Friday 16 January 2009

நீ என்ன இலங்கை இராணுவமா


உன் கண்ணடிகள் தாக்குகின்றன
எனைக் கண்ணி வெடிகளாய்
உன் வாயசைவுகள் வருகின்றன
எனை நோக்கி எறிகணைகளாய்
நீ என்ன இலங்கை இராணுவமா
நான் என்ன அப்பாவித் தமிழனா.

உன் வருகைகளோ கொடும்
விமானக்குண்டுகளாய் வெடிக்கின்றன
அசைவுகளோ ஹெலி போல்கிலி தரும்.
நீ என்ன இலங்கை விமானப்படையா
நான் என்ன தமிழ்க் குழந்தைகளா

காதல் கடலில் தத்தளிக்கின்றேன் நான்
நிலை தெரியாமல் துடிக்கின்றேன்
சடுமென வருகின்றாய் எனை நோக்கி
உன் உதாசீனத்தால்மூழ்கடிக்கிறாய் என்னை
நீ என்ன இலங்கைக் கடற்படையா
நான் என்ன இந்திய மீனவனா.

காம யுத்தத்தில் எதிரியுடன் களம்பல
கண்ட விடுதலைப் போராளி நான்
எனைக் கணைகளால் தாக்கும்
மன்மதனுக்குஆயுத உதவி செய்கின்றாயே
நீ என்ன பாக்கிஸ்தானா சீனாவா
நான் என்ன தமிழீழ விடுதலைப் புலியா.

உன் வருகைக்கு காத்திருப்பேன்
இருபத்தி நான்கு மணி நேரமும்
என் கண்ணில் மண் தூவி
மாயமாய் வந்துமாயமாய் மறைகிறாயே
மாதேநீ என்ன விடுதலைப் புலி விமானமா
நான் என்ன இந்திய ரடாரா

உனக்கு நான் எதிரியுமில்லை
இடர் ஏதும் செய்தது மில்லை
எனை யேன் வெறுக்கிறாய்
எனை ஏன் ஒதுக்குகிறாய்
நீ என்ன ஐக்கிய அமெரிக்கவா
நான் என்ன விடுதலை இயக்கமா

என் துயர் பற்றி பாரா முகம் ஏன்
உதாசீனம் தான் உனக்கு ஏன்
என் எதிரிதான் உன் உறவா
உதவத்தான் அவன் வருவானா
நீ என்ன இந்திய மத்திய அரசா
நான் என்ன இலங்கைத்தமிழனா.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...