Friday 2 January 2009

நவரசக் காதல்


உனைக் கண்டதும் என் மனதில்
வந்தது பெரும் ஆச்சரியம்.

தொடர்ந்தது என்னுடலெங்கும்
கடும் நோயாகக் காதல்

என் விழுங்கும் பார்வை
கொடுத்தது உனக்கு கோபம்.

விளைவு என் மனமெங்கும்
தாங்க வொணாச் சோகம்.

உணர்ந்து கொண்டாய் அதை நீ
மாறிக் கொண்டாய் சாந்தமாய்.

என் இரத்தத்தில் உறைந்திருந்தது
உருப்பெற்றது பெரு வீரமாக.

அங்கு மறைந்தது என்
மனதிலிருந்து பயம்.

நீயும் ஒத்திசைத்தாய் என்னோடு
வந்தது என் மேல் கருணை.

இருவர் மனதும் இணைந்தது
முடிந்தது திருமணத்தில் ஆனந்தமாய்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...