Thursday 25 December 2008

இரண்டாம் தெரிவு


மனம் மகிழும் போது அணைக்க உன் உடல்
மனம் துவளும் போது சாய்ந்திட உன் தோள்
மனம் அழுதிடும் போது துடைக்க உன் கரம்
மனம் தூங்கும் போது எழுப்பிட உன் முத்தம்.

என் மனதுக்குத்தான்
நீ முக்கியம்
உன் அன்புதான்
என் தேவை

அன்புடையாள் அருகிருந்தால்
எல்லாம் என்னோடிருக்கும்.

Eye Witness of our Love



Wednesday 24 December 2008

இதுவும்.....


என்னுள் உருவாகி
உன்னுள் புகுந்து
மசக்கை போல் இடர்தந்து
அவ்வப்போது உதைத்து
கனிவோடு காத்திருப்பதால்
நம் காதலும் நம் பிள்ளைதானே!

மீண்டும் வருக.


என் அந்தப்புரத்தில் இருக்க வேண்டியவள்
ஏன் அத்தப்புறத்தில் இருக்கின்றாள்
என் சொந்தக் கரத்தில் இணைய வேண்டியவள்
ஏன் தொலை நகரத்தில் இருக்கின்றாள்
நடந்தவை ஏன் கடந்தவையாகக் கூடாது
பிரித்தது என்ன பிரிந்தது ஏன்

Monday 22 December 2008

நீயில்லாமலும் முடியும்.


It is up to us


Sound of music on the air
Festive mood is everywhere
We enjoy the birth of a son
Elation of us all has a reason
Relations of us suffer there
In the little corner of Asia


Bodies buried without prayer
Bodies buried without tears
Bodies buried without coffins
Bodies buried without respect.

Lack of food, lack of shelter
Lack of clothes lack of hope
Abundance of sufferings
Affluence of distress
Back to the past in many ways

They too need peace
They too need kindness
They too need love
They too need freedom
These all up to us all.

Sunday 21 December 2008

உடைத்தாள் - உடைத்தாள்

எம் உறவு ஒர் இனிய கீர்த்தனம்.


உரசல்களும் வருடல்களும்
பல்லவியாகத் தொடங்கும்
நெருக்கமும் அணைப்பும்
அநுபல்லவியாகத் தொடரும்
வளையொலியும் கட்டிலொலியும்
பக்க வாத்தியங்களாய் இணையும்
முத்தங்களும் தழுவல்களும்
சரணங்களாய் வந்து சேரும்
சிணுங்கல்கள் நிரவல்களாகும்
முனகல்கள் ஆலாபனைகளாகும்
தாரஸ்தாயி சஞ்சாரம்
தரும் ஒரு தனி சுகம்
மேல்ஸ்தாயி சஞ்சாரம்
கொண்டு செல்லும் சுவர்க்கம்.
மொத்தத்தில் நம் உறவு
தனியாவர்த்தனம் இல்லாத
கர்நாடக கீர்த்தனம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...