந்த எண்ணத்தை அடியோடு மறக்க வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டத்துடன் ஈழத்தமிழர்களுக்கு இந்த அடி அடிக்கிறார்கள் ஆரிய சிங்களக் கூட்டமைப்பினர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...