Monday 15 December 2008
பகவான் பார்த்துக்குவார்.
காலையில் சுப்ரபாதம் பாடுவேள்
கேட்க நன்னாத்தான் இருக்கும்
சந்தியா வந்தனம் பண்ணுவேள்
சாந்திரப்படி நன்னதுங்கோ
காயத்திரி ஜெபம் சொல்லுவேள்
பாவத்தினை தீர்த்திடுமுங்காணும்
கணபதி ஹோமம் செய்வேள்
விக்னங்கள் போயிடும் பாரும்
லக்ஷ்மி பூஜை பண்ணுவேள்
சகல செளபாக்கியம் கிட்டும்
குபேர பூசை செய்வேள்
சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்
அகத்திக் கீரை சாப்பிடுவேள்
ஷேமமாய் இருப்பீள் அம்பி
துளசித் தீர்த்தம் பருகிடுவீள்
குடலுக்கு நல்லது கேளும்
ஈழத் தமிழனுக்கு அள்ளி வைக்கிறேளே
நீங்க நன்னா இருப்பேளா?
நாசமாய்த்தான் போயிடுவீர்!!
வயிறெரிஞ்சு சொல்றேன்னா
பகவான் பார்த்துக்குவார்!
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment