Friday 16 January 2009

உயிர் நீரில் வளரும் கொடி


ஈழமெனும் நாட்டினிலே
பேரினவாதப் போரினிலே
அழியும் தமிழினமே

மாவீரர்களே நீங்கள்
மாண்டது யாருக்காக
மானத்தோடு நாம் வாழ
எங்கள் உரிமைக்காக

தண்ணீரில் வளரும் கொடி
தரணியில் உண்டு
உயிர் நீரில் வளரும் கொடி
ஈழத்தில் உண்டு

பலநாடு தேடியோடும்
தமிழர் உண்டு - ஒரு
தனிநாடு வேண்டி
தியாகம் செய்யும்
தீரர் உண்டு

ரோகத்தில் சாயும் உடல்கள்
லோகத்தில் உண்டு – பெரும்
துரோகத்தால் வாடும் இனம்
ஈழத்தில் உண்டு

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...