Saturday 13 December 2008

ஒரு இனம் அழியுது

ராகம்: அகோரம் ---------------------------------- தாளம்: திருகுதாளம்
........
பல்லவி
இனம் அழியுதே தமிழா உன்தன் இனம் அழியுதே – இலங்கை
என்றொரு கொடிய தீவுதன்னிலே இனம் அழியுதே.......
........
அநு பல்லவி
இந்தியா என்றொரு நாடு அருகில் இருக்குதே
நம்ப வைத்து நல்லாய் உன் கழுத்தறுக்குதே
........
சரணம்.
......
கோபாலபுரத்துத் தாத்தாதன் கொள்கை விளங்கவிலையே
கோபாலசாமியின் மகன்தன் கோபத்தால் பயனேதுமிலையே
போயஜஸ் தோட்டத்து மாமியிடம் கருணையேதுமிலையே
மத்திய அரசிடம் கொள்கை மாற்றம் ஏதுமில்லையே ( இனம்....)
.........
சில பார்ப்பனர் தம் நாதாரித் தனத்துக்கொர் அளவில்லையே
பாதுகாப்பு ஆலோசகர்தம் கேப்மாரித்தனம் குறையவில்லையே
வெளியுறவுச் செயலர்தம் மொள்ள மாரித்தனம் மறையவில்லையே – சிலதமிழ் உறவுகள் தான் இன்னும் திருந்தின பாடில்லையே....... ( இனம்....)
.........
துணிந்திடு துயர்விடு களம் புகு களையெடு
கொதித்திடு எழுந்திடு கொடியோரை அழித்திடு
இணைந்திடு இனத்தோடு தோள் கொடு இடர் எடு
புயலெனப் புறப்படு புலியெனச் செயற்படு....... ( இனம்....)

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...