Wednesday 11 March 2009

என்ன செய்வாயடா சிவசங்கர மேனா?



பாடுங்கள் ஒரு விசுவமடுப் பரணி
கேட்கட்டும் புலிவீரத்தைத் தரணி
சென்றது பத்துப் பேரோடு ஓரணி
நெஞ்சில் கொண்டது ஈழக் கனி

இத்தாலிச் சனியாள் கொடுத்தாள் பணம்
பாக்கிஸ்த்தானில் வாங்கியது ஆயுத பலம்
எக்காளமிட்டு நின்றது கொடுஞ் சிங்களம்
அழிவின் விளிம்பில் நிற்கிறது நம்மினம்

பல தூரம் துணிவோடு கடந்தது புலியினம்
கைப்பறிறக் கொண்டது எதிரியின் பெரும்பலம்
சிறார்களைச் சிதறடித்த எறிகணைத் தளம்
நம்பூமியை தினமாக்கியது கொலைக்களம்

சிதறித் தலை தெறித்தோடியது பேயினம்
இந்தியா கொடுத்த பயிற்ச்சிதான் உதவுமோ
புலிவீரன் துணிவின் முன் நிலைத்திடுமோ
எதிரியின் ஆயுதத்தால் எதிரிகளைச் சரித்தனர்

என்ன செய்வாயடா சிவசங்கர மேனா
இன்னும் எத்தனை உண்டென்றறிவாயோடா
அனுப்படா இன்னும் ஆயுதங்கள் பல
அனுப்படா மருந்தும் மருத்துவர்களும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...