Wednesday 25 February 2009

இலங்கைமீது இனப்படுகொலைக் குற்றம் சுமத்தாதையிட்டு ஏளனம் செய்யும் ஆபிரிக்க ஒன்றியம்.

தமிழ் மக்களை இந்திய சீன பாக்கிஸ்தானிய உதவிகளுடன் இனப்படு கொலை செய்து வரும் இலங்கைமீது இனப்படுகொலைக் குற்றம் சுமத்தாதையிட்டு ஆபிரிக்க ஒன்றியம் ஏளனம் செய்துள்ளது. இப்படியான மோசமான இனப்படுகொலை ஆபிரிக்க நாடொன்றில் நடக்குமானால் மேற்கு நாடுகள் இதில் முழு மூச்சாகத் தலையிட்டிருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை தென் ஆபிரிக்காவிற்கு வரவிருக்கும் ஐநா அதிபரிடம் இலங்கை நிலமை தொடர்பாக தென் ஆபிரிக்க அதிபர் Kgalema Motlanthe எடுத்துரைக்கவுள்ளார். இது தென் ஆபிரிக்காவில் வாழும் தமிழர்களின் மன உணர்வை கருத்தில் கொண்டே தென் ஆபிரிக்க அதிபர் இதைச் செய்யவுள்ளார்.

2 comments:

Anonymous said...

வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை இனப்படுகொலையென வரையறுக்க முடியாது. எல்ரிரிஈ யும் தமிழ் மக்களை கொல்கின்றனர் காயப்படுத்துகின்றனர். அதற்கு ஆதாரபூர்வமான ஆவணங்கள் உண்டு’ என சாரு லட்டா ஹொக் பெப்ரவரி 24 (நேற்று) லண்டனில் இடம்பெற்ற பொது விவாதம் ஒன்றின் போது தெரிவித்தார். Sri Lanka - a hollow victory? என்ற தலைப்பில் சுயாதீன ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன்’ ஏற்பாடு செய்திருந்த பொது உரையாடலின் போதே சாரு லட்டா ஹொக் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...