Wednesday 11 February 2009

இருந்தும் கொன்றாய் இறந்தும் கொல்கிறாய்

நீ முத்தமிட்ட உதடுகள்
தமிழ்க் குழந்தைகளின்
உயிர்களைக் குடிக்கின்றன

நீ அணைத்த உடல்
தமிழன் உதிரத்தில்
குளித்து மகிழ்கின்றது

நினைத் தழுவிய கைகள்
எம் ஈழ மாதாவின்
கழுத்தை நெரிக்கின்றன.

நீ இணைந்த கால்கள்
தமிழன் மானத்தை
எட்டி உதைக்கின்றன

ஐயோ ராஜீவ் காந்தியே நீ
இருந்தும் தமிழனைக் கொன்றாய்
இறந்தும் தமிழனைக் கொல்கிறாய்

2 comments:

Anonymous said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

Migavum mattagaramaana sinthanai !

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...